வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் அங்க அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.
1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி லண்டனில் உள்ள வால்வொர்த் நகரில் சாள்ஸ்க்கும் ெஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவன் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்றோர்களது திருமண வாழ்க்கை முறிந்தது.
பெற்றோர் இருவரும் மேடை இசைக் கலைஞர்கள் ஆவர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தந்தை குடித்தே தீர்த்தார். ஒரு நாள்மேடையில் பாடும்போது சாப்ளினின் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டது. அவளால் பாட முடியவில்லை. அதனால் ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டனர். அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள் ஹென்னா. அப்போது ஐந்து வயது சிறுவன் சார்லி சாப்ளின் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!
தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கை களை அசைத்து நடனமாடத் தொடங்கி னான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவனான சார்லி சாப்ளின் உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ சார்லி சாப்ளினை பாடச் சொல்லி கூச்சலிட்டது!
ஆனால் சார்லி சாப்ளினோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள்! சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான் சார்லி சாப்ளின். கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி எழுந்தது.
சார்லி சாப்ளின் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பாடசாலை ஒன்றில் வளர்ந்தான். சார்லி சாப்ளினின் பன்னிெரண்டாவது வயதில், அவனது தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி இறந்தார். தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி Cane Hill Asylum என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
சார்லி சாப்ளின் பத்து வயதாக இருந்த போது ஒரு பூனையாக நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். 1903ஆம் ஆண்டில் Jim> A Romance of Cockayneநாடகத்தில் நடித்தார். ஷெர்லக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து Casey's Court Circus நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.
1912ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 இல் நாடகக் குழுவொன்றுடன் சார்லி சாப்ளின் ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டார். பின்னர் அங்கேயே தங்கிவிட தீர்மானித்தார்.
அவர் நடித்த முதலாவது ஊமைப்படம் Making A Living என்ற பெயரில் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் பெரிய வரவேற்பு எதனையும் பெறவில்லை. அதே ஆண்டில் வெளிவந்த Kid Racesat Venice என்ற திரைப்படத்தில் தான் விரும்பியபடி நடிப்பதற்கு சார்லி சாப்ளினுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதில்தான் சார்லி சாப்ளின் எவராலும் மறக்க முடியாத தனது விநோத ஆடைகளுடன் முதன் முதலாக காட்சியளித்தார். பை போன்ற நீளக் காற்சட்டை, மாற்றி அணிந்த சப்பாத்துக்கள், குட்டையாக கத்தரிக்கப்பட்ட மீசை, அழுக்குத் தொப்பி, கைத்தடி, தள்ளாடிய நடை முதலிய சார்லி சாப்ளினின் சிறப்பு சின்னங்கள் இத் திரைப்படத்திலேயேதான் முதன் முதலாக புகுத்தப்பட்டன. இவையே அவருக்கு மறையாத புகழைப் பெற்றுக்கொடுத்த சிறப்பு சின்னங்களாக அமைந்தன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது புகழ் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் விரைவாகப் பரவியது. ஆரம்ப காலத்தில் சார்லி சாப்ளின் தயாரித்து வெளியிட்ட குறுந்திரைப்படங்களில் புகழ்பெற்றவையாவன The Tramp (1915)>, One A.M.(1916)>, The Pawns Shop (1916)>, Behind The Screen (1916)>, The Rink (1916)>, Easy Street (1917)>, The Immigrant (1917)>, The Adventurer (1917)>, A Dog’s Life (1918)>, Shoulder Arms (1918)>, The Pilgrim (1919) ஆகியவையாகும். இவை அனைத்தும் அவராலேயே தயாரித்து இயக்கபட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சார்லி சாப்ளினின் முழுநீள திரைப்படங்களுள் The Kid (1921)>, The Gold Rush (1925)>, The Circus (1928)>, City Lights (1931) என்பன பெரும் வெற்றி பெற்றன.
சார்லி சாப்ளினின் முதல் பேசும் படம் 1940 ஆம் ஆண்டில் வெளியான The Great Dictator இது அடோல்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சார்லி சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். அவை ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார்.
சார்லி சாப்ளினின் படங்கள் சாதாரண மக்களால் மாத்திரமன்றி உலகின் பிரபல தலைவர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்டன. வின்ஸ்டன் சேர்ச்சில், லெனின், ஸ்டாலின், ஜவஹர்லால் நேரு, அடோல்ப் ஹிட்லர் போன்ற அக்கால உலகத் தலைவர்கள் சார்லி சாப்ளினின் திரைப்படங்களின் பிரத்தியேக பிரதிகளை வைத்துக்கொண்டு ஓய்வு நேரங்களில் பார்த்து மகிழ்ந்தனர். ஹிட்லர் எந்தளவு சார்லி சாப்ளினின் மீது பிரியம் வைத்திருந்தாரென்றால் தனது ஹிட்லர் மீசையை கூட சார்லி சாப்ளினை பின்பற்றியே வைத்திருந்தார்.
சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக Modern Times பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட் கொள்கைவாதி எனவும் சந்தேகிக்கப்பட்டார். அதனால் புலனாய்வு பிரிவிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் சார்லி சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சி எடுக்கப்பட்டது. சார்லி சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீடித்தார். 1952ஆம் ஆண்டில் சார்லி சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட புலனாய்வு பிரிவினர் Immigration and Naturali Zation Service உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார்கள். ஆதலால் அவர் இங்கிலாந்திலேயே தங்கும்படி நேர்ந்தது. பெரும்பாலும் சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972ஆம் ஆண்டில் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஒஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.
சார்லி சாப்ளின் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு மனைவிகளை மணந்தார். முதலாவது மனைவி மில்ட்ரெட் ஹாரிஸ் அவர்களுடனும் (ஒரு பிள்ளை), இரண்டாவது மனைவி லீட்டா கிரே அவர்களுடனும் (இரு பிள்ளைகள்), மூன்றாவது மனைவி போலெட் கொடாட் அவர்களுடனும் நான்காவது மனைவி ஊனா ஓ நீல் அவர்களுடனும் (எட்டு பிள்ளைகள்) வாழ்ந்தார். 1943ஆம் ஆண்டு ஜூன் பதினாறாம் திகதி சார்லி சாப்ளின் தனது 54 ஆம் வயதில் 17 வயது நிரம்பிய நான்காவது மனைவியான ஊனா ஓ நீலை மணந்தார். இத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர்.
1975 மார்ச் நான்காம் திகதி பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணி “சேர்” பட்டம் வழங்கி கௌரவித்தார். 1985ஆம் ஆண்டு பிரித்தானிய அரசா ங்கம் இவரது உருவத்தை தபால் தலை யில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு 1992ஆம் ஆண்டு “சாப்ளின்” என்ற பெயரில் ஒஸ்கார் விருது பெற்ற சேர் ரிச்சர்ட் அட்டென்பரோ என்பவரால் இயக்கி திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் அவரது மகள் ஜெரால்டின் சாப்ளின், சார்லி சாப்ளினின் தாயாக நடித்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
சார்லி சாப்ளின் 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் சுவிட்ஸர்லாந்தின் வேவே நகரில் இறந்தார்.
அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்
1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி லண்டனில் உள்ள வால்வொர்த் நகரில் சாள்ஸ்க்கும் ெஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவன் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்றோர்களது திருமண வாழ்க்கை முறிந்தது.
பெற்றோர் இருவரும் மேடை இசைக் கலைஞர்கள் ஆவர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தந்தை குடித்தே தீர்த்தார். ஒரு நாள்மேடையில் பாடும்போது சாப்ளினின் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டது. அவளால் பாட முடியவில்லை. அதனால் ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டனர். அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள் ஹென்னா. அப்போது ஐந்து வயது சிறுவன் சார்லி சாப்ளின் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!
தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கை களை அசைத்து நடனமாடத் தொடங்கி னான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவனான சார்லி சாப்ளின் உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ சார்லி சாப்ளினை பாடச் சொல்லி கூச்சலிட்டது!
ஆனால் சார்லி சாப்ளினோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள்! சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான் சார்லி சாப்ளின். கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி எழுந்தது.
சார்லி சாப்ளின் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பாடசாலை ஒன்றில் வளர்ந்தான். சார்லி சாப்ளினின் பன்னிெரண்டாவது வயதில், அவனது தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி இறந்தார். தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி Cane Hill Asylum என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
சார்லி சாப்ளின் பத்து வயதாக இருந்த போது ஒரு பூனையாக நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். 1903ஆம் ஆண்டில் Jim> A Romance of Cockayneநாடகத்தில் நடித்தார். ஷெர்லக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து Casey's Court Circus நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.
1912ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 இல் நாடகக் குழுவொன்றுடன் சார்லி சாப்ளின் ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டார். பின்னர் அங்கேயே தங்கிவிட தீர்மானித்தார்.
அவர் நடித்த முதலாவது ஊமைப்படம் Making A Living என்ற பெயரில் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் பெரிய வரவேற்பு எதனையும் பெறவில்லை. அதே ஆண்டில் வெளிவந்த Kid Racesat Venice என்ற திரைப்படத்தில் தான் விரும்பியபடி நடிப்பதற்கு சார்லி சாப்ளினுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதில்தான் சார்லி சாப்ளின் எவராலும் மறக்க முடியாத தனது விநோத ஆடைகளுடன் முதன் முதலாக காட்சியளித்தார். பை போன்ற நீளக் காற்சட்டை, மாற்றி அணிந்த சப்பாத்துக்கள், குட்டையாக கத்தரிக்கப்பட்ட மீசை, அழுக்குத் தொப்பி, கைத்தடி, தள்ளாடிய நடை முதலிய சார்லி சாப்ளினின் சிறப்பு சின்னங்கள் இத் திரைப்படத்திலேயேதான் முதன் முதலாக புகுத்தப்பட்டன. இவையே அவருக்கு மறையாத புகழைப் பெற்றுக்கொடுத்த சிறப்பு சின்னங்களாக அமைந்தன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது புகழ் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் விரைவாகப் பரவியது. ஆரம்ப காலத்தில் சார்லி சாப்ளின் தயாரித்து வெளியிட்ட குறுந்திரைப்படங்களில் புகழ்பெற்றவையாவன The Tramp (1915)>, One A.M.(1916)>, The Pawns Shop (1916)>, Behind The Screen (1916)>, The Rink (1916)>, Easy Street (1917)>, The Immigrant (1917)>, The Adventurer (1917)>, A Dog’s Life (1918)>, Shoulder Arms (1918)>, The Pilgrim (1919) ஆகியவையாகும். இவை அனைத்தும் அவராலேயே தயாரித்து இயக்கபட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சார்லி சாப்ளினின் முழுநீள திரைப்படங்களுள் The Kid (1921)>, The Gold Rush (1925)>, The Circus (1928)>, City Lights (1931) என்பன பெரும் வெற்றி பெற்றன.
சார்லி சாப்ளினின் முதல் பேசும் படம் 1940 ஆம் ஆண்டில் வெளியான The Great Dictator இது அடோல்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சார்லி சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். அவை ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார்.
சார்லி சாப்ளினின் படங்கள் சாதாரண மக்களால் மாத்திரமன்றி உலகின் பிரபல தலைவர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்டன. வின்ஸ்டன் சேர்ச்சில், லெனின், ஸ்டாலின், ஜவஹர்லால் நேரு, அடோல்ப் ஹிட்லர் போன்ற அக்கால உலகத் தலைவர்கள் சார்லி சாப்ளினின் திரைப்படங்களின் பிரத்தியேக பிரதிகளை வைத்துக்கொண்டு ஓய்வு நேரங்களில் பார்த்து மகிழ்ந்தனர். ஹிட்லர் எந்தளவு சார்லி சாப்ளினின் மீது பிரியம் வைத்திருந்தாரென்றால் தனது ஹிட்லர் மீசையை கூட சார்லி சாப்ளினை பின்பற்றியே வைத்திருந்தார்.
சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக Modern Times பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட் கொள்கைவாதி எனவும் சந்தேகிக்கப்பட்டார். அதனால் புலனாய்வு பிரிவிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் சார்லி சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சி எடுக்கப்பட்டது. சார்லி சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீடித்தார். 1952ஆம் ஆண்டில் சார்லி சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட புலனாய்வு பிரிவினர் Immigration and Naturali Zation Service உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார்கள். ஆதலால் அவர் இங்கிலாந்திலேயே தங்கும்படி நேர்ந்தது. பெரும்பாலும் சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972ஆம் ஆண்டில் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஒஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.
சார்லி சாப்ளின் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு மனைவிகளை மணந்தார். முதலாவது மனைவி மில்ட்ரெட் ஹாரிஸ் அவர்களுடனும் (ஒரு பிள்ளை), இரண்டாவது மனைவி லீட்டா கிரே அவர்களுடனும் (இரு பிள்ளைகள்), மூன்றாவது மனைவி போலெட் கொடாட் அவர்களுடனும் நான்காவது மனைவி ஊனா ஓ நீல் அவர்களுடனும் (எட்டு பிள்ளைகள்) வாழ்ந்தார். 1943ஆம் ஆண்டு ஜூன் பதினாறாம் திகதி சார்லி சாப்ளின் தனது 54 ஆம் வயதில் 17 வயது நிரம்பிய நான்காவது மனைவியான ஊனா ஓ நீலை மணந்தார். இத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர்.
1975 மார்ச் நான்காம் திகதி பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணி “சேர்” பட்டம் வழங்கி கௌரவித்தார். 1985ஆம் ஆண்டு பிரித்தானிய அரசா ங்கம் இவரது உருவத்தை தபால் தலை யில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு 1992ஆம் ஆண்டு “சாப்ளின்” என்ற பெயரில் ஒஸ்கார் விருது பெற்ற சேர் ரிச்சர்ட் அட்டென்பரோ என்பவரால் இயக்கி திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் அவரது மகள் ஜெரால்டின் சாப்ளின், சார்லி சாப்ளினின் தாயாக நடித்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
சார்லி சாப்ளின் 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் சுவிட்ஸர்லாந்தின் வேவே நகரில் இறந்தார்.
அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக