புதன், 5 டிசம்பர், 2012

வெலிக்கந்தை முகாமில் பிரபாகரனின் இன்னொரு மகன்! (பாகம் 1)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான மர்லன் என்பவர்தான் இலங்கையில் மிக உயரமான மனிதனாக இருக்க வேண்டும். இவரது உயரம் ஏழு அடி, மூன்று அங்குலம். வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.

இவரது உயரத்தைக் காட்டிலும் மிக அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அப்பா என்று பாசத்தோடு சொல்லிக் கொள்கின்றார். கடவுளை காட்டிலும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்.

திவயின பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன்னர் இப்புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று இருந்தனர். இவர்களை நோக்கி மிகவும் உயரமான நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்நபர் பொய்க் கால்கள் அணிந்து இருக்கின்றாரோ? என்று இவர்களுக்கு சந்தேகமே வந்தது. இந்நபர் அருகில் வந்தமையுடன் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இவரது உயரத்தில் எந்தவொரு நபரையும் இந்நாட்டில் இவர்கள் பார்த்து இருக்கவில்லை. புனர்வாழ்வு நிலையத்தில் நாட்டின் உயரமான நபர் இருப்பார் என்று இவர்கள் எதிர்பார்த்து இருக்கவே இல்லை.



மர்லன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து காணப்பட்டார். மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கரப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கிறிக்கெற் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் இவ்விளையாட்டுக்களை இரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் மைதானத்தில் இல்லை. இது பத்திரிகையாளர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் இவருடன் பேசத் தொடங்கினார்கள். இவரும் மிக பொறுமையாக பதில்கள் கொடுத்தார்.

கேள்வி: உங்கள் உயரம் என்ன?

பதில்: ஏழு அடியும் மூன்று அங்குலமும்.

கேள்வி: இளைஞர்கள் பலரும் விளையாடிக் கொண்டிருக்கின்றமையை நாம் காண்கின்றோம். ஏன் நீங்கள் அங்கு செல்லவில்லை? உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லையா?

பதில்: எனக்கு விளையாட்டு என்றால் பிடிக்கும். நான் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தேன். எனக்கு பட் மின்ரன் விளையாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போது என்னால் எதுவும் விளையாட முடியாது. நான் என்னை களைப்படைய செய்யக் கூடாது என ஆலோசனை சொல்லப்பட்டு உள்ளேன். நான் களைப்படைகின்றபோது சுவாசிக்கின்றமைக்கு சங்கடப்படுகின்றேன். எனக்கு இதயத்தில் ஒரு கோளாறு. ஆகவேதான் என்னை நான் களைப்படைய செய்யக் கூடாது என கேட்கப்பட்டு உள்ளேன்.

கேள்வி: உங்களுக்கு இதயத்தில் பிரச்சினை என்பது எப்போது தெரியும்?

பதில்: இராணுவத்திடம் சரண் அடைந்த பிற்பாடுதான்.

கேள்வி: புலிகள் இயக்கத்தில் இருந்தபோது தெரியாதா?

பதில்: இல்லை.

கேள்வி: புலிகள் இயக்கத்தில் இருந்தபோது கடின வேலைகளை செய்து இருக்கவில்லையா?

பதில்: நான் கடினமான வேலைகளை செய்திருக்கின்றேன். சில கஷ்டங்களை எதிர்கொண்டு இருந்தேன்தான். ஆனால் பொருட்படுத்தி இருக்கவில்லை.

கேள்வி: ஈழத்தை அடைகின்றமைக்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருக்கின்றீர்கள் என்று சொல்லலாமா?

பதில்: நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பிரிவினைக்காகத்தான் போராடினோம்.

கேள்வி: சிங்களவர்களும், தமிழர்களும் மனிதர்கள்தானே? எல்லோர் உடலிலும் சிவப்பு இரத்தம்தானே ஓடுகின்றது? ஏன் நீங்கள் பிரிவினைக்காக போராடினீர்கள்?

பதில்: எனது தந்தையால் முன்னெடுக்கப்பட்ட பாதையை நான் பின்பற்றினேன்.

கேள்வி: யார் உங்கள் தந்தை?

பதில்: பிரபாகரன்.

கேள்வி: எப்படி பிரபாகரன் உங்களுக்கு தந்தை ஆனார்?

பதில்: அது ஒரு பெரிய கதை.

கேள்வி: அக்கதையை நீங்கள் சொல்கின்ற பட்சத்தில் நாங்கள் கேட்க தயார்?

பதில்: நாங்கள் புதுக்குடியிருப்பில் வசித்து வந்தோம். நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது மலேரியா காய்ச்சலால் அப்பா இறந்து போனார். அப்பா இறந்து சில மாதங்களிலேயே அம்மா மறுமணம் செய்து கொண்டு எங்களை கை விட்டுப் போனார். எனது அம்மம்மாவின் பராமரிப்பில் நான் இருந்தேன். அவர் ரொம்பவே வயதானவர். ஆனால் என்னை உணவூட்டி மிக நன்றாக வளர்த்தார். எனக்கு நான்கு வயதாக இருந்தபோது அம்மா என்னை விட்டுப் போய் விட்டார் என ஒரு முறை அம்மம்மா எனக்கு சொன்னார்.

அம்மம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பினார். எனது மாமாவால் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த பணத்தில்தான் இருவரும் வாழ்ந்து கொண்டிருந்தோம். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அம்மம்மா இறந்து போனார். .......



பேட்டி............................................................................................ தொடரும்.

வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 2

வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 3



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல