ஞாயிறு, 5 டிசம்பர், 2010

டேவிட் மில்லிபேண் ‐ பேர்னாட் குஷ்னர் ஆகியோர் வன்னி மோதல்களை நிறுத்தும் நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டு இலங்கை சென்றுள்ளனர் ‐ விக்கிலீக்ஸ்!

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் மில்லிபேண் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னர் ஆகியோர் வன்னி மோதல்களை நிறுத்தும் நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை சென்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள 3 ஆயிரத்து 325 செய்திகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றிஷிய புட்டனஸ் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அனுப்பியுள்ள இரகசிய தகவல்களின் போர் குற்றங்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேக்கா மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சம்பந்தப்பட்டு;ளளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் இந்த இரகசிய தகவல்களுக்கு அமைய அமெரிக்க தூதுவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்; தலைவர் இரா.சம்பந்தன், சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியின் தேர்தல் பிரசார முகாமையாளர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்க தூதரகம் இலங்கை தொடர்பில் அனுப்பியுள்ள 3 ஆயிரத்து 325 தகவல்களின் 112 தகவல்கள் மிகவும் இரகசியமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல