புதன், 5 டிசம்பர், 2012

இந்திய சினிமாப் பாணியில் பைஃனாஸ் நிறுவனம் திறந்து வன்னி மக்களை கொள்ளையடிக்கும் குழு !

இறுதிப்போரில் உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து, வீடு வாசல்களை இழந்த தமிழர்கள், தற்போது தான் மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்துள்ளார்கள். ஆனல் தற்கு முன்னதாகவே இவர்களை குறிவைத்துள்ளது ஒரு கும்பல். போர் முடிந்து 3 வருடங்களுக்குப் பின்னர், சிறுகச் சிறுக சேமித்து, தமது வாழ்வாதாரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களையும் ஆசை காட்டி மோசம் செய்கிறார்கள் சில தமிழர்கள் என்றால் பொறுத்துக்கொள்ள முடியுமா ?

இந்தியாவில் நடப்பதுபோல, சில பைஃனான்ஸ் கம்பெனிகளைத் திறந்து, அதில் காசுபோட்டால் பெருமளவு வட்டி வரும் எனக் கூறி மக்கள் பணத்தை முதலீடு செய்யவைத்து, பின்னர் அதனைச் சுருட்டிக்கொண்டு ஓடும் கும்பல் ஒன்று வன்னியில் இயங்கிவருகிறது. இவர்களை பொலிசார் ஒருபோதும் கைதுசெய்தது இல்லை. குறிப்பாக வன்னியில் உள்ள பின் தங்கிய கிராமங்களுக்குச் செல்லும் சில நபர்கள் , தங்களை காப்புறுதி நிறுவனங்களின் முகவர்கள் என்று கூறுகிறார்கள். பின்னர் சிறிய ஒரு அலுவலகத்துக்கு மக்களை அழைக்கும் இவர்கள், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யச் சொல்லி, பின்னர் இப் பணத்தோடு தலைமறைவாகி விடுகின்றனர்.

இது பல இடங்களில் தற்போது ஆரம்பமாகிவிட்டது. எனவே வெளிநாட்டில் உள்ள எம் மக்களே ! உங்கள் உறவுகள் ஊரில் இருந்தால் இது தொடர்பாக ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுறுத்துங்கள். காலத்தின் தேவைகருதி வன்னிமீடியா இணையம் இச் செய்தியை வெளியிடுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல