செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை 'ஆல் ரைட், குட்நைட்' இல்லையாம்

கோலாலம்பூர்: விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு விமானி கடைசியாக கூறிய வார்த்தை என்று புதிதாக ஒன்றை மலேசியா தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 2 வார தேடலுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இந்நிலையில் மலேசிய அரசு புதிய தகவலை அளித்துள்ளது.



மலேசிய விமானத்தின் துணை விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை கடைசி முறையாக தொடர்பு கொண்டபோது ஆல் ரைட், குட்நைட் என்ற வார்த்தைகளை தெரிவித்ததாக முன்பு கூறப்பட்டது.

மலேசிய விமானத்தின் விமானி அறையில் இருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு கடைசியாக தெரிவிக்கப்பட்ட வார்த்தை குட்நைட் மலேசியன் 370 என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமானிகள் அறையில் கடைசியாக பதிவான பேச்சுகளை பயணிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்குமாறு மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குட்நைட் மலேசியன் 370 என்று கூறியது மலேசிய விமானத்தின் கேப்டனா, துணை விமானியா என்று விசாரணை நடந்து வருகிறதாம். முன்னதாக ஆல்ரைட் குட்நைட் என்ற வார்த்தைகளை துணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது தெரிவித்ததாக மலேசியா ஏர்லைன்ஸ் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல