ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

முக்கலை வித்தகன் மைக்கல் ஏஞ்சலோ

‘வித்­தகன் தொட்டு விட்டால் விறகு கட்டை கூட வீணை­யாக மாறும்’ என்று ஒரு கவி­தையில் சொல்­லப்­பட்­டுள்­ளது. இக் கூற்று இன்றும் உல­கமே அதி­க­மாக மெச்­சு­கின்ற ஒரு கலை­ஞ­னுக்குப் பொருந்தும். அப்­ப­டிப்­பட்ட ஒரு முக்­கலை வித்­தகன் மைக்கல் ஏஞ்­சலோ என்று கூறின் அது மிகை­யா­காது. இவ்­வாறு இவரை புகழக் காரணம் 16ஆம் ´நூற்­றாண்டின் இவ­ரு­டைய கலை­வெ­ளிப்­பா­டுகள் இன்றும் உல­கையே ஸ்பரி­சித்­துக் ­கொண்­டி­ருப்­பதால் ஆகும்.



மத்­திய காலத்தின் சிறந்த கைராசிக்காரர் என மைக்கல் ஏஞ்­சலோ கரு­தப்­பட்டார். மறு­ம­லர்ச்சிக் காலத்தில் ஐரோப்­பாவில் காணப்­பட்ட சமூக நிலை­யினை அழுத்­த­மான காட்­சி­க­ளாக வடி­கட்­டினார். சம கால மற்­று­மொரு கலை­ஞ­னான ரபிலின் கொள்­கை­களின் ஒத்த தன்­மை­க­ளையே தானும் கொண்டு விளங்­கினார். எனினும் மைக்கல் ஏஞ்­ச­லோ­விற்கு தனி­யான பெரு­ம­திப்பு காணப்­பட்­டது. காரணம், அக்­கால சமூகம் மறுத்த பல மறை­வான செய்­தி­களை தன் ஆற்­றல்கள் மூலம் வெளிக்­காட்­டி­ய­மை­யினால் எனலாம். இவர் சிறந்த பல இள­வ­ர­சர்­க­ளுக்கு குரு­வாக இருந்­த­துடன், பல இலக்­கிய வாதி­களை எதி­ரி­க­ளா­கவும் சம்­பா­தித்­துக்­கொண்டார். ஒவ்­வொ­ரு­ வ­ருக்கும் பல முன்­னோ­டிகள் பல துறை­க­ளிலும் பெருகி இருக்கும் போதும் மைக்கல் ஏஞ்­சலோ தன் ´தன்மான மனப்­பான்­மையின் கார­ண­மாக தன்னைத் தானே தயார் செய்து கொண்டார்.

மைக்கல் ஏஞ்­சலோ (1476-–1564) தன் வாழ்வில் சிற்பம், ஓவியம், நிர்­மாணம் எனும் முக்­க­லை­க­ளிலும் தலை­சி­றந்த தள­ப­தி­யாகத் திகழ்ந்­தது பல­ருக்குத் தெரி­யாது.

ஒரு சிற்­பி­யாக…

மைக்கல் ஏஞ்­சலோ தன் கலை எனும் மரத்தில் ஒரு விழு­தாக சிற்­பத்தை தெரி­வு­செய்து கொண்டார். இவர் பெரும்­பாலும் சலவைக் கற்­களில் சிலை­களைச் செதுக்­கினார். மனித உடல்­க­ளையே இவர் தன் சிலை­களில் அதி­க­மாக வெளிக்­காட்­டினார். மைக்கல் ஏஞ்­ச­லோவால் செதுக்­கப்­பட்ட சிற்­பங்கள் போற்றத்தக்­கது. குறிப்­பாக கைதியின் சிலையில் தன் சுதந்­தி­ரத்தைப் போராடும் ஒரு­வனின் நிலை­யாக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இக் கலைஞன் தனி­ம­னித உருச்­சி­லை­களை வடிப்­பதில் கைதேர்ந்­தவர் எனலாம். இவரை ஒரு ஓவி­ய­னாகக் காணும் உலக மக்­களை தன் சிற்­பங்­க­ளாலும் பிர­மிக்க வைக்­கிறார். தனி மனித உடல் நிலை­யினை போற்றும் வண்ணம் வடி­வ­மைப்­பதில் யாருக்கும் நிக­ரற்­றவர். தன் சிற்­பங்­களின் பூரணம் மக்கள் மத்­தியில் துணி­வு­மிக்க கருத்­துக்­களை உண்­டாக்கும் வண்ணம் மருட்­சி­யூட்டும். மைக்கல் ஏஞ்­ச­லோவின் சிற்­பங்­களில் ஆக்­கப்­பூர்­வ­மிக்க அபூர்வம் தென்­படும். இலக்­கி­யமே உரு­வா­கி­யதாய் படைப்­புக்கள் பேசப்­படும்.

1501ஆம் ஆண்டு இவரால் செதுக்­கப்­பட்ட டேவிடின் சிலை நேர்­மை­யான மனிதன் எனும் கருத்தை உணர்த்­து­கி­றது. இச் சிலை மைக்கல் ஏஞ்­ச­லோவால் செதுக்­கப்­பட்ட முதல் சிலை என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது. 1505இல் மைக்கல் ஏஞ்­ச­லோவால் செதுக்­கப்­பட்ட வண்­ண­ம­ய­மான சிற்பம் ஒன்­றுதான் இரா­ணுவ வீரனின் சிலை எனப்­ப­டு­கி­றது. இது அளவில் மிகப்­பெ­ரிய உரு­வ­மாகும். பூர­ண­மாக்­கப்­பட்ட செதுக்கல் கலை­க­ளாக மோசஸ், இரண்டு அடி­மைகள் என்­ப­ன­வற்றைக் கூறலாம். இவை இன்று பாரிஸில் Louvre அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளது. மைக்கல் ஏஞ்­சலோ தன் சிற்­பங்­களை மிகவும் மதிப்பு கொடுத்து செதுக்­கினார். இரண்டு போர் வீரர்கள் சிலை இரவு, பகல், முன் விடியல், அரை இருள் போன்ற இயற்கை உணர்­வுகள் கூடிய தன்­மை­களை வெளிக்­காட்­டு­கின்­றது. இவரால் செதுக்­கப்­பட்­டதும் புகழ் மாலை சூட்­டப்­பட்­ட­து­மான சிலை தான் கன்­னித்­தாயும் இறந்த பிள்­ளையும் சிலை­யாகும். இச் சிலை தாயின் அதீத இரக்­கத்தை அப்­ப­டியே படி­ய­வைத்­துள்­ளது எனப்­ப­டு­கி­றது.

மைக்கல் ஏஞ்­ச­லோவின் பெரும்­பா­லான சிலை­களை நிர்­வா­ணத்­தன்­மை­யுடன் செதுக்­கி­யுள்­ளமை அவர்தம் சிலை­க­ளுக்­கே­யுள்ள தனிச் சிறப்பு என்பர். இவ­ரு­டைய ஒவ்­வொரு சிலை­களும் உலக விருப்பு வெறுப்­புக்­களை அப்­ப­டியே பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஒரு ஓவி­ய­னாக…

மைக்கல் ஏஞ்­ச­லோவின் சிற்­பங்­களைப் போலவே ஓவி­யங்­களும் உணர்வுப் பூர­ண­மா­னவை. இவ­ரு­டைய முன்­னைய ஓவி­யங்­களில் ஒன்­றான பரி­சுத்த குடும்பம் எனும் ஓவி­யத்தில் வலி­மை­யான தசை நார்­களை மிகவும் நுணுக்­க­மாக வரைந்­துள்­ளமை சிற ப்­பம்­ச­மாகும். இவ­ரு­டைய உல­கப்­புகழ் பெற்ற ஓவி­யங்கள் பலவும் பெரிய சுவ­ரோ­வி­ய­மாகத் தீட்­டப்­பட்­டுள்­ளது. வெறு­மை­யாக இருந்த பெரிய சுவ­ரு­களில் தான் வரைந்த உரு­வங்கள் மூலம் அவ்­வோ­வி­யங்­களே உயிர்ப் பெற்­றது எனலாம்.

1504இல் மைக்கல் ஏஞ்­ச­லோவால் புனைந்து ஒப்­பனை செய்­யப்­பட்ட ஓவியம் ஒன்று ப்லோரன்சில் பெலசோ வெசி­யோ வில் இன்றும் மங்­காமல் உள்­ளது. அங்கு ஒரு பக்க சுவரில் மைக்கல் ஏஞ்­ச­லோவின் ஓவி­யங்­களும் எதிர் சுவரில் லெனாடோ டாவின்­சியின் ஓவி­யமும் வரை­யப்­பட்­டுள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. 1508இல் செஸ்டின் சபேல் எனும் கட்­டடம் வெறு­மனே காணப்­பட்­டது.

அக் காலத்தில் குறித்த அக்­கட்­ட­டத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த 7ஆம் கமலன் பாதி­ரியின் அனு­ம­தி­யுடன் அக்­கட்­டட அறைகளின் உட் கூரை­களில் தன் கைவண்­ணத்தைக் காட்ட திட்­ட­மிட்டார். இதன் பிர­காரம் பழைய விவி­லிய வேதத்தில் வந்த மோசஸின் சம்­ப­வங்­களை காட்­சி­க­ளாக்கத் திட்­ட­மிட்டார். சுமார் 4½ வரு­டங்கள் கடு­ மை­யாக ஈடு­பட்டு அவ் ஓவி­யத்தை பூர­ண­ மாக்­கினார். 600 அங்­குல சதுர பரப்­பினைக் கொண்ட சுவ­ருக்குள் 9 மரச்­சட்­டங்­களில் அவ் ஓவியம் தீட்­டப்­பட்­டது.

அக் காட்­சி­களில் தீர்க்­க­த­ரி­சிகள், சாதா­ரண மனிதர், அடி­மைகள் மற்றும் கிறிஸ்­தவ சமய மூதா­தையர் போன்ற மனித உருக்­களால் அவ்­வோ­வியம் முழு­மை­யா­கி­யது. மட்­டுமன்றி, அங்கு வரை­யப்­பட்ட ஒவ்­வொரு உரு­வத்­திலும் தலை­சி­றந்த உயி­ரோட்டம் இருந்­தது. இவ் ஓவியம் மைக்கல் ஏஞ்­ச­லோ­விற்கு நிக­ரான கலைஞன் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அள­விற்கு தத்­ரூ­ப­மா­ன­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

1534இல் மைக்கல் ஏஞ்­ச­லோவின் ஓவி­யத்தில் மற்­று­மொரு விஸ்­வ­ரூ­ப­மாக இறுதித் தீர்ப்பு சுவ­ரோ­வி­ய­மா­கி­யது. இச் சுவ­ரோ­வி­யத்தில் ஒவ்­வொரு மனித உணர்­வு­க­ளு க்கும் இடையில் நவ­ரச உணர்­வு­களும் முட்­டி­மோதும் இயல்பை அப்­ப­டியே தீட்­டி­யு ள்ளார். இது தவிர வெள்ளம், தீர்க்­க­த­ரிசி, டேனியல், டெல்பிக் சைபில் போன்ற பல ஓவி­யங்­களும் இவ­ரு­டைய படைப்­புக்­களுள் இன்றும் பேசப்­ப­டு­பவை.

ஒரு நிர்­மா­ணி­யாக…

சம­கால கலை­ஞர்கள் பலர் மைக்கல் ஏஞ்­ச­லோவை ஒரு இயற்கை பித்தன் என்று சொல்வர். இவர் 1520களில் லோரன்ஸோ திருக்­கோ­யிலை இரு கல்­ல­றை­களை வைத்து நிர்­மா­ணிக்கத் தொடங்­கினார். இதன் பின் சொற்ப காலத்­தி­லேயே அத் திருக்­கோ­யிலில் மருத்­துவ நிலையம் ஒன்றும் நிறு­வப்­பட்­டது. இடையில் 1535 மற்றும் 1546களில் ஒரு ஒப்­பந்தம் அடிப்­ப­டையில் ரோமின் கபி­டோலின் ஹில் ஆல­யத்தை மீள் திட்­ட­மிட்டு நிர்­மா­ணிக்க வேண்டி ஏற்­பட்­டது. மட்­டு­மன்றி இத் திருக்­கோ­யிலை மரபு ரீதியில் நிர்­மா­ணிக்கத் திட்­ட­மிட்டு சிறிது காலத்­தி­லேயே மைக்கல் ஏஞ்­சலோ மர­ணித்­த­மை­யினால் அக் கோயிலின் நிர்­மாணப் பணிகள் அவ ரால் பூரணம் காண­வில்லை.

3ஆம் போல் பாதி­ரியின் செயல் துறைக் கிணங்க ரோமின் பார்னஸ் இடம் நிர்மாணிக்­கப்­பட்­டது. மைக்கல் ஏஞ்­ச லோ புனித பீட்டர்ஸ் தேவா­ல­யத்தை நிர்மாணிக்கத் தலைமைத் தாங்­கினார். இது மறு­ம­லர்ச்சிக் காலத்தில் நிர்மாணிக் கப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில் என்றும் சொல்லப்படுகிறது. மைக்கல் ஏஞ்சலோவால் பிராமனன்ட் திட்டம் மீள் மாதிரியாக்கப்பட்டது. இதன் படி உலகிலே தலைசிறந்த கோயில்களில் ஒன் றாக இக்கோயில் போற்றப்படுவதுடன் இக் கோயிலின் கவிகை மாடம் பலரும் வியக்கும் வண்ணம் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்மாணிப்பதில் முழு நேரக் கலைஞனாக மைக்கல் ஏஞ்சலோ செயற்பட்டமையினை பலரும் அறியமாட்டார்கள்.

இவ்வாறு முக்கலை வித்தகனான மைக்கல் ஏஞ்சலோ திருமணமாகாத ஒரு ஆண் மகன். தன் கலைப்படைப்புக்களால் உலகின் அன்பை முழுவதுமாகப் பெற்ற வர். மைக்கல் ஏஞ்சலோ ஒரு தீவிர சமய வாதி. இதனாலே தன் பெருவாரியான கலைப்படைப்புக்களை சமயச் சார்பாக மேற்கொண்டுள்ளார் எனலாம்.

அளவத்துகொடை -எம்.ஏ.ஷெரீன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல