ஞாயிறு, 11 மே, 2014

கூரிய கம்­பி­க­ளுடன் 20 மணி­நேரம் உயி­ருக்கு போரா­டிய பெண்

நுழை­வாயில் (கேற்) கம்பி தோள்பட்டை யில் ஏறியதில் பெண்­ணொ­ருவர் 20 மணித்­தி­யா­லங்கள் உயி­ருக்குப் போரா­டிய சம்­பவம் ஒன்று துபாயில் இடம்­பெற்­றுள்­ளது..



மகளின் ஆசையை நிறை­வேற்றும் நோக் கில் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்­களை பறிக்க முயன்ற துபாய் பெண் ஒருவர், திடீ­ரென கால் இடறி கீழே விழுந்­துள்ளார். அவர் விழுந்த இடத்தில் கூர்­மை­யான கம்­பிகள் அடங்­கிய நுழை­வா­யிலில் அவ­ரது இடது கை சிக்­கிக்­கொண்­டுள்­ளது.

கையின் புயப் பகு­தியை கம்பி குத்தி ஊட­றுத்­துள்­ளது. இதனைப் பார்த்த அவ­ரு­டைய 3 வயது மகள் பயத்தால் அல­றி­யுள்ளார். ஆனால் துணிச்சல் மிகுந்த குறித்த பெண், மக­ளுக்கு சமா­தானம் கூறி, தன்­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சியை எடுத்து வரு­மாறு கூறி­யுள்ளார். பின்னர் தொலை­பேசி மூலம் 'அம்­பு­லன்­ஸுக்கு' தகவல் கொடுத்­துள்ளார். 'அம்­புலன்ஸ்' வரு­வ­தற்கு சுமார் 20 நிமி­டங்கள் ஆகி­யது. அது­வரை அவர் தைரி­ய­மாக இருந்­த­தோடு, தனது மக­ளுக்கும் ஆறுதல் கூறினார்.

மீட்­புப்­ப­டை­யினர் விரை­வாக வந்து, அவ­ரு­டைய கையை கம்­பியில் இருந்து உடனே எடுத்தால் ஆபத்து என கருதி, மிகப்­பெ­ரிய இரும்பு வெட்­டியால் இரும்புக்­கம்­பி­களை வெட்டி எடுத்து, அப்படியே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மிக இலா­வ­க­மாக அவரின் கையிலிருந்த இரும்புக் கம் பிகளை மருத்துவர்கள் அகற்றினர். சுமார் 20 மணிநேரம் கம்பிகளுடன் இருந்த அந்த பெண்ணின் தைரியத்தை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல