புதன், 29 ஜனவரி, 2014

வயிற்றுப் புண்களுக்கு மருந்தாகும் வெங்காயம்

வெங்காயம் இது இல்­லாத உணவே கிடை­யாது. வெங்­காயம் என்­பதை பிரித்தால் வெண்மை சக காயம் என வரும். காயம் என்றால் உடல். “வெம்மை உட­லுக்கு உஷ்­ணத்தை தரு­வது. உஷ்ணம் இல்­லா­விடில் மரணம் சம்­ப­விக்கும். இறந்து போனால் உடல் உஷ்ணம் இல்­லாமல் குளிர்ந்து விடும். அல்­லிசின் என்ற வேதிப் பொருள் அதிகம் உண்டு. வயிற்­றி­லுள்ள பூச்­சி­களைக் நீக்கக் கூடி­யது. சக்­க­ரையைக் குறைக்கக் கூடிய தன்மை உண்டு. நுரை­யீரல் சம்­பந்­தப்­பட்ட நோய்­களை குறைக்கக் கூடி­யது. நுண்­கி­ரு­மி­களை போக்கக் கூடி­யது. பூஞ்சைக் காளான்­களை போக்கும். வயிற்­றி­லுள்ள காற்­றினை சமப்­ப­டுத்தக் கூடி­யது. பூச்­சிகள், விஷக்­க­டிக்கு மருந்­தாக பயன்­ப­டு­கின்­றது. வயிற்­றி­லுள்ள புண்­களை ஆற்றக் கூடி­யது.



வெங்­காயம் 2 வகை உண்டு. பெரிய வெங்­காயம், சின்ன வெங்­காயம். சின்ன வெங்­கா­யத்தில்; காரம் அதிகம் உண்டு;. சின்ன வெங்­கா­யத்தை சிறு துண்­டு­க­ளாக வெட்டி எடுத்து நெய்­யிலே பொன்­னி­ற­மாக வதக்கி உப்பு போட்டு சாதத்­துடன் சுடச் சுடச் கலந்து வெறு வயிற்றில் சாப்­பிடும் போது இரத்­தத்­தோடு கலந்த சீத­பேதி, அல்சர் போன்­ற­வற்றை போக்கக் கூடி­யது. வெங்­கா­யத்தை வெட்டி ஆறாத புண்­க­ளின் மேல் வைத்தால் புண்கள் ஆறும். வெங்­கா­யத்தை சூடு படுத்தி நசுக்கி கட்­டி­களின் மேலே வைத்து கட்டும் போது உடை­யாத கட்­டிகள் கூட உடைந்து விடும். நச்­சுக்கள், சீழ், இரத்தம் வெளி­யேறி கட்­டிகள் ஆறும். கிரு­மி­களை நீக்கக் கூடி­யது. வலியைக் குறைத்து வலி நிவா­ர­ணி­யாக பயன்­ப­டு­கின்­றது. வயிற்றுக் கடுப்பை குறைக்கும். (சுருக்கு பிடித்த தன்மை ) வெங்­காயம் சக்­கரை நோய்க்கு ஒரு துணை மருந்­தாக செயற்­ப­டு­கின்­றது.

வெங்­கா­யத்தை மிக்­ஸியில் அரைத்து எடுத்து பிழிந்து சாற்றை எடுக்­கவும். வெங்­காயச் சாற்­றுடன் தேன் சேர்த்து பரு­கவும். பெரி­ய­வர்­க­ளுக்கு 50மில்­லியும், 12 வயது குழந்­தை­க­ளுக்கு 25 மில்­லியும், 3 வய­திற்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளிற்கு துளசி, கற்­பூ­ர­வள்ளியுடன் கொடுக்­கலாம். சளியை கரைத்து எடுக்கும். ஆஸ்­துமா, மூச்சு முட்டல் நோயைக் குறைக்கக் கூடி­யது. வலியைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஆஸ்­து­மா­விற்கு வெங்­காயம் நல்ல மருந்து என world Health Organaization ஆராய்ச்­சி­யா­ளர்கள் அனு­ம­தித்­துள்­ளார்கள். தினமும் 50 மில்லி

வெங்­கா­யச்­சாறு சாப்­பிட்டு வந்தால் சக்­கரை நோய் குறையும் வெங்­கா­யத்தை சாறு எடுத்து 20 மில்லி – 50 மில்லி பருகும் போது இரத்தம் உறைந்து போதலை தடுக்கும். 50 கிராம் வெங்­கா­யத்தை தினமும் சாப்­பிடும் போது வெங்­காயம் உரிக்கும் போது மாரடைப்பு கட்டுப்படும்.கண்ணில் தண்ணீர் வரு­கின்­றது என கூறு­வார்கள். ( 5 அல்­லது 10 நிமிடம் வெங்­கா­யத்தை நீரில் ஊற விட்டு பின்பு உரித்தால் கண்ணில் நீர் வராது.) வெங்­காய சதையை அரைத்து தயிரில் சேர்த்து குளிப்­ப­தற்கு முன்னால் தலை, மண்­டை­யோட்டில் தடவி தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகு போகும். தலை குளிர்ச்சி ஏற்­படும். கண்கள் எரிச்சல் குறையும். ஆரோக்­கி­ய­மான நிலை பெறும். வெங்­கா­யத்தை துண்டு செய்து இரண்­டாக வெட்டி வண்டு, தேள் கடித்த இடத்தில் தேய்த்தால் வலி போகும். வெங்­காயம் கண்­க­ளிற்கு இரு­ம­லுக்கு, சளிக்கு, ஜீரத்­திற்கு நல்ல மருந்­தாகும்.

வெங்­காயத் தேநீர்

வெங்­காய விதை நாட்டு மருந்துக் கடை­களில் கிடைக்கும். மாத­வி­லக்கு ஒழுங்­காக வரா­த­வர்கள் வெங்­கா­யத்தை பச்­சை­யாக சாப்­பி­டு­வது நல்­லது. நீரில் விதையை போட்டு கொதிக்க விட்டு சீனி சேர்த்து வடி கட்டி பருகும் போது இரத்த மூலம் மேக நோய், சிறு­நீ­ருடன் விந்து வெளி­யாதல், போன்­றவை தீரும். காலை, மாலை சாப்­பிடும் போது இரத்த மூலம், மேக நோய் குண­மாகும். . ஒரு­வ­ருக்கு ஒரு நாளைக்கு 5கிராம் - 10கிராம் விதை பயன்­ப­டுத்­தலாம். ஆண்­மையை அதி­க­ரிக்கக் கூடி­யது. விந்­த­ணுக்­களை அதி­க­ரிக்கும்.

வெங்காயத்தாள் கஷாயம்

வெங்காயத்தாளை துண்டு துண்டாக்கி நீரில் கொதிக்க விட்டு கொத்தமல்லி பொடி, வெந்தய பொடி சேர்த்து வடி கட்டி பருகும் போது மூலநோய் , உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், 9 வகையான மூலங்களும் குணமாகும்

நிரஞ்சனா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல