செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தமிழ் பெண் ஊடகவியலாளர் அகால மரணம்!

இளம் ஊடகவியலாளர் மேரி ஏன் ஜான்ஸி ஜெயபிரகாஷ் அகால மரணமானார். இறக்கும்போது இவருக்கு வயது 26 ஆகும்.



தினகரன் வாரமஞ்சரி, தினகரன் யாழ் பதிப்பு, தமிழ்நாதம் ஆகிய பத்திரிகைகளில் சிறிது காலம் பணியாற்றிய இவர் இத்துறையில் காலடி எடுத்து வைத்த குறுகிய காலத்துக்கு உள்ளாகவே சிறந்த பத்திரிகையாளராக பெயரை நிலைநாட்டிக் கொண்டார்.

இவர் சுடர் ஒளி பத்திரிகையில் ஆரம்ப பணிகளை முன்னெடுத்திருந்தார்.

கொழும்பு இதழியல் கல்லூரியில் ஊடகவியல் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்துள்ள இவர் வட மாகாணத்தின் செய்திகளை சேகரிக்கின்றமையில் முழுமூச்சுடன் செயற்பட்டார்.

நண்பி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நண்பர்களுடன் வவுனியா குளத்தில் தோணியில் சவாரியில் ஈடுபட்டிருந்தபோது தோணி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மரணம் நேர்ந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல