வேப்பமர உச்சத்தில் பேய் இருக்கிறது. அங்கே போகக்கூடாது!
ஐயோ! என்ர ராசா நீ சின்னப்பிள்ளை தனியாக எங்கேயும் போகக்கூடாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்கேயும் போகவேண்டாம்!
ஆந்தை கத்துவதைக் கேட்டாலும் ஆட்காட்டிக் குருவி கீச்சிட்டபடி பறந்து திரிந்தாலோ உங்கை உம்மாண்டி வருது சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் பிடிச்சுக்கொண்டு போயிடும்!
என்றெல்லாம் பெரியவர்கள் சின்னவர்களைப் பார்த்து சொல்லுவதை நாமும் கேட்டிருக்கிறோம்.
சின்னவர்கள் மீதான பெரியவர்களின் இவ்வாறான பக்குவப்படுத்தல் முறை என்பது சரியானதொன்றல்ல. சின்ன வயதில் இருந்தே சின்னவர்களைப் பெரியவர்கள் பயந்தாம்கொள்ளிகளாக வளர்க்கப் பாடுபடுகிறார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
காட்டில் வாழும் விலங்குகள் பற்றியும் அவற்றின் சிறப்பியல்புகளையும் சொல்லலாம்.
கடல், குளம், ஆற்றில் வாழும் உயிரினங்கள் பற்றியும், நிலத்தில் ஊர்ந்து வாழும் ஊர்வன பற்றியும் சொல்லலாம்.
வரலாற்று மனிதர்களின் வீரம் பற்றியும் சான்றோர்களின் புகழ்பற்றியும் கதைகளாகச் சொல்லலாம்.
சிறுவர்களின் நடத்தைகளை அவதானிக்கலாம். அந்த அவதானங்களில் ஒரு எச்சரிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும். தவறானது என்று உங்களுக்குத் தெரிந்தால் அவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கு சில சம்பவங்களைச் சொல்லிச் சொல்லலாம்.
தயவு செய்து பயம் என்பதை மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். சரியில்லாத நடத்தைகளாலும் முரடான செயற்பாடுகளாலும் வரக்கூடிய பாதகங்களை அவர்களுக்குச் சொல்லக் கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்கிறது. அதைச் சொல்லிப் பயமுறுத்த வேண்டிய அவசியமில்லை.
இப்படித்தான் ஒருநாள் இரவு தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது. பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணாமல் பதறிப் போனாள். கதவு திறந்திருப்பது கண்டு பதைபதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே! உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
சமரபாகு சீனா உதயகுமார்

ஐயோ! என்ர ராசா நீ சின்னப்பிள்ளை தனியாக எங்கேயும் போகக்கூடாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்கேயும் போகவேண்டாம்!
ஆந்தை கத்துவதைக் கேட்டாலும் ஆட்காட்டிக் குருவி கீச்சிட்டபடி பறந்து திரிந்தாலோ உங்கை உம்மாண்டி வருது சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் பிடிச்சுக்கொண்டு போயிடும்!
என்றெல்லாம் பெரியவர்கள் சின்னவர்களைப் பார்த்து சொல்லுவதை நாமும் கேட்டிருக்கிறோம்.
சின்னவர்கள் மீதான பெரியவர்களின் இவ்வாறான பக்குவப்படுத்தல் முறை என்பது சரியானதொன்றல்ல. சின்ன வயதில் இருந்தே சின்னவர்களைப் பெரியவர்கள் பயந்தாம்கொள்ளிகளாக வளர்க்கப் பாடுபடுகிறார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
காட்டில் வாழும் விலங்குகள் பற்றியும் அவற்றின் சிறப்பியல்புகளையும் சொல்லலாம்.
கடல், குளம், ஆற்றில் வாழும் உயிரினங்கள் பற்றியும், நிலத்தில் ஊர்ந்து வாழும் ஊர்வன பற்றியும் சொல்லலாம்.
வரலாற்று மனிதர்களின் வீரம் பற்றியும் சான்றோர்களின் புகழ்பற்றியும் கதைகளாகச் சொல்லலாம்.
சிறுவர்களின் நடத்தைகளை அவதானிக்கலாம். அந்த அவதானங்களில் ஒரு எச்சரிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும். தவறானது என்று உங்களுக்குத் தெரிந்தால் அவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கு சில சம்பவங்களைச் சொல்லிச் சொல்லலாம்.
தயவு செய்து பயம் என்பதை மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். சரியில்லாத நடத்தைகளாலும் முரடான செயற்பாடுகளாலும் வரக்கூடிய பாதகங்களை அவர்களுக்குச் சொல்லக் கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்கிறது. அதைச் சொல்லிப் பயமுறுத்த வேண்டிய அவசியமில்லை.
இப்படித்தான் ஒருநாள் இரவு தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது. பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணாமல் பதறிப் போனாள். கதவு திறந்திருப்பது கண்டு பதைபதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே! உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
சமரபாகு சீனா உதயகுமார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக