கொமன்வெல்த் மாநாடு, வடக்கின் மீதான உலகத்தின் கவனத்தை மீண்டும் ஒருமுறை திருப்பி விட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த சில வெளிநாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும், வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டது முக்கியமானதொரு திருப்பம்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றும் – தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்பிக்கவும், யாழ்ப்பாணம் செல்லும் ஒரு திட்டத்தையும் கொண்டிருந்தார்.
ஆனால், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று அவர் எடுத்த முடிவினால், இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், யாழ் ப்பாணத்துக்குச் சென்று, வட மாகாண முதல்வரைச் சந்தித்திருந்தால், அது ஒரு அரசியல் திருப்பமாகவே அமைந்திருக்கும்.
ஏற்கனவே, இலங்கையின் மாற்று அரசியல் கேந்திர மையமாக மாறத் தொடங்கியுள்ள யாழ்ப்பாணத்துக்கு, இது இன்னும் பெறுமதியைக் கூட்டியிருக்கும்.
இலங்கையில் கொழும்புக்கு மாற்றான, அரசியல் கேந்திர மையமாக, ஒரு காலத் தில் யாழ்ப்பாணமும், பின்னர், கிளிநொச்சியும் விளங்கின.
விடுதலைப் புலிகளின் பலம் தான், அத்தகைய நிலையை இந்த நகரங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதுபோலவே, இப்போது மீண்டும் யாழ்ப்பாணம், இலங்கையின் மாற்று அரசி யல் கேந்திர மையமாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளது.
இதற்குக் காரணம், வட மாகாணசபைத் தேர்தல் தான்.
வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றிருந்தால், இத்தகைய நிலை ஒருபோதும், யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்திருக்க மாட்டாது.
ஏனென்றால், கொழும்பின் குரலாகவே யாழ்ப்பாணமும் எதிரொலிக்கும் என்ப தால், அதனை அத்தகையதொரு மாற்று அரசியல் கேந்திரமாக எந்தவொரு வெளிச் சக்தியும் ஏற்றுக்கொண்டிருக்காது.
ஆனால், வட மாகாண சபைத் தேர்த லில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, யாழ்ப்பாணத்துக்கான அந்தக் கதவை மீளவும் திறந்து விடக் காரணமாகியுள்ளது.
அதுவும், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்ததும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும், இலங்கை அரசின் போக்கும் ஒரே கோட்டில் பயணிக்கவில்லை என்பது சர்வதேச சமூகத்துக்கு, வெளிச்சமாகி விட்டது.
இந்த நிலையில் தான், வடக்கின் மீதான, குறிப்பாக வடக்கு மாகாணத்தின் புதிய அரசுடனான உறவுகளில் வெளிநாடுகள் கவ னம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
வட மாகாண முதல்வராக சி.வி.விக்னே ஸ்வரன் பதவியேற்ற பின்னர், முதலாவதாக அவரைச் சென்று சந்தித்திருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.
அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலத்தில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், தென் கொரியத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் அடுத்தடுத்து வட மாகாண முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த கனேடிய வெளிவிவகார மற்றும் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரும், வட க்கு மாகாணத்துக்குச் சென்று முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.
இன்னும் பலர் அங்கு செல்லும் வாய்ப்புக்களும் உள்ளன.
இப்படியொரு முக்கியத்துவம் யாழ்ப்பாணத்துக்கு வரும் என்று அரசாங்கம் கருதியிருக்காது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்த நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், சர்வ தேச தலைவர்களின் கவனிப்புக்குரிய – அக்கறைக்குரிய மையமாக யாழ்ப்பாண த்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது கொமன் வெல்த் மாநாடு தான்.
கொமன்வெல்த் மாநாட்டுக்குப் பின்னர், வடக்கின் மீதான சர்வதேச கவனிப்பும், வடக்குடனான சர்வதேசத்தின் தொடர்பாட லும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இது தமிழர் தரப்பின் பிரச்சினைகள் மேலும் சர்வதேச மயப்படுவதற்கான இன் னொரு பரிணாமத்தை அளிக்கும்.
இது, “ஒரே இலங்கை, ஒரே அரசு, ஒரே கொள்கை” என்ற – எல்லாமே “ஒரே குடை யின் கீழ், ஒரே குடும்பத்தின் கீழ்” இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு சவாலாகியுள்ள ஒரு விவகாரமாகும்.
2009இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன், தமிழர்களின் தனியான அரசி யல் களத்தையும் மூடிவிட்டதாகவே அரசாங்கம் கருதியிருந்தது.
ஆனால், கொழும்புக்கு மாற்றான, தமிழரின் அரசியல் கேந்திர நிலையம் ஒன்று மீளப் பிறப்பெடுப்பதை, அரசாங்கத்தினால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
வட மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட தும், வடக்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளையும், தலைவர்களையும் அரசாங்கத்தி னால், தடுக்க முடியவில்லை.
போருக்குப் பின்னர், வடக்கை அபிவிருத்தி செய்து சாதனை செய்து விட்டோம் என்று பிரகடனப்படுத்திய அரசாங்கமே, இவையனைத்தையும் வந்து பார்க்கும்படி வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இத்தகைய நிலையில், வடக்கின் மீதான வெளிநாடுகளின் கரிசனையையும், வடக்கு மாகாண சபையுடனான வெளிநாடுகளின் அதிகாரபூர்வமான தொடர்புகளையும் அறு த்தெறிய முடியாத நிலை ஒன்று உருவாகியுள்ளது.
அதுவும், இதற்கு முன்னர் ஒரு எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு கூறும் கருத்துக்களுக்கும், வடக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் உள்ள அரசு ஒன்று கூறும் அதிகாரபூர்வமான கருத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருக் கும்.
தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசின் மூலம் வெளிப்படுத்தப்படும் வாய்ப்பு முதல் முறையாக தமிழர்களுக்கு கிடைத்துள்ளது.
அதைப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு நாடுகளும் முனைகின்றன.
அதேவேளை, இந்த வாய்ப்பைத் தமிழர் தரப்பும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் முக்கியமானது.
இதனை இரண்டு விதமாக மேற்கொள்ளலாம்.
முதலாவது, வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது.
இரண்டாவது, தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான தளமா கப் பயன்படுத்திக் கொள்வது.
வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் வரையறுக்கப்பட்டளவுக்கே மாகாண சபையால் பங்காற்ற முடியும்.
ஏனென்றால், மாகாண சபைக்கு நிதி அதிகாரம் கிடையாது.
மாகாண சபைக்குத் தேவையான நிதியை திரட்டும் அதிகாரமில்லாததால், மத்திய அரசின் கையை ஏந்த வேண்டிய நிலை உள்ளது.
வெளிநாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதானாலும், மத்திய அரசின் ஊடாகவே அதைப் பெற வேண்டியுள்ளது.
இத்தகைய நிலையில், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கும் வடக்கு மாகாண சபை பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலையே ஏற்படும்.
ஆனால், வெளிநாடுகளுடனான தொடர்புகள் மூலம் தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கு இது முக்கிய தளமாக விளங்க முடியும்.
குறிப்பாக, தமிழர் தரப்பின் தற்போதைய அரசியல் இராஜதந்திரப் போருக்கான அடிஊற்றாக வடக்கு மாகாண சபை மாறத் தொடங்கியுள்ளது.
வடக்கிற்கான நிதியை கட்டுப்படுத்துவது போன்று இதனை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது.
அரசாங்கத்தினால் இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத போதிலும், வடக்கு மாகாண சபைக்கும், வெளியுலகிற்குமான நெருக்கம் அதிகரிப்பதை அரசாங்கத்தினால் வேடிக்கை பார்ப்பதை விட வேறேதும் செய்ய முடியாது.
போருக்குப் பிந்திய நான்கு ஆண்டுகளை யும் அரசாங்கம், அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறல், புனர்வாழ்வு, புனரமைப்பு, ஜனநாயகம், பாதுகாப்பு, சுதந்திரம் என்று வடக்கிலுள்ள மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் – சாதகமான முறையில் தீர்க்கும் முயற்சியில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியிருந்தால், கொழும் பிலும், யாழ்ப்பாணத்திலும், இருவேறு அதிகார மையங்கள் உருவாகியிருக்க முடி யாது.
ஒற்றையாட்சி என்று அரசாங்கம் கூவிக் கூவி, நடத்திய இனவாத அரசியல் வியாபாரம் தான், மீண்டும் யாழ்ப்பா ணத்தை இலங்கையின் இரண்டாவது அரசியல் கேந்திர மையமாக உருவாக்கியு ள்ளது.
இந்த இரண்டாவது அரசியல் கேந்திர மையத்தின் மீள் எழுச்சியின் விளைவு, இலங்கை அரசுக்கு சாதகமானதொன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
-ஹரிகரன்

கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த சில வெளிநாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும், வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டது முக்கியமானதொரு திருப்பம்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றும் – தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்பிக்கவும், யாழ்ப்பாணம் செல்லும் ஒரு திட்டத்தையும் கொண்டிருந்தார்.
ஆனால், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று அவர் எடுத்த முடிவினால், இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாணப் பயணம் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், யாழ் ப்பாணத்துக்குச் சென்று, வட மாகாண முதல்வரைச் சந்தித்திருந்தால், அது ஒரு அரசியல் திருப்பமாகவே அமைந்திருக்கும்.
ஏற்கனவே, இலங்கையின் மாற்று அரசியல் கேந்திர மையமாக மாறத் தொடங்கியுள்ள யாழ்ப்பாணத்துக்கு, இது இன்னும் பெறுமதியைக் கூட்டியிருக்கும்.
இலங்கையில் கொழும்புக்கு மாற்றான, அரசியல் கேந்திர மையமாக, ஒரு காலத் தில் யாழ்ப்பாணமும், பின்னர், கிளிநொச்சியும் விளங்கின.
விடுதலைப் புலிகளின் பலம் தான், அத்தகைய நிலையை இந்த நகரங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதுபோலவே, இப்போது மீண்டும் யாழ்ப்பாணம், இலங்கையின் மாற்று அரசி யல் கேந்திர மையமாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளது.
இதற்குக் காரணம், வட மாகாணசபைத் தேர்தல் தான்.
வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றிருந்தால், இத்தகைய நிலை ஒருபோதும், யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்திருக்க மாட்டாது.
ஏனென்றால், கொழும்பின் குரலாகவே யாழ்ப்பாணமும் எதிரொலிக்கும் என்ப தால், அதனை அத்தகையதொரு மாற்று அரசியல் கேந்திரமாக எந்தவொரு வெளிச் சக்தியும் ஏற்றுக்கொண்டிருக்காது.
ஆனால், வட மாகாண சபைத் தேர்த லில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, யாழ்ப்பாணத்துக்கான அந்தக் கதவை மீளவும் திறந்து விடக் காரணமாகியுள்ளது.
அதுவும், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்ததும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும், இலங்கை அரசின் போக்கும் ஒரே கோட்டில் பயணிக்கவில்லை என்பது சர்வதேச சமூகத்துக்கு, வெளிச்சமாகி விட்டது.
இந்த நிலையில் தான், வடக்கின் மீதான, குறிப்பாக வடக்கு மாகாணத்தின் புதிய அரசுடனான உறவுகளில் வெளிநாடுகள் கவ னம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
வட மாகாண முதல்வராக சி.வி.விக்னே ஸ்வரன் பதவியேற்ற பின்னர், முதலாவதாக அவரைச் சென்று சந்தித்திருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.
அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலத்தில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், தென் கொரியத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் அடுத்தடுத்து வட மாகாண முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த கனேடிய வெளிவிவகார மற்றும் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரும், வட க்கு மாகாணத்துக்குச் சென்று முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.
இன்னும் பலர் அங்கு செல்லும் வாய்ப்புக்களும் உள்ளன.
இப்படியொரு முக்கியத்துவம் யாழ்ப்பாணத்துக்கு வரும் என்று அரசாங்கம் கருதியிருக்காது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்த நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், சர்வ தேச தலைவர்களின் கவனிப்புக்குரிய – அக்கறைக்குரிய மையமாக யாழ்ப்பாண த்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது கொமன் வெல்த் மாநாடு தான்.
கொமன்வெல்த் மாநாட்டுக்குப் பின்னர், வடக்கின் மீதான சர்வதேச கவனிப்பும், வடக்குடனான சர்வதேசத்தின் தொடர்பாட லும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இது தமிழர் தரப்பின் பிரச்சினைகள் மேலும் சர்வதேச மயப்படுவதற்கான இன் னொரு பரிணாமத்தை அளிக்கும்.
இது, “ஒரே இலங்கை, ஒரே அரசு, ஒரே கொள்கை” என்ற – எல்லாமே “ஒரே குடை யின் கீழ், ஒரே குடும்பத்தின் கீழ்” இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு சவாலாகியுள்ள ஒரு விவகாரமாகும்.
2009இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன், தமிழர்களின் தனியான அரசி யல் களத்தையும் மூடிவிட்டதாகவே அரசாங்கம் கருதியிருந்தது.
ஆனால், கொழும்புக்கு மாற்றான, தமிழரின் அரசியல் கேந்திர நிலையம் ஒன்று மீளப் பிறப்பெடுப்பதை, அரசாங்கத்தினால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
வட மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட தும், வடக்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளையும், தலைவர்களையும் அரசாங்கத்தி னால், தடுக்க முடியவில்லை.
போருக்குப் பின்னர், வடக்கை அபிவிருத்தி செய்து சாதனை செய்து விட்டோம் என்று பிரகடனப்படுத்திய அரசாங்கமே, இவையனைத்தையும் வந்து பார்க்கும்படி வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இத்தகைய நிலையில், வடக்கின் மீதான வெளிநாடுகளின் கரிசனையையும், வடக்கு மாகாண சபையுடனான வெளிநாடுகளின் அதிகாரபூர்வமான தொடர்புகளையும் அறு த்தெறிய முடியாத நிலை ஒன்று உருவாகியுள்ளது.
அதுவும், இதற்கு முன்னர் ஒரு எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு கூறும் கருத்துக்களுக்கும், வடக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் உள்ள அரசு ஒன்று கூறும் அதிகாரபூர்வமான கருத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருக் கும்.
தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசின் மூலம் வெளிப்படுத்தப்படும் வாய்ப்பு முதல் முறையாக தமிழர்களுக்கு கிடைத்துள்ளது.
அதைப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு நாடுகளும் முனைகின்றன.
அதேவேளை, இந்த வாய்ப்பைத் தமிழர் தரப்பும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் முக்கியமானது.
இதனை இரண்டு விதமாக மேற்கொள்ளலாம்.
முதலாவது, வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது.
இரண்டாவது, தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான தளமா கப் பயன்படுத்திக் கொள்வது.
வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் வரையறுக்கப்பட்டளவுக்கே மாகாண சபையால் பங்காற்ற முடியும்.
ஏனென்றால், மாகாண சபைக்கு நிதி அதிகாரம் கிடையாது.
மாகாண சபைக்குத் தேவையான நிதியை திரட்டும் அதிகாரமில்லாததால், மத்திய அரசின் கையை ஏந்த வேண்டிய நிலை உள்ளது.
வெளிநாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதானாலும், மத்திய அரசின் ஊடாகவே அதைப் பெற வேண்டியுள்ளது.
இத்தகைய நிலையில், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கும் வடக்கு மாகாண சபை பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலையே ஏற்படும்.
ஆனால், வெளிநாடுகளுடனான தொடர்புகள் மூலம் தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கு இது முக்கிய தளமாக விளங்க முடியும்.
குறிப்பாக, தமிழர் தரப்பின் தற்போதைய அரசியல் இராஜதந்திரப் போருக்கான அடிஊற்றாக வடக்கு மாகாண சபை மாறத் தொடங்கியுள்ளது.
வடக்கிற்கான நிதியை கட்டுப்படுத்துவது போன்று இதனை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது.
அரசாங்கத்தினால் இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத போதிலும், வடக்கு மாகாண சபைக்கும், வெளியுலகிற்குமான நெருக்கம் அதிகரிப்பதை அரசாங்கத்தினால் வேடிக்கை பார்ப்பதை விட வேறேதும் செய்ய முடியாது.
போருக்குப் பிந்திய நான்கு ஆண்டுகளை யும் அரசாங்கம், அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு, பொறுப்புக்கூறல், புனர்வாழ்வு, புனரமைப்பு, ஜனநாயகம், பாதுகாப்பு, சுதந்திரம் என்று வடக்கிலுள்ள மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் – சாதகமான முறையில் தீர்க்கும் முயற்சியில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியிருந்தால், கொழும் பிலும், யாழ்ப்பாணத்திலும், இருவேறு அதிகார மையங்கள் உருவாகியிருக்க முடி யாது.
ஒற்றையாட்சி என்று அரசாங்கம் கூவிக் கூவி, நடத்திய இனவாத அரசியல் வியாபாரம் தான், மீண்டும் யாழ்ப்பா ணத்தை இலங்கையின் இரண்டாவது அரசியல் கேந்திர மையமாக உருவாக்கியு ள்ளது.
இந்த இரண்டாவது அரசியல் கேந்திர மையத்தின் மீள் எழுச்சியின் விளைவு, இலங்கை அரசுக்கு சாதகமானதொன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
-ஹரிகரன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக