செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இலங்கைப் பெண் வேலைப்பலு அதிகரிப்பால் சவுதியில் சுகவீனம்

சவுதி அரேபியாவில் மத்திய பிரதேசத்தில் வேலை கனத்தினால் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கைப் பெண்னொருவரை இலங்கைத் தூதுவராலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வேலைக்காக இலங்கையில் இருந்து சவுதிக்குச் சென்ற 43 வயதான பாத்திமா ஹஷீரா என்ற பெண், சவுதியில் விலங்குகள் பராமரிப்பு நிலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார். அத்தோடு இவர் விலங்கு பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் வீட்டிலும் பணிபுரிந்துள்ளார். இவர் தங்குவதற்கு ஒரு குடிசை வீடே வழங்கப்பட்டுள்ளது.

வேலைப்பலு அதிகரிப்பின் காரணமாக சுகவீனமுற்ற ஹஷீரா, இருமும் போது உதிரம் வெளியேறியுள்ளது. இதனை அடுத்து கடந்த 30 நாட்களாக ஹைல் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அராப் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல