புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். அவர்களின் கருத்துக்களை செவிமடுக்கவும் நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை எவரும் பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் யார் என்றும் பார்க்காது நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழனன்று நடைபெற்ற விசேட செய்தி யாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களி னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேலும் கருத்து வெளியிடுகையில்,
கேள்வி:-- பிரிட்டன் பிரதமர் கமரூனை சந்திப் பீர்களா?
பதில்:-- பிரிட்டன் பிரதமர் கமரூனை நான் சந்தித்து கலந்துரையாடுவேன். அவருடனான சந்திப்புக்கு நான் நேரம் வழங்கியுள் ளேன். சந்திப்பின்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். அவர் என்னிடம் கேள்விகளை கேட்கலாம். நானும் அவரிடம் சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.
கேள்வி:-- புலம் பெயர் தமிழ் மக்களுடனான தொடர்புகளை கட்டியெழுப்ப எவ்வாறு செயற்படவுள்ளீர்கள்?
பதில்:-- புலம்பெயர் மக்களுக்கு இலங்கை வருமாறு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். அவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க நாங்கள் தயாராக இருக்கின் றோம். அதேபோன்று அவர்களும் எங்களது கருத்துக்களுக்கு செவிமடுக்கவேண்டும். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை அவர்கள் வந்து பார்க்கவேண்டும். எனவே புலிகளின் அனுதாபிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்களுடனும் பேச்சு நடத்தவேண்டும்.
மக்களையும் அரசியல் தலைவர்களையும் கொலை செய்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம். 14 ஆயிரம் முன்னாள் போராளிகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டனர். இதேவேளை சிறுவர் போராளிகளை ஒரு சில மாதங்களிலேயே விடுவித்துவிட்டோம். இவை ஊடகவியலாளர்களுக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை இவை வாழ்வா சாவா போன்ற விடயங்களாகும்.
30 வருடங்களாக நாங்கள் பயங்கரவாதம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளோம். அந்தக்காலங்களில் ஒவ்வொரு நாளும் மரணங்கள் காணப்பட்டன. 10 அல்லது 15 சடலங்கள் வருவதுண்டு. ஆனால், அதிர்ஷ்டவசமாக தற்போது அவ்வாறு எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக எவ்விதமான குண்டுகளும் வெடிக்கவில்லை. நாடு அமைதியாக உள்ளது.
எனவே மக்களின் மனதை வெல்லுவதற்கு நாங்கள் தயார். அதற்கான கொள்கை களை உருவாக்கியுள்ளோம். ஆனால், ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை எவரும் பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன். நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
கேள்வி: இந்திய பிரதமர் இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு வராமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளீர்களா? அல்லது இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை குறித்து மகிழ்ச்சியடைகின்றீர்களா?
பதில்: கடந்த முறை பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டிலும் இந்திய பிரதமர் கலந்துகொண்டிருக்கவில்லை. அந்தவகையில் இம்முறை பொதுநலவாய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் பங்குபற்றல் தொடர்பில் நான் திருப்தியடைகின்றேன்.
கேள்வி:-- தமிழ் மக்களின் உணர்வு காரணமாகவே பிரதமர் வரவில்லையா?
பதில்:-- எனக்கு இந்திய பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கேள்வி:-- இலங்கை வரும் நாடுகளின் பிரதி நிதிகள் தாம் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வருவதைப்போன்று மனித உரிமை விடயங்களையும் எழுப்புவதற்கு வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து ?
பதில்:-- அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் வந்து உண்மையில் இலங்கையில் என்ன நடக்கின்றது என்று புரிந்துகொள்ளமுடியும். அவர்களை நான் வரவேற்கின்றேன். அவர்கள் எம்முடனும் பேச்சுநடத்தவேண்டும். எங்களுடன் கலந்துரையாடவேண்டும். புலிகளின் அனுதாபிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத் தாமல் எம்முடனும் கலந்துரையாடவேண் டும்.
கேள்வி: பொதுநலவாய அமைப்பின் தலை மைப் பதவியை ஏற்றதுடன் அடுத்த இரண்டு வருடங்களில் உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமையும்?
பதில்:-- சிறந்த கேள்வி. நான் பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருப்பேன். ஆனால் பொதுநலவாய உறுப்பு நாடுகள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களை நான் நடைமுறைப்படுத்துவேன்.
இளவரசர் சார்ள்ஸை சந்திக்கும்போது 'ஆயுபோவன்' என்று கூறுவேன். இதுதான் இலங்கையர்கள் மரியாதை செலுத்தும் விதமாகும். அது மகாராணியாக இருந்தாலும் சரி தலைவராக இருந்தாலும் சரி பிச்சைக்காரராக இருந்தாலும் இதுவே முறைமையாகும். இளவரசர் சார்ள்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
நீங்கள் ஒரு விடயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். 30 வருடங்களாக நாங்கள் பயங்கரவாதம் காரணமாக கஷ்டப்பட்டோம். அதாவது பல மனித உரிமை மீறல்கள் இக்காலத்தில் நிகழ்ந்தன. சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அக்காலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டனர். 30 வருடங்களாக நாங்கள் கஷ்டப்பட்டோம். ஆனால், 2009ஆம் ஆண்டின் பின்னர் எவரும் கொல் லப்படவில்லை.
கேள்வி:-- எனினும் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டு?
பதில்:-- 2009 ஆண்டு மட்டுமன்றி கடந்த 30 வருடங்களாக மக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 2009 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். 2009 ஆம் ஆண்டின் பின்னர் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை.
இந்தக் கேள்வியை கேட்ட ஊடகவியலாளர் தன்னை அடையாளப்படுத்தவில்லை.
அது குறித்து பிரச்சினையில்லை. நீங்கள் கையை உயர்த்திய விதத்தில் இந்த விடயத்தைப் பற்றி கேள்வியெழுப்புவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
இலங்கையில் எங்களுக்கு என ஒரு சட்டக் கட்டமைப்பு உள்ளது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்திருந்தோம். அதன் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உள்ளது. அதனை பலப்படுத்த பொதுநலவாயமும் தற்போது ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக யாருக்கு முறைப்பாடு செய்யவேண்டுமானாலும் அதற்கு ஒரு முறைமை காணப்படுகின்றது. அது கற்பழிப்பு, சித்திரவதை என எதுவாகவும் இருக்கலாம். எனவே, நாட் டின் சட்ட முறைமையை நீங்கள் மதிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டின் கலாசாரத்தை மதிக்கவேண்டும்.
இவை குறித்து ஆராய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏதாவது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கின்றேன். யாராக இருந் தாலும் நடவடிக்கை எடுக்கத் தயார். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
ஜே.ஜி.ஸ்டீபன், ரொபட் அன்டனி

எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் யார் என்றும் பார்க்காது நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழனன்று நடைபெற்ற விசேட செய்தி யாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களி னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேலும் கருத்து வெளியிடுகையில்,
கேள்வி:-- பிரிட்டன் பிரதமர் கமரூனை சந்திப் பீர்களா?
பதில்:-- பிரிட்டன் பிரதமர் கமரூனை நான் சந்தித்து கலந்துரையாடுவேன். அவருடனான சந்திப்புக்கு நான் நேரம் வழங்கியுள் ளேன். சந்திப்பின்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். அவர் என்னிடம் கேள்விகளை கேட்கலாம். நானும் அவரிடம் சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.
கேள்வி:-- புலம் பெயர் தமிழ் மக்களுடனான தொடர்புகளை கட்டியெழுப்ப எவ்வாறு செயற்படவுள்ளீர்கள்?
பதில்:-- புலம்பெயர் மக்களுக்கு இலங்கை வருமாறு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். அவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க நாங்கள் தயாராக இருக்கின் றோம். அதேபோன்று அவர்களும் எங்களது கருத்துக்களுக்கு செவிமடுக்கவேண்டும். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை அவர்கள் வந்து பார்க்கவேண்டும். எனவே புலிகளின் அனுதாபிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்களுடனும் பேச்சு நடத்தவேண்டும்.
மக்களையும் அரசியல் தலைவர்களையும் கொலை செய்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம். 14 ஆயிரம் முன்னாள் போராளிகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டனர். இதேவேளை சிறுவர் போராளிகளை ஒரு சில மாதங்களிலேயே விடுவித்துவிட்டோம். இவை ஊடகவியலாளர்களுக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை இவை வாழ்வா சாவா போன்ற விடயங்களாகும்.
30 வருடங்களாக நாங்கள் பயங்கரவாதம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளோம். அந்தக்காலங்களில் ஒவ்வொரு நாளும் மரணங்கள் காணப்பட்டன. 10 அல்லது 15 சடலங்கள் வருவதுண்டு. ஆனால், அதிர்ஷ்டவசமாக தற்போது அவ்வாறு எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக எவ்விதமான குண்டுகளும் வெடிக்கவில்லை. நாடு அமைதியாக உள்ளது.
எனவே மக்களின் மனதை வெல்லுவதற்கு நாங்கள் தயார். அதற்கான கொள்கை களை உருவாக்கியுள்ளோம். ஆனால், ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை எவரும் பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன். நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
கேள்வி: இந்திய பிரதமர் இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு வராமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளீர்களா? அல்லது இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை குறித்து மகிழ்ச்சியடைகின்றீர்களா?
பதில்: கடந்த முறை பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டிலும் இந்திய பிரதமர் கலந்துகொண்டிருக்கவில்லை. அந்தவகையில் இம்முறை பொதுநலவாய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் பங்குபற்றல் தொடர்பில் நான் திருப்தியடைகின்றேன்.
கேள்வி:-- தமிழ் மக்களின் உணர்வு காரணமாகவே பிரதமர் வரவில்லையா?
பதில்:-- எனக்கு இந்திய பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கேள்வி:-- இலங்கை வரும் நாடுகளின் பிரதி நிதிகள் தாம் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வருவதைப்போன்று மனித உரிமை விடயங்களையும் எழுப்புவதற்கு வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து ?
பதில்:-- அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் வந்து உண்மையில் இலங்கையில் என்ன நடக்கின்றது என்று புரிந்துகொள்ளமுடியும். அவர்களை நான் வரவேற்கின்றேன். அவர்கள் எம்முடனும் பேச்சுநடத்தவேண்டும். எங்களுடன் கலந்துரையாடவேண்டும். புலிகளின் அனுதாபிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத் தாமல் எம்முடனும் கலந்துரையாடவேண் டும்.
கேள்வி: பொதுநலவாய அமைப்பின் தலை மைப் பதவியை ஏற்றதுடன் அடுத்த இரண்டு வருடங்களில் உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமையும்?
பதில்:-- சிறந்த கேள்வி. நான் பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருப்பேன். ஆனால் பொதுநலவாய உறுப்பு நாடுகள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களை நான் நடைமுறைப்படுத்துவேன்.
இளவரசர் சார்ள்ஸை சந்திக்கும்போது 'ஆயுபோவன்' என்று கூறுவேன். இதுதான் இலங்கையர்கள் மரியாதை செலுத்தும் விதமாகும். அது மகாராணியாக இருந்தாலும் சரி தலைவராக இருந்தாலும் சரி பிச்சைக்காரராக இருந்தாலும் இதுவே முறைமையாகும். இளவரசர் சார்ள்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
நீங்கள் ஒரு விடயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். 30 வருடங்களாக நாங்கள் பயங்கரவாதம் காரணமாக கஷ்டப்பட்டோம். அதாவது பல மனித உரிமை மீறல்கள் இக்காலத்தில் நிகழ்ந்தன. சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அக்காலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டனர். 30 வருடங்களாக நாங்கள் கஷ்டப்பட்டோம். ஆனால், 2009ஆம் ஆண்டின் பின்னர் எவரும் கொல் லப்படவில்லை.
கேள்வி:-- எனினும் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டு?
பதில்:-- 2009 ஆண்டு மட்டுமன்றி கடந்த 30 வருடங்களாக மக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 2009 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். 2009 ஆம் ஆண்டின் பின்னர் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை.
இந்தக் கேள்வியை கேட்ட ஊடகவியலாளர் தன்னை அடையாளப்படுத்தவில்லை.
அது குறித்து பிரச்சினையில்லை. நீங்கள் கையை உயர்த்திய விதத்தில் இந்த விடயத்தைப் பற்றி கேள்வியெழுப்புவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
இலங்கையில் எங்களுக்கு என ஒரு சட்டக் கட்டமைப்பு உள்ளது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்திருந்தோம். அதன் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உள்ளது. அதனை பலப்படுத்த பொதுநலவாயமும் தற்போது ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக யாருக்கு முறைப்பாடு செய்யவேண்டுமானாலும் அதற்கு ஒரு முறைமை காணப்படுகின்றது. அது கற்பழிப்பு, சித்திரவதை என எதுவாகவும் இருக்கலாம். எனவே, நாட் டின் சட்ட முறைமையை நீங்கள் மதிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டின் கலாசாரத்தை மதிக்கவேண்டும்.
இவை குறித்து ஆராய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏதாவது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கின்றேன். யாராக இருந் தாலும் நடவடிக்கை எடுக்கத் தயார். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
ஜே.ஜி.ஸ்டீபன், ரொபட் அன்டனி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக