ஞாயிறு, 17 நவம்பர், 2013

"வணக்கம்" நீக்­கப்­பட்­டது ஏன்? ஊட­க­வி­ய­லாளர் கேள்வி

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்­கி­விட்டு "ஆயு­போவன்" என்ற சிங்­களப் பதத்தை தமிழில் எழு­தப்­பட்­டது ஏன்? என்று வெளி­நாட்டு தமிழ் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதி­ல­ளித்தார். பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் அழ­கான தமிழில் "வணக்கம்" என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தற்கு மேலாக "ஆயு­போவன்" என்ற சிங்­கள வார்த்தை தமிழில் ஒட்­டப்­பட்­டுள்­ளது. இது ஏன் என்று அந்த ஊட­க­வி­யலாளர் கேள்வி எழுப்­பினார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரி­பால டி சில்வா பதி­ல­ளித்த பின்னர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அந்த ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து "நீங்கள் வேண்­டு­மென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்" என்று குறிப்பிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல