ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மத்திய கிழக்கிலிருந்து மலையக பெண்கள் மனமுடைந்து நாடு திரும்பும் நிலை மாற வேண்டும்

மலை­ய­கத்­தி­லி­ருந்து மத்­திய கிழ க்கு நாடு­க­ளுக்கு விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்கள் சென்று வந்த நிலைமை மாறி இன்று ஆயிரக்கணக்­கா­ன­வர்கள் பணி­பு­ரியும் காலம் உரு­வா­கி­யுள்­ளது. இவர்­களில் பெண்­கள்தான் அதிகம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.



பெண்கள் வெளி­நாடு செல்­வது ஒரு­வ­கை­யான மோகம் என்று ஒரு கால த்தில் கூறப்­பட்­டா­லும், அவர்கள் தமது பெற்­றோ­ரை­யும், கட்­டிய கண­வனை­யும், பெற்ற பிள்­ளை­க­ளை­யும், உற­வி­னர்­க­ளையும் விட்டுவிட்டு இதுவரை கண்­டி­ராத நாடு­க­ளுக்கு துணிந்து செல்­வ­தற்­கான கார­ணத்­தையும் எண் ணிப் பார்க்க வேண்டும். பெரும்­பா­லான தோட்­டங்­களில் கஷ்­டப்­பட்டு உழைத்தும் போதிய வரு­மானம் இல்­லா­ததால் பெண்கள் தமது குடும்­பத் தின் வறு­மையைக் கருத்திற்கொண்டு வெளி­நாட்­டுக்குச் சென்று உழைத்து அதன் மூலம் நிம்­ம­தி­யாக வாழலாம் என்ற நம்­பிக்­கை­யோ­டுதான் செல்­கின்­றார்கள். ஒரு சிலர் இரண்டு வருட காலத்­துக்குப் பிறகு சந்­தோ­ச­மாக நாடு திரும்­பி, மீண்டும் அதே நாட்­டுக்குப் போய், அதே இடத்தில் வேலை செய்து விட்டுத் திரும்பி வரு­வ­தையும் காணலாம். ஆனால், பலர் வெளி­நாட் டில் சொல்­லொண்ணாத் துன்­பத்தை அனு­ப­வித்து சம்­பளம் கூட கிடைக்­காமல் கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக வெறுங் கையோடு திரும்பி வரு­வ­தை யும் காண்­கிறோம்.

கவலை தரும் கண்ணீர் மல்கும் நிகழ்வுகள்

அண்மைக் கால­மாக வெளி­நா­டு­க­ளு க்குச் சென்று நாடு திரும்­பிய பெண்­களில் பலரின் அனு­பவம் சோகக் கதை­யாக இருப்­ப­தோடு கல் நெஞ்­சக்­கா­ரர்­க­ளையும் உருக வைக்கும் கண்ணீர் காவி­ய­மா­கவும் இருக்­கின்­றது. திரும்பி வந்த ஒரு பெண்ணின் தலையில் இரு ம்பு ஆணிகள் அடிக்­கப்­பட்டு துன்­பு­றுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக ஊட­கங்­களில் செய்திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இன் ­னொரு பெண் சூடு வைக்­கப்­பட்ட நிலையில் திரும்பி வந்­துள்ளார். சிலர் பாலியல் தொல்­லை­களில் சிக்கித் தவி த்து பாதி­யி­லேயே திரும்பி வந்­துள்­ளார் கள். வீட்டு வேலை கஷ்டம் என்­ப தால் வேலை செய்த வீட்டை வீட்டுத் தப்பி ஓடி­யுள்­ளார்கள். சிலர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு சிறை­வாசம் அனு­ப­வி­த்துள்ளார்கள். வேலை க்குச் செல்­லும்­போதே வீட்­டுக்­கா­ரர்கள் கடவுச்சீட்­டுக்­களை வாங்கி வைத்துக் கொண்டு வேறு இடங்­க­ளுக்கு வேலை க்குச் செல்ல முடி­யா­த­படி தண்­ட­னை­க­ளையும் பெற்­றுள்­ளார்கள்.

இவ்­வாறு வெளி­நா­டு­களில் பல­வி­த­மான கொடு­மை­க­ளுக்கு மத்­தியில் பணிப் பெண்­க­ளாகப் பணி­பு­ரிந்து அவ ர்கள் வீட்­டுக்கு அனுப்பி வைக்கும் பணத்தில் கண்­ட­படி குடித்துக் கும்­மா­ள­மிடும் கண­வன்­மார்­களும் இருக்­கின்­றார்கள். தாய்­மார்கள் தமது பிள்­ளைகள் படிக்க வேண்டும், நன்­றாக வீட்டைக் கட்ட வேண்டும் என்று வெளி­நாட்டில் வேலை செய்து கொண்டு கனவு காணும் வேளையில், “சின்ன வீடு­களை” வைத்துக் கொண்டு சீர­ழியும் கண­வன்­மார்­களால் வருடக்கணக்கில் வெளி­நாட்டில் பணி புரிந்தும் ஒன்றும் இல்­லாத நிலையில் இருக்கும் பெண்­களும் இருக்­கின்­றார்கள்.

வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தற்­காக தமது நகை­களை ஈடு வைத்­தும், விற்­றும், வட்­டிக்குக் கடன் வாங்­கியும் மோசடிப் பேர்­வ­ழி­க­ளான சில “ஏஜெ ண்­ட்”­க­ளிடம் பணத்தைக் கொடு த்து ஏமாந்து போன சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. வெளி­நா­டு­க­ளுக்கு அனு ப்பி வைப்­ப­தற்­காக மலை­ய­கத்தில் உலா­வு­கின்ற சில உள்ளூர் ஏஜண்­டுகள் கடவுச்சீட்டு எடுப்­ப­தற்­கும், பயிற்சி பெறு­வ­தற்கும் பெண்­களை கொழும்பு போன்ற இடங்­க­ளுக்குக் கூட்டிச் சென்று துஷ்­பி­ர­யோகம் செய்த சம்­ப­வங்­களும் இடம்பெற்­றுள்­ளன.

பிள்­ளை­களை தமது பெற்றோர் அல் ­லது கண­வன்மார் கவ­னித்துக் கொள் ­வார்கள் என்ற நம்­பிக்­கை­யோடு தாய் மார் வெளி­நாடு சென்று விடும்­போது பிள்­ளைகள் வழி­த­வறிச் சென்று விடு­வ­தும், ஒழுக்கக் கேடான செயல்­களில் ஈடு­ப­டு­வ­தும், சில பெண்­பிள்­ளைகள் தமது உற­வி­னர்­களால் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளதும் அன்­றாடம் நாம் கேள்­விப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­க­ளாக இரு க்­கின்­றன. தாய்மார் வெளி­நாட்டில் இருக்கும்­போது பாட­சாலை மாண­விகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். ஒரு தந்தை தான் பெற்ற மக­ ளையே பாலியல் கொடு­மைக்கு ஆளா க்­கிய சம்­ப­வத்­தையும் கேள்­விப்­பட்­டுள்ளோம். இது போன்ற எத்­த­னையோ சம்­ப­வங்கள் பொலிஸ் நிலை­யங்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

சிறு பிள்­ளை­களை தவிக்க விட்டு தாய்மார் வெளி­நாடு செல்­வதால் பிள்­ளை­களின் பாது­காப்பு கேள்விக்குறி­யாகி விடு­கின்­றது என்­பதால் அத்­த­கை­ய­வர்கள் வெளி­நாடு செல்­வ­தற்கு இலங்­கையில் தடை விதிக்­கப்­பட்­ டுள்­ள­து.

இந்நிலை­யில்,வெளி­நா­டு­களில் பணி புரியும் தமது மக­ளோ, மனைவியோ கை நிறைய சம்­பா­தித்து வருவாள் என்று எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கும்­போது சவப்­பெட்­டியில் சட­ல­மாக வந்து சேர்ந்த பெண்­களின் தொகையும் அதி­க­ரித்து வரு­வ­தாக புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. சவூதி அரே­பி­யாவில் வேலை வாய்ப்­பு­க­ளுக்­காகச் சென்று உயி­ரி­ழந்த இலங்­கையைச் சேர்ந்­த­வர்­களின் 20 சட­லங்கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டாத நிலையில் உள்­ள­தாக இணை­ய­தளம் ஒன்றில் செய்தி வெளி­யா­கி­யுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­வந்­துள்­ளன.

மேலும், 2012 ஜன­வரி மாதத்­துக்கும் ஒக்­டோபர் மாதத்­துக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 30 வய­துக்குக் குறை­வான வர்களின் சட­லங்கள் பெரு­ம­ளவில் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டு ள்­ள­தா­க­வும், அதில் 75 வீத­மா­னவை பெண்­களின் சட­லங்கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேற்­கு­றிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குச் சென்று உயி­ரி­ழந்த இலங்கைப் பெண்கள் பற்றி இலங்கை வர்த்­தகர் சங்­க­ம் ­அ­திக கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­க­வும், உயி­ரி­ழந்­த­வர்­களில் அநே­க­மானோர் மார­டைப்­பினால் இறந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­து டன் அனுப்பி வைக்­கப்­படும் பெரும்­பா­லான சட­லங்­களில் உள்­ளு­றுப்­புகள் காணாமல் போயுள்­ள­தா­கவும் சுட்டிக் காட்­டப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பல்­வேறு துயரம் தரும் செய்­தி­க­ளுடன் சம்­பளம் தரப்­ப­டாமல் பெண்கள் ஏமாந்த நிலையில் நாடு திரும்­பி­யுள்ள சம்­ப­வங்­களும் பெரு­ம­ளவில் இடம்­பெற்­றுள்­ளன. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வட்­ட­வளை பகு­தியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டில் பணிப் பெண்­ணாகச் சென்­றி­ருந்­த­போது விபத்தில் சிக்கி கை, கால் இழந்த நிலையில் நாடு திரு ம்­பியுள்ளார். ஆனால், அவ­ருக்கு எந்த வித­மா­ன­ கொ­டுப்­ப­ன­வோ,நட்ட ஈடோ கிடைக்­காமல் ஏரா­ள­மான கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றார்.

வெளி­நாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்

வெளி­நாடு செல்­ப­வர்கள் முக­வர்கள் (ஏஜென்ட்) மூல­மாக செல்­லும்­போது அத்­த­கைய முகவர் நிலை­யங்கள் இல ங்கை “வெளி­நாட்டு வேலை வாய் ப்புப் பணி­ய­கத்தில்” முறை­யாகப் பதிவு செய்­யப்­பட்டு அனு­மதிப் பத்­தி ரம் பெறப்­பட்­டுள்­ளதா என்­பதை முத லில் அறிந்து கொள்ள வேண்டும். தொழில் பெறு­கின்ற காலத்தில் அவர்­களின் அனு­மதிப் பத்­திரம் செல்­லு­ப­டி­யா­ன­தா, அங்­கீ­காரம் பெற்­றுள்­ளதா என்­பதைத் தெரிந்து கொண்ட பின்­னரே தமது கடவுச்சீட்டு மற்றும் ஆவ­ணங்­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என வெளி­நாட்டு வேலை வாய்ப்புப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குச் செல்­கின்­ற­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்தின் மூலம் 15 நாட்­க­ளும், மத்­திய கிழக்கு நாடுகள் அல்­லாத நாடு­க­ளுக்குச் செல்­கின்­ற­வர் ­க­ளுக்கு 25 நாட்­களும் பயிற்சி தரப்­ப­டு­கின்­றது. அத்­தோடு வெளி­நாட்டு வேலை தொடர்­பாக ஒரு நாள் அறி­வூ ட்டும் வேலைத்திட்டம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. சிங்­களம் அல்­லது தமிழ்மொழியில் அடிப்­படை எழுத்­தாற்றல் குறைந்­த­வர்­க­ளுக்கு அடிப்­படை வதி­விட கற்­கை­நெறி 18 நாட்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. அவர்கள் பெண்­க­ளாக இருந்தால் கைத்­தொழில் மற்றும் தையல் பயிற்சி 40 நாட்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது.

வெளி­நாட்டில் வேலை செய்­ப­வர் கள் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்தால் அந்­நாட்­டி­லுள்ள இலங்கை தூத­ர­கத்­துடன் அல்­லது இரா­ஜ­தந்­திர நிலை­யத்­துடன் தொடர்பு கொண்டு அவர்­களின் கவ­னத்­துக்குக் கொண்டு வர முடியும். சம்­பளம் வழங்­கப்­ப­டா­ விட்டால் அல்­லது வேலைக்கு அழை க்­கின்ற அனு­ச­ர­ணை­யாளர் ஒப்­பந்­த த்தை மீறினால் அது­பற்றி மேற்­கூ­றிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்க வேண்டும்.

சுக­வீ­னம், காயம், துன்­பு­றுத்­தல்­கள், துஷ்­பி­ர­யோகம் முத­லான கார­ணங்­க ளால் இலங்­கைக்கு திரும்பி வரும்­போ­து, விமான நிலை­யத்தில் உள்ள இல ங்கை வெளி­நாட்டு வேலை வாய்ப்புப் பணி­யக அதி­கா­ரி­களின் உத­வி­களைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் வீடு செல்­வ­தற்­கான பயணச் செல­வு, இடைத்தங்கல் இல்­லத்தில் உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­களைச் செய்து கொடுப்­பார்கள்.

இவ்­வாறு அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முகவர் நிலை­யங்கள் ஊடாக வெளி­நாடு செல்­வதன் மூலம் ஓர­ளவு தகுந்த பாது­காப்பைப் பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். சுக­வீ­னம், விபத்­து, ஏதா­வது அங்­க­வீ­னம், உடல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­கள், துஷ்­பி­ர­யோகம் போன்ற கார­ணங்­களால் திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருந்தால் அதற்­கான இழப்­பீ­டு­க­ளையும் பெற்றுக் கொள்ள வழி கிடைக்கும். என­வே, வெளி­நாடு செல்­ப­வர்கள் மிகவும் நிதா­ன­மா­கவும் சரி­யா­கவும் செல்­வதில் அக்­கறை கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

வெளி­நாடு சென்­ற­வர்­க­ளுக்கு உதவி

பெருந்­தோட்டப் பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­நாடு சென்­ற­வர்­களில் சிலர் தமது குடும்­பங்­க­ளோடு எந்தவித­மான தொடர்­பு­களும் இன்றி இருக்­கின்­றா ர்கள். சிலர் காணாமற் போயுள்­ளார்கள். அவர்­களைத் தேடிக்கண்டு பிடிப்­ப­தற் ­கான சரி­யான விளக்கம் இல்­லாத கார­ணத்தால் குடும்­பத்தில் உள்­ள­வர்கள் பெருந்­தொ­கை­யான பணத்தை செல­விட்டும் வேலைக்குச் சென்­ற­வர்கள் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா இல்­லையா என்று எந்த வித­மான பதி­லை யும் பெற்றுக்கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

என­வே, அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக “பிரிடோ” நிறு­வனம் தனது நிறு­வ­னத்தின் பணி­யா­ளர்­க­ளுக்­கான செய­ல­மர்வு ஒன்றை நடத்­தி­யுள்­ள­தாக பிரிடோ வெளிக்­கள உத்­தியோ­கத்தர் எஸ்.கே.சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள் ளார். மேலும், இந்த நிறு­வனம் வெளி­ நாட்டு வேலை­வாய்ப்பு தொடர்­பான பணி­களை ஆரம்­பித்­த­வுடன் மேற்­ கூ­றப்­பட்ட பிரச்­சி­னையோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் பிரிடோ நிறு­வனம் நடத்தி வரு­கின்ற நட­மாடும் சேவை கள் மற்றும் பிரிடோ பணி­மனை மூலம் அறியத் தருகின்றார்கள். அவ ர்களிடமிருந்து பெறப்படும் அவசி யமான தகவல்களைக் கொண்டு வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகத் தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக இதுவரையில் காணாமற் போன அல்லது குடும்பத் துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டி ருந்த 6 பேருக்கும் மேற்பட்டோர் அண்மைக் காலத்தில் நாடு திரும்பி தமது குடும்பத்தோடு இணைந்துள்ள தாகவும் எஸ்.கே.சந்திரசேகரன் தெரி வித்துள்ளார். இந்த முயற்சிக்கு கொழு ம்பில் உள்ள, “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்” குறி ப்பிடத்தக்க ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான சகல தகவல்களும் அடங் கிய கோவை ஒன்றை குடும் பத்தவர்கள் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக குடும்பத்தவர்களுக்கு அறிவுறுத்துமாறு தமது நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், முன்பள்ளி ஆசி ரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார். பிரச்சினைகள் உள்ளவர் கள் இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற் றுக் கொள்ளலாம்.

பானா. தங்கம்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல