சாது ஒருவர் ஒரு வீட்டிற்கு சென்றார். வீட்டிலிருந்த பெண்மணி அவருக்கு உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் யாருடைய ஜாதகமாவது இருக்கிறதா என்று கேட்டார். அப் பெண்மணி தனது பன்னிரெண்டு வயது நிரம்பிய மகனின் ஜாதகத்தை எடுத்து வந்து சாதுவிடம் கொடுத்தார். சாது ஜாதகத்தை பார்த்ததும் “இவன் அரசியலுக்கு வந்தால் ஒரு சக்கரவர்த்தி போல வலிமையுடன் திகழ்வான். ஒரு வேளை, அரசியலுக்கு செல்லவில்லை என்றால் பெரிய சந்நியாசியாக ஆகிவிடுவான்” என்றார். அவர்தான் நரேந்திர மோடி .
குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டத்தில் வாத் நகரில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, ஹீராபென் ஆகிய தம்பதியினருக்கு 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி, ஆறு பிள்ளைகளைக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவர்கள் காஞ்ஜி எனும் தாழ்த்தப்பட்ட இந்து மதப் பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். குஜராத்தில் இந்தப் பிரிவினர் ஒரு சதவீதத்தையும் விட குறைந்தவர்கள்.
நரேந்திர மோடி, அரசு ஆரம்பப் பள்ளியில் படித்தார். அடுத்து பகவத்சாரியா நாராயணசாரியா மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். சிறுவயதில் இவரது நெருக்கமான நண்பராக ஜசூத்கான் பதான் விளங்கினார். சிறுவயதிலேயே மோடியின் நட்பு வட்டம் பெரிதாகவே இருந்தது. சிறுவயதில் மோடிக்கு சுவாமி விவேகானந்தரை மிகவும் பிடிக்கும். விவேகானந்தரின் தேசப்பற்றும் தத்துவ விளக்கமும் மோடியை மெய்மறக்கச் செய்தன. விவேகானந்தர் எழுதிய அனைத்தையும் இளம்பராயத்திலேயே படித்துவிட்டார் மோடி. மோடிக்கு பாடசாலை நாட்களில் நாடகம் நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். “ஹரயாளி நோ ஹதயாரோ” என்ற நாடகம் சீனா, இந்தியா மீது தொடுத்த போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடகம். அந்த நாடகத்தில் மோடிக்கு இந்திய சிப்பாய் வேடம். பிரமாதமாக நடித்து நாட்டுப்பற்றின் உச்சத்தை தன்னுடைய நடிப்பில் வெளிக்காட்டினார். பதினேழு வயது நிரம்பிய மோடி பள்ளிப் படிப்பை முடித்ததும் விஸ் நகரிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். அக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்து முடித்ததன் பின்னர் ஒருநாள் தாயாரிடம் “நான் இமயமலைக்குப் போய், சுவாமி விவேகானந்தரை சந்தித்த ஒரு யோகியைக் காணப் போகிறேன்” என்று கூறினார். குடும்பத்தாருக்கு பலத்த அதிர்ச்சி. சாது கூறிய விடயம் தாயாருக்கு ஞாபகம் வந்தது. வேண்டாம் என்று சொல்லி தடுத்தார். இமயமலைக்கு செல்லுவது உறுதி என்று திட்டவட்டமாக சொன்னார் மோடி.வேறு வழியில்லாமல் பிரிவு உபசார விழாவையும் நடத்தி அனுப்பிவைத்தனர்.
வீட்டைவிட்டு வெளியேறிய மோடி இமயமலையிலுள்ள அந்த யோகி இருக்கும் அடர்ந்த காட்டுக்குச் சென்றார். மனித நடமாட்டமில்லாத அந்தக் காட்டின் நடுவில் தொண்ணூறு வயது நிரம்பிய அந்த மெல்லிய தேகத்தையுடைய யோகி காணப்பட்டார். மோடி அந்த யோகியுடன் ஒரு மாத காலம் தங்கி பணிவிடை செய்தார். ஆன்மீக சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார் மோடி. பிறகு அங்கிருந்து புறப்பட்டு இமயமலைப் பகுதியிலேயே ஓரிரு ஆண்டுகளை கழித்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பினார். திடீரென மோடியைப் பார்த்ததும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. மகனை அழைத்து, நலம் விசாரித்து, சுவையாக விருந்தளித்து மகிழ்ந்தனர். ஒரேநாள் மட்டுமே வீட்டில் இருந்தார். மறுநாள் புறப்பட்டு அஹமதாபாத்திலுள்ள தன்னுடைய மாமா பாபுபாயின் வீட்டுக்கு சென்றுவிட்டார். மாமா பாபுபாய் தேநீர்க்கடை நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டார் மோடி. அந்தத் தேநீர்க்கடைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் வந்து போவது வழமை. அந்த நேரத்தில் மோடியை துடிதுடிப்பான இளைஞனாக கண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், தங்களது கொள்கைகளை விளக்கி அவரை தங்களது இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர். மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு நேர ஊழியராக பிரசாரகராகப் பணியாற்றினார்.
மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸிலிருந்து விலகிய மருத்துவர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் என்பவர்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் உருவாக்கினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரசாரகர் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. குடும்பப் பொறுப்பு எதனையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தன்னுடைய அறிவு, சக்தி, நேரம் அனைத்தையும் சமுதாயத்திற்காக செலவிட வேண்டும். தங்கள் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் தயாரான மோடி, தன் மாமா வீட்டிலிருந்து வெளியேறி ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்தில் அதிகாலையில் எழுந்ததும் மற்றைய சேவகர்களை எழுப்புவார். காலைப் பிரார்த்தனை முடிந்ததும் எல்லோருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுப்பார். பாத்திரங்களை கழுவுவார். எல்லோருக்கும் சிற்றுண்டி தயாரித்து பரிமாறுவார். பிறகு கழிவறை உட்பட அலுவலகத்தை சுத்தம் செய்வார். மதிய உணவுக்கு சுழற்சி முறையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் வீட்டிற்கு செல்வார் மோடி. மருத்துவ சிகிச்சைக்காக வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் குடும்பத்தினரை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு மோடிக்கு கொடுக்கப்பட்டது.
பிரபல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, பல புத்தகங்களையும் வாசிக்கும் சந்தர்ப்பமும் மோடிக்கு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரான லக்ஸ்மன் ராவ் இனாம்தார் என்பவர் மோடியை அழைத்து, “கடவுள் உனக்கு நிறைய கொடுத்திருக்கிறார். நீ ஏதாவது படியேன். சமஸ்கிருதம் அல்லது சரித்திரம் படி” என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு மோடி டில்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்தார். மிகுந்த சிரமத்துடன் வெற்றிகரமாக தன்னுடைய படிப்பை முடித்து டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மோடிக்கு குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும். லக்ஸ்மன் ராவ் இனாம்தார் அவர்களே மோடியின் குரு ஆவார்.
குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு புதிய துடிப்புள்ள நிர்வாகி தேவைப்பட்டார். அப்போது பா.ஜ.க. தலைவர் அத்வானி ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைமையிடம், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிய நரேந்திர மோடியை அரசியலுக்கு நுழைவதற்கு அனுப்பி விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைமை அதற்கு இணங்கியது. பா.ஜ.க. தலைவர் அத்வானி 37 வயது நிரம்பிய நரேந்திர மோடியை குஜராத் மாநில பொதுச் செயலாளராக ஆக்கினார். அதனைத் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் மோடி.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி குஜராத் மாநில முதலமைச்சர் கேஸுபாய் படேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அஹமதாபாத்தில் தேநீர் விற்றுக்கொண்டிருந்தவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றதைப் பார்த்துப் பலரும் பூரிப்படைந்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரசாரகர் ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பது இந்திய அரசியலில் அதுதான் முதல் முறை ஆகும். முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டபின் தன் தாயை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மோடியின் தாயார் கொடுத்தது ஒரே ஒரு அறிவுரைதான். “நீ எக்காரணத்தைக் கொண்டும் இலஞ்சம் வாங்கக் கூடாது.”
சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலையலேயே அதாவது எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர் ஆகிவிட்டார். அவ்வாறு முதலமைச்சராக ஆகிவிடுபவர்கள் ஆறுமாத காலத்தினுள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். முதலமைச்சர் நரேந்திர மோடி சௌராஷ்டிராவிலுள்ள ராஜ்கோட் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று நாட்கள் கழித்து மோடி சட்ட சபையில் எம்.எல்.ஏ. ஆக பதவியேற்றார். அதே அன்று கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் இடம்பெற்றது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 58 இந்துக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து குஜராத் முழுவதும் மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கலவரத்தில் சுமார் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் உயிரிழந்தனர். சுமார் 2500 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போயினர். சுமார் 1,50,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். கலவரத்தில் 298 தர்ஹாக்கள், 205 மசூதிகள், 17 கோயில்கள் மற்றும் மூன்று தேவாலயங்கள் பாதிப்புக்குள்ளாயின.
முதலமைச்சர் நரேந்திர மோடி கலவரத்தை அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் வந்தன. மோடி அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால், குஜராத் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட கலவரம் மூன்றே நாட்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நரேந்திர மோடியை “மரண வியாபாரி” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் சாடினார். இஸ்லாமிய அமைப்பினர் நரேந்திர மோடியை “காவி தீவிரவாதி” என்று வர்ணிக்கின்றனர். கலவரம் ஓய்ந்திருந்தாலும் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் மோடி சார்ந்திருந்த பா.ஜ.க. வில் சிலரும் அவருக்கெதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். “குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி அடக்கியிருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, குஜராத் கலவரத்திற்கு காரணமானவரே மோடிதான்” என்று திரும்பத் திரும்ப பிரசாரம் செய்யப்பட்டது. எதிர்ப்புகளும் நச்சரிப்புகளும் அதிகரிக்க “எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம்” எனக் கூறி முதலமைச்சர் பதவியை 12.-07.-2002 இல் ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநில சட்ட சபை கலைந்ததும் மீண்டும் 12-.12.-2002 இல் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. மீண்டும் நரேந்திர மோடியே குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குஜராத் சட்ட மன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடியே முதலமைச்சரானார். நரேந்திர மோடி அவர்கள் பன்னிரெண்டு வருடங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார்.
நான்கு முறையும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது வேட்பு மனுவில் தனது திருமணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது வதோகரா மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தனது மனைவியின் பெயர் ஜசோதா பென் என்றும் முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட மோடி, சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” எனும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.
நரேந்திர மோடி முதலமைச்சராகியதன் பின்னரே குஜராத் மாநிலத்தில் அரசின் அனைத்து அலுவல்களிலும் கணனி பயன்படுத்தப்படுகிறது. குஜராத்திலுள்ள சுமார் 14,000 அரசு அலுவலகங்கள் கணனி வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஆசியப் பசுபிக் பகுதிலேயே குஜராத் மாநில கணனி வலையமைப்பே மிகப் பெரியது.
சமகால அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டராக அறிமுகமாகி அரசியல் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல முன்னேறி, குஜராத் முதல்வராக நான்கு முறை பதவி வகித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். “குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக உருவாக்கிய மோடி, இந்தியாவையும் முன்மாதிரி தேசமாக மாற்றுவார்” என்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினர். “நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக உருவாக்குவார்” என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சாதனைகளை அவர் உரக்கச் சொல்லும் போதெல்லாம் அதற்கான எதிர்க்குரல்களும் கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்டர், இளம் பெண்ணை உளவு பார்த்தது போன்ற அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பஞ்சமில்லாமல் கூடவே எழத்தான் செய்கின்றன. மோடியின் சாதனைகள் ஒரு பக்கமும் மோடியின் மீதான சர்ச்சைகள் இன்னொரு பக்கமும் ஏறக்குறைய சமபலத்துடன் நிற்கும் நிலையில், மோடியின் எதிர்கால அரசியல் வாழ்க்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அவதானிகள் இந்தியாவின் அடுத்த புதிய பிரதமராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்படக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்
குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டத்தில் வாத் நகரில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, ஹீராபென் ஆகிய தம்பதியினருக்கு 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி, ஆறு பிள்ளைகளைக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவர்கள் காஞ்ஜி எனும் தாழ்த்தப்பட்ட இந்து மதப் பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். குஜராத்தில் இந்தப் பிரிவினர் ஒரு சதவீதத்தையும் விட குறைந்தவர்கள்.
நரேந்திர மோடி, அரசு ஆரம்பப் பள்ளியில் படித்தார். அடுத்து பகவத்சாரியா நாராயணசாரியா மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். சிறுவயதில் இவரது நெருக்கமான நண்பராக ஜசூத்கான் பதான் விளங்கினார். சிறுவயதிலேயே மோடியின் நட்பு வட்டம் பெரிதாகவே இருந்தது. சிறுவயதில் மோடிக்கு சுவாமி விவேகானந்தரை மிகவும் பிடிக்கும். விவேகானந்தரின் தேசப்பற்றும் தத்துவ விளக்கமும் மோடியை மெய்மறக்கச் செய்தன. விவேகானந்தர் எழுதிய அனைத்தையும் இளம்பராயத்திலேயே படித்துவிட்டார் மோடி. மோடிக்கு பாடசாலை நாட்களில் நாடகம் நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். “ஹரயாளி நோ ஹதயாரோ” என்ற நாடகம் சீனா, இந்தியா மீது தொடுத்த போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடகம். அந்த நாடகத்தில் மோடிக்கு இந்திய சிப்பாய் வேடம். பிரமாதமாக நடித்து நாட்டுப்பற்றின் உச்சத்தை தன்னுடைய நடிப்பில் வெளிக்காட்டினார். பதினேழு வயது நிரம்பிய மோடி பள்ளிப் படிப்பை முடித்ததும் விஸ் நகரிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். அக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்து முடித்ததன் பின்னர் ஒருநாள் தாயாரிடம் “நான் இமயமலைக்குப் போய், சுவாமி விவேகானந்தரை சந்தித்த ஒரு யோகியைக் காணப் போகிறேன்” என்று கூறினார். குடும்பத்தாருக்கு பலத்த அதிர்ச்சி. சாது கூறிய விடயம் தாயாருக்கு ஞாபகம் வந்தது. வேண்டாம் என்று சொல்லி தடுத்தார். இமயமலைக்கு செல்லுவது உறுதி என்று திட்டவட்டமாக சொன்னார் மோடி.வேறு வழியில்லாமல் பிரிவு உபசார விழாவையும் நடத்தி அனுப்பிவைத்தனர்.
வீட்டைவிட்டு வெளியேறிய மோடி இமயமலையிலுள்ள அந்த யோகி இருக்கும் அடர்ந்த காட்டுக்குச் சென்றார். மனித நடமாட்டமில்லாத அந்தக் காட்டின் நடுவில் தொண்ணூறு வயது நிரம்பிய அந்த மெல்லிய தேகத்தையுடைய யோகி காணப்பட்டார். மோடி அந்த யோகியுடன் ஒரு மாத காலம் தங்கி பணிவிடை செய்தார். ஆன்மீக சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார் மோடி. பிறகு அங்கிருந்து புறப்பட்டு இமயமலைப் பகுதியிலேயே ஓரிரு ஆண்டுகளை கழித்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பினார். திடீரென மோடியைப் பார்த்ததும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. மகனை அழைத்து, நலம் விசாரித்து, சுவையாக விருந்தளித்து மகிழ்ந்தனர். ஒரேநாள் மட்டுமே வீட்டில் இருந்தார். மறுநாள் புறப்பட்டு அஹமதாபாத்திலுள்ள தன்னுடைய மாமா பாபுபாயின் வீட்டுக்கு சென்றுவிட்டார். மாமா பாபுபாய் தேநீர்க்கடை நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டார் மோடி. அந்தத் தேநீர்க்கடைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் வந்து போவது வழமை. அந்த நேரத்தில் மோடியை துடிதுடிப்பான இளைஞனாக கண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், தங்களது கொள்கைகளை விளக்கி அவரை தங்களது இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர். மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு நேர ஊழியராக பிரசாரகராகப் பணியாற்றினார்.
மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸிலிருந்து விலகிய மருத்துவர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் என்பவர்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் உருவாக்கினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரசாரகர் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. குடும்பப் பொறுப்பு எதனையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தன்னுடைய அறிவு, சக்தி, நேரம் அனைத்தையும் சமுதாயத்திற்காக செலவிட வேண்டும். தங்கள் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் தயாரான மோடி, தன் மாமா வீட்டிலிருந்து வெளியேறி ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்தில் அதிகாலையில் எழுந்ததும் மற்றைய சேவகர்களை எழுப்புவார். காலைப் பிரார்த்தனை முடிந்ததும் எல்லோருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுப்பார். பாத்திரங்களை கழுவுவார். எல்லோருக்கும் சிற்றுண்டி தயாரித்து பரிமாறுவார். பிறகு கழிவறை உட்பட அலுவலகத்தை சுத்தம் செய்வார். மதிய உணவுக்கு சுழற்சி முறையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் வீட்டிற்கு செல்வார் மோடி. மருத்துவ சிகிச்சைக்காக வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் குடும்பத்தினரை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு மோடிக்கு கொடுக்கப்பட்டது.
பிரபல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, பல புத்தகங்களையும் வாசிக்கும் சந்தர்ப்பமும் மோடிக்கு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரான லக்ஸ்மன் ராவ் இனாம்தார் என்பவர் மோடியை அழைத்து, “கடவுள் உனக்கு நிறைய கொடுத்திருக்கிறார். நீ ஏதாவது படியேன். சமஸ்கிருதம் அல்லது சரித்திரம் படி” என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு மோடி டில்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்தார். மிகுந்த சிரமத்துடன் வெற்றிகரமாக தன்னுடைய படிப்பை முடித்து டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மோடிக்கு குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும். லக்ஸ்மன் ராவ் இனாம்தார் அவர்களே மோடியின் குரு ஆவார்.
குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு புதிய துடிப்புள்ள நிர்வாகி தேவைப்பட்டார். அப்போது பா.ஜ.க. தலைவர் அத்வானி ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைமையிடம், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிய நரேந்திர மோடியை அரசியலுக்கு நுழைவதற்கு அனுப்பி விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைமை அதற்கு இணங்கியது. பா.ஜ.க. தலைவர் அத்வானி 37 வயது நிரம்பிய நரேந்திர மோடியை குஜராத் மாநில பொதுச் செயலாளராக ஆக்கினார். அதனைத் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் மோடி.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி குஜராத் மாநில முதலமைச்சர் கேஸுபாய் படேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அஹமதாபாத்தில் தேநீர் விற்றுக்கொண்டிருந்தவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றதைப் பார்த்துப் பலரும் பூரிப்படைந்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரசாரகர் ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பது இந்திய அரசியலில் அதுதான் முதல் முறை ஆகும். முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டபின் தன் தாயை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மோடியின் தாயார் கொடுத்தது ஒரே ஒரு அறிவுரைதான். “நீ எக்காரணத்தைக் கொண்டும் இலஞ்சம் வாங்கக் கூடாது.”
சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலையலேயே அதாவது எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர் ஆகிவிட்டார். அவ்வாறு முதலமைச்சராக ஆகிவிடுபவர்கள் ஆறுமாத காலத்தினுள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். முதலமைச்சர் நரேந்திர மோடி சௌராஷ்டிராவிலுள்ள ராஜ்கோட் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று நாட்கள் கழித்து மோடி சட்ட சபையில் எம்.எல்.ஏ. ஆக பதவியேற்றார். அதே அன்று கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் இடம்பெற்றது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 58 இந்துக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து குஜராத் முழுவதும் மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கலவரத்தில் சுமார் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் உயிரிழந்தனர். சுமார் 2500 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போயினர். சுமார் 1,50,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். கலவரத்தில் 298 தர்ஹாக்கள், 205 மசூதிகள், 17 கோயில்கள் மற்றும் மூன்று தேவாலயங்கள் பாதிப்புக்குள்ளாயின.
முதலமைச்சர் நரேந்திர மோடி கலவரத்தை அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் வந்தன. மோடி அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால், குஜராத் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட கலவரம் மூன்றே நாட்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நரேந்திர மோடியை “மரண வியாபாரி” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் சாடினார். இஸ்லாமிய அமைப்பினர் நரேந்திர மோடியை “காவி தீவிரவாதி” என்று வர்ணிக்கின்றனர். கலவரம் ஓய்ந்திருந்தாலும் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் மோடி சார்ந்திருந்த பா.ஜ.க. வில் சிலரும் அவருக்கெதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். “குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி அடக்கியிருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, குஜராத் கலவரத்திற்கு காரணமானவரே மோடிதான்” என்று திரும்பத் திரும்ப பிரசாரம் செய்யப்பட்டது. எதிர்ப்புகளும் நச்சரிப்புகளும் அதிகரிக்க “எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம்” எனக் கூறி முதலமைச்சர் பதவியை 12.-07.-2002 இல் ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநில சட்ட சபை கலைந்ததும் மீண்டும் 12-.12.-2002 இல் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. மீண்டும் நரேந்திர மோடியே குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குஜராத் சட்ட மன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடியே முதலமைச்சரானார். நரேந்திர மோடி அவர்கள் பன்னிரெண்டு வருடங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார்.
நான்கு முறையும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது வேட்பு மனுவில் தனது திருமணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது வதோகரா மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் தனது மனைவியின் பெயர் ஜசோதா பென் என்றும் முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட மோடி, சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” எனும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.
நரேந்திர மோடி முதலமைச்சராகியதன் பின்னரே குஜராத் மாநிலத்தில் அரசின் அனைத்து அலுவல்களிலும் கணனி பயன்படுத்தப்படுகிறது. குஜராத்திலுள்ள சுமார் 14,000 அரசு அலுவலகங்கள் கணனி வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஆசியப் பசுபிக் பகுதிலேயே குஜராத் மாநில கணனி வலையமைப்பே மிகப் பெரியது.
சமகால அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டராக அறிமுகமாகி அரசியல் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல முன்னேறி, குஜராத் முதல்வராக நான்கு முறை பதவி வகித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். “குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக உருவாக்கிய மோடி, இந்தியாவையும் முன்மாதிரி தேசமாக மாற்றுவார்” என்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினர். “நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக உருவாக்குவார்” என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சாதனைகளை அவர் உரக்கச் சொல்லும் போதெல்லாம் அதற்கான எதிர்க்குரல்களும் கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்டர், இளம் பெண்ணை உளவு பார்த்தது போன்ற அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பஞ்சமில்லாமல் கூடவே எழத்தான் செய்கின்றன. மோடியின் சாதனைகள் ஒரு பக்கமும் மோடியின் மீதான சர்ச்சைகள் இன்னொரு பக்கமும் ஏறக்குறைய சமபலத்துடன் நிற்கும் நிலையில், மோடியின் எதிர்கால அரசியல் வாழ்க்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அவதானிகள் இந்தியாவின் அடுத்த புதிய பிரதமராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்படக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக