ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

‘வாயில்லா வனத்துப் பூச்சிகள்’


பர­ம­சிவன்- - பார்­வ­தியின் தம்­பந்­திகள். மரு­மகன் வள்­ளியை கைப்­பி­டித்த படியால் தமிழ்க் கட­வு­ளா­கிய முரு­கனை வழி­படும் வழித்­தோன்­றல்கள், இரா­வ­ணேஸ்­வ­ரனை நினை­வுப்­படுத்தும் காடு­களும், மலை­களும், அரு­வி­க­ளும்­ கொண்ட பிர­தே­ச­மா­கையால், இரா­மா­யண கால ஆதி­வா­சிகள் அவர்கள்.

தென்­னிந்­தி­யர்­களின் முகத்­தோற்றம், உட­ல­மைப்பு-, தேக நிறம் கொண்ட இந்­நாட்டின் பூர்­வீகக் குடிகள். இம்­மண்ணின் சொந்­தக்­கா­ரர்கள். ஊவா மாகா­ணத்தின் தம்­பா­னை­யிலும் கதிர்­கா­மத்தை அண்­மித்த வனப்­ப­கு­தி­க­ளிலும் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் அவர்­களில் ஒரு­வ­னாக-



கோரைப்­புல்லால் வேயப்­பட்டு மண்­கட்­டி­க­ளையும் மூங்கில் கழி­க­ளையும் கொண்டு எழுப்­பப்­பட்ட சுவர்­க­ளுமாய் அமைந்த தன்­னு­டைய குடி­சைக்­குச்­ சற்றுத் தள்ளி கடம்ப மரத்­த­டியில் அம்­மிக்­கல்­லை­யொத்த ஒரு கல்லின் மீது அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்­டி­ருந்தான் கதிரன். மேற்கே தொலை­தூர மலை­மு­கட்டில் மறைந்து கொண்­டி­ருந்தான் கதி­ரவன். கருங்­காலி மரக்­கி­ளை­களில் தொங்­கி­ய­ப­டியே தூங்கிக் கொண்­டி­ருந்து விழித்து காத­தூ­ரத்­திற்­கப்பால் பழுத்துக் குலுங்கும் கனி­களை மோப்­ப­மிட்டு ராட்­சத வேகத்தில் பறந்து செல்லும் வெள­வால்­களும் கூடு­க­ளையும் மரப்­பொந்­து­க­ளையும் நாடி ஓய்­வெ­டுத்து அதி­காலை துயி­லெ­ழும்ப இறக்கை விரிக்கும் பற­வை­களும் வேக­மாக அன்­றைய பொழுதை நகர்த்திக் கொண்­டி­ருந்­தன.

வேட்­டை­யா­டு­தலை தொழி­லா­ளாகக் கொண்­டி­ருந்த சமூகம் சேனைப்­பயிர் செய்­கை­யாலும் வயிறு வளர்க்­கி­றது. சமூகப் பாரம்­ப­ரி­யத்­தையும் பழை­மை­யையும் பாது­காக்க முயற்­சிக்கும் வய­தா­ன­வர்­களும் இரு­ளை­விட்டு வெளி­யே­ற­வேண்­டு­மென நாக­ரீ­கத்தை நாடும் இளை­ஞர்­க­ளுமாய் பனிப்போர் மிக மிக மெள­ன­மாக துளிர்­விடத் தொடங்­கி­யுள்ள இக்­கா­ன­கத்தின் ஒரு கோடியில் வாழ்­கின்ற பழ­மை­வாதி இந்த கதிரன். உடும்போ, முயலோ,முள்ளம் பன்­றியோ, காட்­டுக்­கோ­ழியோ ஏதா­வது ஒரு வேட்­டை­யு­ண­வோடும், காய்­க­னிகள், கிழங்­கு­க­ளுமாய் தின­சரி மாலை வேளை குடி­சைக்­குத்­தி­ரும்பும் அவன் இன்று வெறுங்­கை­யுடன் வந்தான். ஆனால் குடி­லுக்குள் நுழை­ய­வில்லை. கடம்­ப­ம­ரத்­த­டியில் தரித்­து­விட்டான்.

வந்­ததும் வரா­த­து­மாக தன்­னு­டைய ஒரே மகளை அனைத்து உச்சி மோந்து பாட்டு சொல்லிக் கொடுப்­பவன் அந்த பச்­சிளம் குழந்­தையைப் பற்றி நினைக்­க­வே­யில்லை. கடம்ப மரத்­த­டியில் தஞ்­ச­ம­டைந்து விட்டான். அடுப்பில் கம்­பஞ்­சோற்றைக் கொதிக்க வைத்து அகப்­பையால் கிண்டிக் கொண்­டி­ருந்த மனைவி வெளியே வந்து கண­வனின் இந்த மாற்­றத்தைக் கண்டு புரி­யா­த­வளாய் அவ­னது பார்­வையில் படும்­ப­டி­யாக அவன் முன்னால் இங்கும் அங்­கு­மாக நடந்து பார்த்தாள். அவ­னது சிந்­த­னையைக் குலைக்­காமல் நட­மா­டிய அவளை அவன் கண்­டு­கொள்­ளவில்லை. வானத்­தையே பார்த்துக் கொண்­டி­ருந்தான்.

தூக்­கி­ய­ணைத்­துக் ­கொஞ்சிக் குலாவி பாட்டு சொல்லிக் கொடுக்கும் தகப்­பனின் மாற்றம் அந்த சின்னஞ் சிறு குழந்­தைக்கும் தெரிந்­தது. மான்­தோலில் படுத்துப் புரண்டுக் கொண்டே அப்பன் சொல்லிக் கொடுத்த வள்ளி பயிர் காக்க பற­வை­க­ளோட்­டிய பாடல்­களை மனப்­பா­டமாக ஒப்­பு­வித்துக் கொண்­டி­ருந்தாள்.

கதி­ரவன் போய் காரிருள் கௌ­வி­யது. அண்­ட­வெ­ளியை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டன. இனந்­தெ­ரி­யாத புதிராய் கற்­ப­னை­யு­லகில் மூழ்கிக் கிடந்தான் கதிரன். பாடிக் கொண்­டே­யி­ருந்த குழந்தை மான்தோல் விரிப்பின் மீதே அயர்ந்து தூங்­கி­விட்­டது. மனம் பொறுக்­க­வில்லை தாய்­மைக்கு. தந்தைப் பாசத்­திற்­காக ஏங்­கிய பச்­சிளம் பாலகன் சாப்­பி­டா­ம­லேயே உறங்­கி­விட்­டது கண்டு மனம் புளுங்­கினாள் தாய் குவினி. சற்று நேரம் கழித்து எழுப்பி உணவு கொடுக்கும் எண்­ணத்­தோடு பழந்­து­ணி­யொன்றை கொண்டு வந்து குழந்­தையைப் போர்த்­தி­விட்டாள். அடுப்பில் கொதித்த கம்பஞ் சோற்றை இறக்கி வைத்­து­விட்டு முயல் இறைச்சிக் கறியை சூடாக்கி அவ­னது இராப் போச­னத்தைத் தயார்ப்­ப­டுத்­தி­விட்டுக் கூப்­பிட்டாள். வழ­மைபோல் இல்­லாமல் தரை­யையே பார்த்­துக்­கொண்டு உள்ளே வந்­தவன் கைய­லம்­பா­ம­லேயே தட்­டி­லி­ருந்த உணவை நொடிப் பொழுதில் விழுங்கி விட்டு மீண்டும் கடம்ப மரத்­த­டியில் தஞ்­ச­ம­டைந்தான்.

வேட்­டைக்­கா­கவே வளர்க்­கப்­படும் நாய்கள் குரைத்­தன. ஏதோ ஊர்­வன நடப்­பன- பறப்­ப­னவைக் கண்­டு­பி­டித்­தது போல் அவை குரைத்­தது. முயல் இறைச்சிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்­த­ப­டியால். வேட்­டைக்­காக குரைக்­க­வில்­லை­யென்­பது அவ­ன­றி­யாத விட­ய­மில்லை. அவை பசிக்­காக குரைப்­பது தெரிந்தும் அவன் சட்டை செய்­ய­வில்லை இருட்­டுக்­குள்­ளேயே கல்­லையோ, தடி­யையோ தடவி எடுத்து வீசி எறிந்தான்.... ‘‘அடச்சீ....’’ என கோபத்­துடன் எகி­றினான். அவை குரைத்துக் கொண்டே ஓடி நின்­றன. மீண்டும் அவன் உட்­கார்ந்­தி­ருக்­கின்ற பக்­க­மாக பார்த்து குரைத்­தன. அவனோ அண்­ட­வெ­ளியில் பிர­கா­சித்துக் கொண்­டி­ருக்கும் மின் மினிப் பூச்­சி­களை எண்ணிக் கொண்­டி­ருப்­ப­வ­னாக இருந்தான்.

குழந்­தைக்­காக ஒரு பகுதி உணவை ஒதுக்கி வைத்­து­விட்டு கம்பஞ் சோறும் முய­லி­றைச்சிக் குழம்பும் சாப்­பிட்டாள் குவினி. வெற்­றிலை- பாக்குத் தட்டைக் கையி­லெ­டுத்­த­வாறு கடம்ப மரத்­த­டியில் வந்து கண­வனின் பக்­கத்தில் தரையில் அமர்ந்தாள்.

கண­வனின் இந்த மெள­ன­மான செயற்­பாடு புரி­யாத புதி­ராக தோன்­றி­யது. மெது­வாக அவ­னது முதுகைத் தட­வினாள். வழு­வ­ழு­வென பரி­சிக்கும் அவ­னு­டம்பு கல்­லாக கணத்­தது. தலையைத் தடவி பரட்டைத் தலையின் மயிர்­களைக் கோதி விட்டாள். எவ்­வித சல­ன­மு­மின்றி கல்லாய் சமைந்­த­வனாய் காட்சி தந்தான் கதிரன். அடி­பா­தத்­தி­லி­ருந்து முழங்கால் வரையும் தடவிக் கொடுத்தாள். அவன் மின் மினிப் பூச்­சி­க­ளுடன் மான­சீ­க­மாக வாழ்ந்து கொண்­டி­ருந்தான்.

‘அப்­ப­டி­யென்ன மூழ்கிப் போச்சு?’ அன்­பாக அமை­தி­யாக குவினி கேட்டாள். அவ­னிடம் பதி­லில்லை. குவி­னிக்கு ஒரு மூத்த சகோ­த­ரியும் ஒரு தங்­கையும் இருக்­கி­றார்கள். மூத்­த­வளை வன்­னியன் மண­மு­டித்­தி­ருக்­கின்றான். அக்­காவைக் கைப்­பி­டித்த ஒரு சில மாதங்­க­ளி­லேயே அவன் குவி­னியின் பின்னால் வளைய வரவும், பேச முயற்­சிப்­பதும், சிரித்துப் பழ­கு­வ­தா­கவும் தோன்­றி­யது. இன்­னொரு குடி­சையை அமைத்துக் கொண்டு தன்­னையும் இழுத்துக் கொண்டு போய் விடு­வானோ என்ற சந்­தே­கத்­துடன் சற்றே ஒதுங்­கியே இருக்க முயற்­சித்துக் கொண்டாள் குவினி. கூடப் பிறந்த சகோ­த­ரி­யாக இருந்­தாலும் சரி, வேறொ­ருத்­தி­யாக இருந்­தாலும் சரி தனது கண­வ­னாக வாய்க்கப் போகி­றவன் தனக்கு மட்­டுமே உரித்­தா­ன­வ­னென நினைப்­பவள் அவள். தனது வாழ்க்­கையில் இன்­னொ­ருத்தி பங்­கா­ளி­யா­வதை அவள் விரும்­பா­தவள். தனக்­கென தனிக்­கு­டிசை அதற்குள் கணவன்- பிள்ளை குட்­டிகள். இதுவே அவ­ளது வாழ்க்கைக் கன­வாகக் கொண்­டி­ருந்தாள்.

கூட்­ட­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்கும் அச் சமூ­கத்தில் சுறு­சு­றுப்­பா­கவும் திட­காத்­தி­ர­மா­கவும் இருந்தான் கதிரன். முதுகைத் தொடும் அடர்ந்த தலை­முடி. காத­ருகே இருந்து அடுத்த காது­வரை தாடையை மறைக்கும் ஆஞ்­ச­நேய தாடி. நிறம் கறுப்­பாக! வெற்­றி­லையைக் குதப்பிக் கொண்­டி­ருக்கும் செவ்வாய். இடது தோளில் கைக்­கோ­டரி. குனிந்­தாலும் நிமிர்ந்­தாலும் நடந்­தாலும் ஓடி­னாலும் அது விழாது. அவ்­வ­ளவு பயிற்சி அந்த கோட­ரிக்கு, அகன்ற மார்பு. தொந்தி விழாத ஒட்­டிய வயிறு. புஜ­ப­ராக்­கி­ர­ம­சா­லி­யா­கவே தோன்­றினான் கதிரன். அவனே தனக்கு கண­வனாக வாய்க்க வேண்­டு­மென வள்­ளியை முரு­கனை வேங்கை மரத்­த­டியில் நின்று வேண்டிக் கொள்வாள். அவள் வேண்­டுதல் செய்­யும்­வே­ளையில் தூரத்து வனத்தில் யானையின் பின்­னாளில் சத்தம் கேட்கும். முரு­க­னுக்கு உத­வியாய் விவாகப் பெருமான் இந்த வனத்­துக்குள் வந்­ததை நினைத்துக் கொண்டு மெய்­சி­லிர்த்தாள் இளம்­கு­வினி.

தேவை­ய­றிந்தும் தேவை­யின்­றியும் அவ­ளது குடி­லுக்கு முன்னால் அடிக்­கடி போய்­வந்தான் கதிரன். அவளை நோட்டம் விடு­வதும் அவளை ஓரக் கண்ணால் பார்ப்­ப­து­மாக தொடர்ந்து கொண்­டி­ருந்தான். ஒருநாள் திடீ­ரென இடது தோளில் கைக்­கோ­ட­ரியும் வலது கையில் புத்­தம்­பு­திய வில்­லோடு சில அம்­பு­களும் இடக்­கையில் கன­மான முய­லொன்றை காது­களைப் பிடித்துத் தூக்­கி­ய­வாறு வந்­தவன் குவி­னியின் தகப்­பனின் கால­டியில் வைத்து குனிந்து பணிந்து எழுந்து நின்றான்.

மண்­சு­வரின் ஓர் இடுக்கின் வழி­யாக இதை­யெல்லாம் கவ­னித்துக் கொண்­டி­ருந்த குவினி, அப்பன் என்ன சொல்லி அவனை அனுப்பப் போகி­றானோ என பதை பதைத்தாள். ஓரா­யிரம் நினை­வுகள் மன­துக்குள் வந்து போயின. கதிரன் கொண்டு வந்து சமர்ப்­பணம் செய்த வேட்டைப் பொரு­ளோடு தந்­தையின் கோபக் கணைக்­க­ளாகிச் சென்று விடு­வா­னோ­வென அச்சம் கொண்டாள். வெற்­றி­லையைக் குதப்பிக் கொண்­டி­ருந்த தகப்பன் சுரக்­கு­டு­வைக்குள் ‘தூ’ வென துப்பி உமிழ்ந்தான். சில நிமிட நேரம் தன்னை ஆசு­வா­சப்­ப­டுத்திக் கொண்டு துண்டுத் துணியால் முகத்­தையும் பின்னர் கையி­டுக்­கு­க­ளையும் மார்­ப­கத்­தையும் வயிற்­றையும் கடை­சி­யாக தோள்­வ­ழி­யாக வீசி முது­கையும் துடைத்­துக்­கொண்டான். கதி­ர­னுக்கோ வியர்த்­தது. துடைக்க முடி­யா­த­படி நின்றான். குவி­னியோ வாழ்வா? சாவா? போராட்­டத்தில் மூழ்கிப் போயி­ருந்தாள். கிழவன் வாய்த்­தி­றந்தான்.

‘‘ம்........ வட்­டப்­பா­றைக்கு கீழே கரு­வேப்ப மரத்­துக்குப் பக்­கத்­துல ஒரு­கு­டிசை போட்­டுக்கோ....!’’ என்றான். தென்­றலில் தவழ்­வதை உணர்ந்தாள் குவினி. பணிந்து நமஸ்­க­ரித்து விட்­டு­வெ­ளி­யே­றினான் கதிரன் வில்­வம்பூ அவித்த நீரையும் திப்­பிலி வெல்­லமும் கொண்டு சிரட்­டையும் கையு­மாக தகப்பன் முன் மலர்ந்த முகத்­தோடு நின்றாள் குவினி. தாடி மீசைக்கு மேலே தந்­தையின் புன் சிரிப்பு மலர்ந்­தது. ஆயிரம் பட்டாம் பூச்­சிகள் பறக்க உள்ளே சென்றாள்.

‘குடிசை போட்­டுக்கொள்! என்று சொன்னால் எனது மக­ளைக்­கைப்­பி­டித்துக் கொள் என சம்­மதம் தெரி­விப்­ப­தாக பொருள். உங்கள் இரண்டு பேருக்­கு­மாக குடி­சையை நீயே அமைத்துக் கொள்ள வேண்­டு­மென்­பது கட்­டளை. மறு­நாளே வட்டக் கற்­பா­றையின் கீழ்­ப­கு­தியில் கரு­வேப்ப மரத்­துக்குப் பக்­கத்தில் குடிசை அமைக்கத் தொடங்­கி­விட்டான். இரண்டு மூன்று நாட்­களில் குவி­னி­யுடன் குடும்ப வாழ்க்­கையை அந்த குடி­லுக்குள் ஆரம்­பித்தான். கல­க­லப்­பாக வாழ்ந்து ஒரு­பெண்­ணையும் பெற்­றார்கள்.

நீண்ட அமை­தியைக் கிழித்­துக்­கொண்டு கதிரன் வாய்­தி­றந்தான். ‘‘புதுசா ஒரு குடிசை போடப் போறேன்!’’ நினைத்­துக்­கூட பார்க்க முடி­யாத இந்த வார்த்­தைகள் அவ­ளு­டைய மண்­டையில் சம்­மட்­டியாய் பாய்ந்து. பந்து போலொன்று அடி­வ­யிற்­றி­லி­ருந்து மேலே கிளம்பி நெஞ்சை அடைத்­தது. கண்­களில் அருவி பெரு­கி­யது. ஆனால் அழுகை வர­வில்லை. தொண்டை அடைக்­கப்­பட்டு விட்­டதால் வாயைத் திறந்து அவளால் அழுது புலம்ப முடி­ய­வில்லை. மூச்சே நின்­று­விடும் நிலையை எய்­தினாள். நெஞ்சுப் பகுதி வலித்­தது. இதயத் துடிப்பு நின்­று­விடும் போலி­ருந்­தது. ஒரு தலைக்கு மேலே பல தலைகள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக கனத்­தது. நெஞ்சை அழுத்திக் கொண்­டி­ருந்­தவள் இரு கைக­ளாலும் தலையை அழுத்திப் பிடித்துப் பார்த்தாள். சடா­ரென அவ­னது மடியின் மீது தலையை புதைத்துக் கொண்டு விம்­மினாள்.

இவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக தன்­னு­டைய குடும்ப வாழ்க்­கையில் இப்­ப­டி­யொரு திருப்பம் ஏற்­ப­டு­மென கன­விலும் நினைக்­க­வில்லை. தமக்­கையின் கண­வ­னி­ட­மி­ருந்து தப்­பிக்க முயன்­றது கூட இப்­ப­டி­யொரு வாழ்க்­கையை விரும்­பாத படியால் தானே. கரு­வேப்­ப­ம­ரத்­த­டியில் குடிசை போட்டுக் கொண்டு வந்­தது கதிரன் தனக்கு மட்­டுமே உரித்­தா­ன­வ­னாக இருக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே. அவ­னு­டைய மான்தோல் படுக்­கை­யையே உல­க­மாகக் கரு­தினாள். தனக்­கென ஒரு கணவன்,- பிள்ளை குட்­டிகள். தனி­யான வாழ்க்கை இவைதான் அவ­ளது வாழ்­கையின் இலட்­சி­ய­மா­க­வி­ருந்­தது. பருவப் பெண்­ணாக இருந்­த­போது கதி­ரனைத் தவிர வேறெ­வ­னையும் நினைத்­துக்­கூட பார்க்­கா­தவள் அவள். தனது இலட்­சி­யத்­திற்கு கதி­ரனால் ஒரு போதும் இடை­யூறு வரா­தெ­னவே கரு­தினாள். அதனால் அவ­னையே விரும்­பினாள். எத்­த­னையோ இன்ப துன்­பங்­களை அவ­னோடு பகிர்ந்து கொண்டாள். மனை­வி­யாக, தோழி­யாக, தாயாக, பிள்­ளை­யாக பல்­வேறு பரி­ணா­மங்­களை அவ­னுக்­காக எடுத்­தவள் அவள். ஆனால் அனைத்தும் ஒரு­நொடிப் பொழுதில் மண்­ணா­கின.

‘சாமி! எனக்­கெ­துக்கு இந்த தண்­டனை?’ கண்­களில் அருவி பொழிய அவனைப் பார்த்து கேட்டாள். பதி­லில்லை. ‘நான் ரொம்ப அவ­லட்­ச­ண­மாக இருக்­கி­றேனா?’ இன்­னொரு கேள்­வி­யும்­கேட்டாள். அவன் மின் மினிப் பூச்­சி­களை எண்ணிக் கொண்­டி­ருந்தான்.

‘‘என்­னால உனக்கு கிடைக்­கிற சுகம்­ திருப்­தி­க­ரமா இல்­லையா சாமி?’’ கெஞ்சிக் கேட்டாள் அப்­பாவி குவினி. மடியில் இருந்த அவ­ளது தலையை புறங்­கையால் தள்­ளி­விட்டான் கணவன். மான்தோல் விரிப்பில் புரண்டாள் மனைவி. அழுதாள். கத­றினாள், கந்­தனை- வள்­ளியைக் கூப்­பிட்டு மன்­றா­டினாள். கடம்ப மரத்தைக் கைகளால் அடித்துக் கத்­தினாள், ‘‘கந்தா- கடம்பா!’’ பக்­கத்துப் பாறையில் எதி­ரொ­லித்­தது. கதிர்­கா­மத்தில் அங்க பிர­தட்­சணை பண்­ணு­வது போல கடம்ப­ ம­ரத்தைச் சுற்றி புரண்டாள்- அவனோ மெளனம் காத்தான். கல்லை விட்­டெ­ழுந்து நடக்க ஆரம்­பித்தான். அவ­னது கால்­களைக் கட்டிப் பிடித்­துக்­கொண்டும் கத­றினாள். அவன் நடக்­க­வில்லை. நடக்க முடி­யா­த­படி பிடித்­தி­ருந்தாள். அழு­கை­யினால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி திணறிக் கொண்டு அலங்­கோ­ல­மாக அமர்ந்து கொண்டாள். விரிந்து கிடந்த தலை­மு­டியை இரு கைக­ளாலும் அள்ளி முடித்துக் கொண்டு கண்­களில் மட்­டு­மல்ல, நாசி­யிலும் வடிந்­ததை கைகளால் சிந்தி எறிந்தாள்.

பனி­யும், ­குளிரும் அவ­னுக்கு ஒரு­பொ­ருட்­டாக தோன்­ற­வில்லை. கடம்ப மரத்­த­டியில் நின்று கொண்டு மின் மினிப் பூச்­சி­களை எண்ணிக் கொண்­டி­ருந்தான். தாங்க முடி­யாத குளிரும், பனியும் உடம்பை நனைத்துக் கொண்­டி­ருக்க அவனை விட்டு குடி­லுக்குள் நுழைய அவள் விரும்­ப­வில்லை. நடுங்கிக் கொண்­டி­ருந்தாள்.

‘இது என்­னோட தனிப்­பட்ட விருப்­ப­மில்ல. உங்க

அப்­ப­னோட விருப்பம்’’

மின் மினிப் பூச்­சி­களின் வெளிச்­சத்தை பனியை குளிரை கிழித்துக் கொண்டு அவ­ளது செவி­க­ளுக்குள் பாய்ந்­தது. அவ­னது நீண்ட நேர மெள­னத்தின் பின்­ன­ரான வார்த்­தைகள். புறங்­கையால் கண்­க­ளையும் மூக்­கையும் தேய்த்துக் கொண்டு அவ­னது அடுத்த விளக்­கத்­திற்­காக தயா­ரானாள். மின் மினிப் பூச்­சி­கள் தான் அவ­னது முகத்தை அவ­ளுக்குக் காட்­டின.

‘‘புதுசா ஒரு குடிசை போட்டு இளை­ய­வ­னையும் அழைச்­சிக்­கிட்டு போ!’’ ன்னு உங்­கப்பன் சொன்­னாலும் நான் பெருசா எடுத்­துக்­கல்ல. இருந்­தாலும் நேத்து என்னைக் கூப்­பிட்டு ‘‘என்ன? வேறெ­வ­னா­வது ஒருத்தன் அவள இழுத்­துக்­கிட்டுப் போய் குடிசை போடுற வரைக்கும் பார்த்­துக்­கிட்டு இருக்­கி­றீயா?’’ ன்னு கேட்­டாரு. அதுக்­கப்­பு­றம்தான் என்­னோட சம்­ம­தத்தை சொன்னேன்’’ விளக்­கினான். அவள் சிலை­யானாள்.

ஆதி­வா­சிகள் சமூ­கத்தில் ஏற்ெ­கனவே மண­மு­டித்த ஒருவன் இன்­னொரு பெண்­ணையும் மணம் முடிக்க இயலும். தமக்­கையில் கண­வ­னுக்கு அவ­ளது தங்­கை­யையும் கைப்­பி­டிக்க சகல உரி­மையும் உண்டு. அதற்­காக மூத்­தவள் எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது. அவள் விரும்­பா­விட்­டாலும் அதனைப் பொருட்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை.

மூத்­த­வளை மணந்து நாள­டைவில் மேலும் மூன்று நான்கு குடி­சை­களை போட்டு வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்கள் அநேகம் பேர் இச்­ச­மூ­கத்தில் உள்­ளனர். பிள்­ளை­களைப் பெற்றுக் கொடுப்­பதும் அவர்­களை வளர்ப்­பதும் இம் மனை­வி­களின் வேலை. கூழோ, கஞ்­சியோ வேட்டை இறைச்­சியோ தேனோ, திணையோ, சாப்­பிடக் கொண்டு வந்து கொடுப்பது ஆணின் வேலை. இது ஆதிவாசிகளின் வழக்கம்.

இப்போதும் பள்ளத்து ஏரிக்கரையில் மரையின் குரல் ஆண்மையின் வெளிப்பாடாக கேட்கிறது. அந்த ஓசை கேட்டவுடன் வனத்தின் எப்பகுதியிலிருந்தாவது பெண் மரையொன்று அந்த ஓசை வந்த இடம் நாடிச் சென்றுவிட வேண்டும். அந்த பெண்மரை ‘கிடேரி’ யாகக் கூட இருக்கலாம். அவை ஒன்று சேர்வதை யாராலும் தடுக்க முடியாது. அது வனத்தில் வாழும் மரைக் கூட்டத்தின் வழக்கம்.

வனப்பகுதி குடில்களில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எழுப்பி நரம்புகளில் உணர்ச்சியை ஏற்றிவிடும் ஓசை அது. கடம்பமரத்தடியில் நின்று கொண்டு மரையின் ஓசையையும் கணக்கிலெடுக்காதவனாய் இருந்தான் கதிரன். தனது தாம்பத்திய உறவுக்குள் இன்னொருத்தியையும் பங்காளியாக்கிக் கொள்ள விரும்பாதவளாய் வாழ்ந்த அந்த அப்பாவிப் பெண் ஒரு முடிவுக்கு வந்தாள். மீண்டும் அவிழ்ந்து போன தலைமுடியை இரு கைகளாலும் அள்ளி முடிந்தவாறே எழுந்தாள்.

‘‘சாமி நானும் அவளும் ஒரே வயித்த கிழிச்சிக் கிட்டு பொறந்த அக்காளும் தங்கைச்சியும். எங்க ரெண்டு பேருக்கு இருக்கிற இந்த ஒரே குடிசைபோதும். இன்னொரு குடிசை போடாதே சாமி!’’

கெஞ்சிக் கேட்டாள் சமூக பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளித்தவளாய். சாப்பிடாமலே தூங்கிக் கொண்டிருக்கும் தன் பெண் குழந்தையை நினைத்துக் கொண்டே குடிசையை நோக்கி நடந்தாள். அவன் பின்னால் போனான்.

சி.கே. முருகேசு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல