ஞாயிறு, 17 நவம்பர், 2013

கொமன்வெல்த் தலைமைப்பதவி இலங்கைக்கு சுகமா? சுமையா?

கொமன்வெல்த் மாநாடு இன்­றுடன் முடி­வ­டை­கின்ற சூழலில், இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அடைந்­துள்ள பலன்கள் என்ன என்ற கேள்­வி­களும் கூடவே எழு­கின்­றன.

ஏனென்றால், இந்த மாநாட்டை இலங்கை அர­சாங்கம் அவ்­வ­ளவு சுல­ப­மாக நடத்தி முடிக்­க­வில்லை.

இதற்­காக உள்­நாட்­டிலும் வெளி­யு­ல­கிலும் பெரும் போராட்­டங்­களை நடத்த வேண்­டி­யி­ருந்­தது.

கடு­மை­யான எதிர்ப்­புகள், குற்­றச்­சாட்­டுகள், அழுத்­தங்கள், நெருக்­க­டிகள் எல்­லா­வற்­றையும் தாண்­டியே இந்த மாநாட்டை நடத்த முடிந்­துள்­ளது.

இந்­த­ளவு பெரிய போராட்­டத்தின் மூலம் இலங்கை, கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்­தாலும், அடுத்த இரண்டு ஆண்­டுகள் கொமன்வெல்த் அமைப்­புக்குத் தலைமை தாங்கும் முக்­கிய பொறுப்பு இலங்­கைக்கு வந்­துள்­ளது.

ஒரு பக்­கத்தில், இந்த மாநாட்டை நடத்­து­வதன் மூலம் இலங்கை அர­சாங்கம் தன் மீதுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டுகள் மற்றும் மனி­த ­உ­ரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­களை மூடி மறைக்கப் பார்ப்­ப­தான ஒரு கருத்தும் உள்­ளது.

இந்தக் கருத்து, தமிழ் நாட்டில் மட்டும் இருக்­க­வில்லை. நியூயோர்க் ரைம்ஸ் கூட இதே கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆனால், கொமன்வெல்த் மாநாடும், இலங்­கை­யிடம் வந்­துள்ள அதன் தலைமைப் பொறுப்பும், அத்­த­கைய மறைத்­த­லுக்கு உத­வி­யாக இருக்­குமா என்­பது கேள்­விக்­கு­ரி­யது.

2009இல் போர் முடி­வுக்கு வந்த சில மாதங்­களில், ரினிட்­டாட்டில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில், கொழும்பில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு அளிக்­கப்­பட்ட போது, போரின் போது நிகழ்ந்த மனி­த­ உ­ரிமை மீறல்கள் பலவும், உறுப்­பு­நா­டு­க­ளுக்குச் சரி­யாகத் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

போரை வெற்றி கொண்ட இலங்கை, அமை­தி­யையும் வென்று விடும் என்ற நம்­பிக்­கையில் அப்­போது இந்த மாநாட்டை நடத்த அவர்கள் இணங்­கினர்.

அதே­வேளை, மஹிந்த ராஜ­பக்­ ஷவின் அர­சாங்­கமோ, இத்­த­கை­ய­தொரு சர்­வ­தேச மாநாட்டின் மூலம், உலகின் ஆத­ர­வையும் கவ­னத்­தையும் தன்­பக்கம் திருப்பி எல்லா சிக்­கல்­களில் இருந்தும் விடு­பட்டுக் கொள்­ளலாம் என்று கணக்குப் போட்­டி­ருந்­தது.

ஆனால் காலப்­போக்கில், ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டு­க­ளாக, வெளி­வர வெளி­வர, சர்­வ­தேச சமூகம் ஆடிப்­போ­னது.

இலங்­கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த எடுத்த முடிவு சரி­யா­னதா என்ற சந்­தேகம் கூடப் பல­நா­டு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தன.

எவ்­வா­றா­யினும், அண்­டை­நா­டான இந்­தி­யா­வி­னது ஆத­ரவு, இலங்­கைக்குப் பல­மாகக் கிடைத்­ததால், மாநாட்டை நடத்தும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் முயற்­சிகள் வெற்றி பெற­வில்லை.

இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்­காக இலங்கை பல­நா­டு­களின் காலில் விழாத குறை­யாக ஆத­ரவு தேட­வேண்­டி­யி­ருந்­தது.

பல விட­யங்­களில் விட்டுக் கொடுக்­கவும், படி­யி­றங்கிச் செல்­லவும் வேண்­டி­யி­ருந்­தது.

இதன் மூலம் தான், இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்­ளவும், நடத்தி முடிக்­கவும் முடிந்­துள்­ளது.

பொரு­ளா­தார ரீதி­யாக பெரும் செல­வு­க­ளுடன் இந்த மாநாட்டை நடத்தி முடித்­தி­ருந்­தாலும், இதனால் நீண்­ட­கால பொரு­ளா­தார வாய்ப்­புகள் கிடைக்கும் என்று அர­சாங்கம் உறு­தி­யாக நம்­பு­கி­றது.

அது­மட்­டு­மன்றி, 1976ஆம் ஆண்டில் சிறி­மாேவா பண்­டா­ர­நா­யக்க பிர­த­ம­ராக இருந்த போது நடத்­தப்­பட்ட அணி­சேரா நாடு­களின் உச்சி மாநாட்­டுக்குப் பின்னர், ஒரு பெரிய சர்­வ­தேச மாநாட்டை நடத்­தி­யவர் என்ற பெரு­மை­யையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பெற்றுக் கொள்­கிறார்.

இந்தப் பெரு­மி­தமும், பொரு­ளா­தார வாய்ப்­பு­களும் தான், இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அடையப் போகும் பலன்­க­ளாக இருக்­கு­மே­யானால், இதற்­காக எதிர்­கொள்­ளப்­பட்ட சவால்கள் மிகவும் அதி­க­மென்றே கூறலாம்.

இலங்­கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் கடந்த பல மாதங்­க­ளா­கவே ஊட­கங்­களில் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

பல நாடுகள் குற்­றச்­சாட்­டு­களை எழுப்பி இலங்­கையை பதி­ல­ளிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தின.

இன்னும் இந்­தியா போன்ற நாடுகள் வடக்கு மாகா­ண­ச­பைக்குத் தேர்­தலை நடத்த அழுத்தம் கொடுத்­தன.

இப்­ப­டி­யாக, கொமன்வெல்த் மாநாட்டை நடத்­து­வ­தற்­காக இலங்கை மீது செலுத்­தப்­பட்ட அழுத்­தங்கள் அதிகம்.

கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் நிலையில் இருந்து பின்­வாங்­கி­யி­ருந்­தாலோ, அதற்­கான பொறுப்பை இலங்கை ஏற்­கா­தி­ருந்­தாலோ, இலங்கை இந்­த­ள­வுக்கு சர்­வ­தேச அளவில் கசக்கிப் பிழி­யப்­பட்­டி­ருக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

கொமன்வெல்த் மாநாட்டை அண்­டிய காலப்­ப­கு­தியில், கனடா, பிரிட்டன், அமெ­ரிக்க, அவுஸ்தி­ரே­லிய, நியூஸி­லாந்து ஊட­கங்கள், இலங்­கைக்கு எதி­ரான கருத்­து­க­ளையும், போர்க்­குற்­றங்கள், மனி­த­உ­ரிமை மீறல்­களை அம்­ப­லப்­ப­டுத்தும் ஆதா­ரங்­க­ளையும், தக­வல்­க­ளையும் தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டுப் பர­ப­ரப்பை எற்­ப­டுத்­தின.

இவை­யெல்லாம், மீண்டும் ஒரு­முறை, இலங்­கையின் மீதுள்ள கறை­களை உலகின் முன்­பாக, வெளிச்சம் போட்டுக் காண்­பித்­தன.

இது சர்­வ­தேச அரங்கில் இலங்­கையை ஒரு போர்க்­குற்ற நாடா­கக்காட்டும், கருத்தை உரு­வாக்­கி­யுள்­ளன.

இவற்றை மறைக்­கவே கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், கருத்­து­ரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை நடத்த முற்­ப­டா­தி­ருந்­தால், இந்­த­ள­வுக்கு இலங்கை நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்ந்­தி­ருக்­குமா என்­பது கேள்விக்குறியே. அதே­வேளை, இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள், நெருக்­க­டிகள், அழுத்­தங்கள், வளைந்து கொடுப்­பு­க­ளுக்கு மத்­தியில் அர­சாங்கம் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்­தி­ருப்­பினும், இது முற்­றிலும் சாத­க­மான பெறு­பேற்றைத் தருமா என்­பது கேள்விக்குறியே

குறிப்­பாக, பல்­வேறு தரப்­பு­களும், கரு­து­வது போன்று, போர்­விதி மீறல்­க­ளையும் மனி­த­உ­ரிமை மீறல்­க­ளையும் மூடி மறைப்­ப­தற்கு கொமன்வெல்த் மாநாட்­டையும், அதன் தலை­மைத்­துவப் பொறுப்­பையும் இலங்­கை­யினால் எந்­த­ள­வுக்குப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும் என்ற கேள்வி உள்­ளது.

கொமன்வெல்த் அமைப்­புக்குத் தலை­மை­யேற்கும் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இலங்கை அர­சாங்கம், அதற்­கேற்ற பக்­கு­வத்­து­டன் நடந்து கொள்ள வேண்­டிய நெருக்­க­டி­யான சூழல் ஒன்று உரு­வா­கி­யுள்­ளதை மறுக்க முடி­யாது.

மனி­த­ உ­ரி­மைகள், ஜன­நா­யகம், ஊடக சுதந்­திரம் உள்­ளிட்ட- கொமன்­வெல்த்தின் அடிப்­படைப் பெறு­மா­னங்­களை கட்­டிக்­காக்க வேண்­டிய பொறுப்பு இந்த அர­சாங்­கத்­துக்கு வந்­தி­ருக்­கி­றது.

இவை எதையும், போர் முடி­வுக்கு வந்த பின்னர், இலங்கை செய்­தி­ருக்­க­வில்லை.

ஆனால், கொமன்வெல்த் தலைமைப் பொறுப்பு, இத்­த­கைய நிலையை உரு­வாக்­கு­வ­தற்­கான அழுத்­தங்­களை இலங்கை மீது கொடுக்கப் போகி­றது.

கொமன்வெல்த் தலை­மைத்­து­வத்­துக்­காக, அதன் பண்­பு­க­ளுக்­கேற்ப, அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அடங்கிப் போகவேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கு வளைந்து கொடுக்க இலங்கை மறுக்குமேயானால், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்காக அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடிகளை விடவும், கடுமையான சோதனைகளை அதன் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக போராட வேண்டியிருக்கும்.

இந்த நிலையில், கொமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இலங்கைக்கு இந்த மாநாடு, எத்தகைய நிதிசார் முதலீட்டுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும், மனிதஉரிமைமீறல்கள் என்று வரும் போது, இந்த தலைமைப் பதவி இலங்கைக்கு அழுத்தங்கள் மிக்கதொன்றாகவே இருக்கப் போகிறது.


-சத்­ரியன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல