ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கண்­களில் அடிக்­கடி கண் எரிச்­சல்கள் ஏற்­ப­டு­கி­றதா?

அப்­ப­டி­யானால் அதனை லேசாக எடுத்துக் கொள்­ளா ­தீர்கள். உங்கள் கண் இமை­க­ளுக்கு அடியில் இருக்கும் குழல்­களின் வழி­யாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவ­தையே உலர்ந்த கண்கள் என்று கூறு­கின்­றனர்.


குளிர் மற்றும் கோடைக்­கா­லத்தின் போது இந்த பிரச்­சினை இன்­னமும் தீவி­ர­மாக இருக்கும். அதற்கு காரணம், இக்­கா­லத்தில் நிலவும் வறண்ட காற்­றும்〪 வறண்ட வெப்­பமும் தான். கண்­களின் சரி­யான செயல்­பாட்­டிற்கு கண்ணீர் அவ­சி­ய­மா­ன­தாக உள்­ளது.

அதற்கு காரணம் கண் இமைகள் கண்­ம­ணி­க­ளோடு ஒன்­றிட கண்ணீர் ஒரு மச­கி­டு­த­லாக செயல்­ப­டு­கி­றது. இதனால் கண்­ம­ணிகள் ஈரப்­ப­தத்­துடன் இருக்க கண்ணீர் உத­வு­கி­றது. உலர்ந்த கண்கள் உங்கள் பார்வை திறனை குறைக்­கவும் வாய்ப்பு இருக்­கி­றது. சில நேரம் கண்­ம­ணி­க­ளுக்கு தீவிர பாதிப்பை உண்­டாக்­கி­விடும். இப்­படி குறை­யுள்ள பார்வை திற­னுடன் தினமும் செய்யும் வேலை­களை ஒழுங்­காக செய்ய முடி­யாது தானே சமீ­பத்­திய செய்தி அறிக்­கை­களின் படி 50 வய­துக்கு மேற்­பட்டோர் தான் இந்த உலர்ந்த கண்­களால் அதி­க­மாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

அதே போல் மாத­விடாய் பிரச்­சி­னைகள் உள்ள இள­வ­யது பெண்­களும் இந்த பிரச்­சி­னையால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதன் அறி­கு­றி­களை கண்­ட­றி­யுங்கள்:

• வறண்ட உணர்ச்சி அல்­லது கண் அரிப்பு.

• நாள் முழு­வதும் கண்­களின் எரிச்சல்.

• நாள் முடி­வ­டையும் போது சிவந்த மற்றும் சோர்ந்த கண்கள்.

• நாள் முடி­வ­டையும் போது தெளி­வான பார்வை இருப்­ப­தில்லை. ஆகவே கண்­களில் பிரச்சினை வந்த பிறகு சிகிச்­சையில் ஈடு­ப­டு­வதை விட〪 வரும் முன் காப்­பது தானே சிறந்­தது. அதனால் கடுமை­யான கோடைக்­கா­லத்­தி­லி­ருந்து கண்­களை காத்­திட உங்­க­ளுக்­கான சில டிப்ஸ்:

கண்­ணாடி அணி­யவும் : நிலைமை மோச­மாக போகும் பட்­சத்தில், ஒரு மருத்­து­வரை சந்­தி­யுங்கள். தூங்க செல்­வ­தற்கு முன் பயன்­ப­டுத்த ஐ-ட்­ராப்ஸை அவர் பரிந்­து­ரைப்பார்.

கூலிங் கண்­ணாடி : ஹீட்­ட­ருடன் சேர்ந்து ஈரப்­ப­த­மூட்­டி­யையும் பயன்­ப­டுத்­துங்கள். அதனால் வீட்டில் இருக்கும் காற்றில் போது­மான ஈரப்­பதம் நிலவும். கண்­க­ளு க்கு கூடுதல் ஈரப்­ப­தத்தை அளித்­திட, கண்­களை சுற்றி ஈரப்­ப­தத்தை உண்­டாக்கும் மற்றும் கண்­களை குளிர்ச்­சி­யாக வைத்துக் கொள்ளும் விசேட கண்­ணா­டியை அணிந்­தி­டுங்கள்

ஈரத்­துணி : பல மணி நேர வேலைக்கு பின், கண்கள் கன­மாக இருந்தால் வெப்­ப­மு­டைய கண்­களின் மேல் ஈரத்­து­ணியை சில நிமி­டங்­க­ளுக்கு வைத்­தி­டுங்கள். இத னால் கண்­களின் கண உணர்ச்சி குறையும். மேலும் வீட்டு சூழ்­நி­லையை ஈரப்­ப­தத்­துடன் வைத்­தி­டுங்கள். அதிலும் 30-லிருந்து 50 சத­வீ­தத்­திற்குள்.

மீன் : உங்கள் உணவில் ஒமேகா-3 கொழுப்­ப­மி­லங்கள் அல்­லது மீன் எண்ணெய் அடங்­கிய உண­வு­களை அதி­க­மாக சேர்த்துக் கொள்­ளுங்கள்

ஜூஸ் குடிக்­கவும் : அளவுக்கு அதிகமான பானங்களை பருகி நீர்ச்சத்துடன் இருங் கள்.

க்ரீன் டீ : எப்போதும் குடிக்கும் தேநீருக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது செவ்வந்திப்பூ டீயை குடித்திடுங்கள். இது கண்களுக்கு நன்மையை அளித்து சோர்வை தடுக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல