ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

என்றும் நாங்கள் சுமை ­தாங்­கி­களே!

1. வைக­றையில் கண் விழித்து

வாசலில் நீர் தெளித்து

காலைக் கடன் முடித்து

கரியால் பல் துலக்கி

கை கால் முகம் கழுவி

கட­வுளை வணங்கி

கைச் சீனியை நாவால் நக்கி

கசாயத் தேநீர் குடிக்க

உடற்ச் சோர்வு

ஓடி மறைந்து விடும்

2. கணவன் குழந்­தை­க­ளுக்கு

காலை உண­வ­ளித்து

எஞ்­சி­யதை உண்டு

இடுப்பில் படங்கு கட்டி

கம்பும் கூடையும் குழந்­தை­யுமாய்

மடு­வத்துக் கோடி

ஆயாவின் பாது­காப்பில்

அதை விட்டு விட்டு...

3. பள்­ளங்­களில் இறங்கி

மேடு­களில் ஏறி

ஓட்­டமும் நடை­யு­மாய் ஓடி

நிரை பிடித்து நின்று

முக வியர்­வையை

முந்­தா­னையால் துடைக்க

முறைப்பார் கங்­காணி

குரைப்பார் கணக்­கப்­பிள்ளை

சங்­குக்கு சற்று பிந்­தி­யதால்....

4. ஓடு ஓடு ஆளோடு ஓடு..

என்று கடு­க­டுப்பார் கங்­காணி

இறாத்தல் இல்­லாட்டி

பேர் கிடைக்­காது என்று

எச்­ச­ரிப்பார் கணக்கன் கைக்­கம்பைக் காட்டி

கூடையை தலை சுமக்க

வேத­னையை மனம் சுமக்கும்

அடுத்­தவர் வேத­னையை

அறியா அற்ப ெஜன்­மங்கள்

என்று நம் மனம் சபிக்கும்

5. மனி­தர்கள் மட்­டுமா...?

மாறி மாறி வரும் பருவ

கால நிலையும் எம்மை

பாடாய் படுத்தும்

சுட்­டெ­ரிக்கும் சூரியன்

சுழன்­ற­டிக்கும் புயல் காற்று

கொட்டும் மழை இடி மின்னல்

நடுங்க வைக்கும் குளிர்

நாளாந்தம் துன்­பு­றுத்தும்

6. அட்டைக் கடியும்

அரிப்­பெ­டுக்கும் எரிப்­பூச்­சியும்

கொட்டும் தேனீக்­களும்

கொடிய விஷப்­பாம்­பு­களும்

கடிக்கும் கட்­டெ­றும்­பு­களும்

அன்­றாடம் எங்­களை

ஆட்டிப் படைக்கும்

தோட்ட அதி­கா­ரி­களைப் போல....

7. கூனிக் குறுகி கொழுந்து கூடை சுமந்து

காலை முதல் மாலை வரை

கடு­மையாய் ஓடி உழைத்து

வியர்வை சிந்தி வேலை செய்­தாலும்

வேலை வாங்கும் நிர்­வாகம்

மனி­த­ரா­கவே எம்மை மதிப்­ப­தில்லை

கடு­க­ளவும் கரு­ணையும் காட்­டு­வ­தில்லை

அவர்­க­ளுக்கு வேண்­டி­ய­தெல்லாம்

வேலை வேலை வேலை.... யொன்­றேதான்.

8. வேலை முடித்து விறகுக் கட்டுச் சுமை­யோடு

வீட்­டுக்குப் போனாலும் விடி­வில்லை எமக்கு

ஈர விறகு எரி­யாது அடம்­பி­டிக்கும்

கரியும் புகையும் கண்­களை குள­மாக்கும்

குனிந்து குனிந்து அடுப்­பூ­தியே

இடுப்பும் கடு­க­டுக்கும்

உடம்பும் சோர்ந்து விடும்

உள்­ளமும் சலிப்­ப­டையும்.

9. குழந்­தை­களின் நச்­ச­ரிப்பு

குடி­காரக் கண­வனின்

கோரத் தாண்­டவம்

வீட்டின் வறுமை எங்­களை

விரட்டும் ஓட.... ஓட.

மத்­தளம் போல் அடி­பட்டு

குடும்­பத்தைக் கட்டிச் சுமக்கும்

சுமை­தாங்­கி­களாய் நிலை கொண்டோம்.

10. நாட்டின் பொரு­ளா­தார உயர்­வுக்கு

நாங்கள் ஓடி உழைத்­தாலும் எம்

வீட்டு பொரு­ளா­தாரம் என்றும்

வறுமை கோட்­டுக்­குள்­ளேயே

வீழ்ந்து கிடக்கும் வளர்ச்­சி­யின்றி

விலை­வாசி ஏற்­றமும்

நாட் கூலியும் எங்­களை

நாயாய் துரத்தும் வேலைக்கு

ஓட்டு வாங்­கியோர் ஒய்­யா­ரமாய்

வாழ்­வார்கள் உயர் மாடி­யிலே....

11. சங்­கங்கள் இருந்­தென்ன

சந்தாப் பணம் கொடுத்­தென்ன

ஓட்டு போட்­டென்ன

நாட்டில் அரசும்

அமைச்­சர்­களும் இருந்­தென்ன

கூடிய ஊதியம் கிடைத்­தென்ன

கூட்டு ஒப்­பந்­தங்கள் செய்­தென்ன

எங்கள் வலியும் சுமையும் என்றும்

இம்­மியும் குறைந்த பாடில்லை.

12. பெய­ருக்கும் புக­ழுக்கும் மட்­டுமே

பெண்கள் அமைப்­புக்கள்

கண்கள் இருந்தும் எம்மை காணா­தவர்

காதுகள் இருந்தும் எம்­குரல் கேளா­தவர்

எங்களுக்கும் சமூகத்துக்கும்

இருக்கும் எரியும் பிரச்சினைகள்

ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரமுண்டு.

அன்றும் .... இன்றும் ..... என்றும்

நாங்கள் சுமை தாங்கிகளே...... .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல