ஞாயிறு, 11 மே, 2014

ஓர் இனம் ஆளும் இனமாகவும் ஏனைய இனம் ஆளப்படும் இனமாகவும் இருக்க முடியுமா?

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை தீர யதார்த்த சிந்தனை வேண்டும். இலங்­கையின் சனத்­தொ­கையில் 100 க்கு 65 சத­வீதம் சிங்­கள பௌத்த மக்­களும், 9 சத வீதம் கிறிஸ்­தவ சிங்­கள மக்­களும் 12 சத­வீதம் தமிழ் மக்­களும், 8 சதவீத முஸ்­லிம் மக்களும் ௬ சத­வீ­த மலை­யக மக்களும் வாழ்­கின்­றார்கள். ஆக பௌத்த சிங்­கள மக்கள் மூன்றில் இரண்டு பங்­கி­ன­ரா­கவும் சிறு­பான்­மைகள் மூன்றில் ஒரு பங்­கா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இது ஒரு சரா­சரி மதிப்­பீ­டாகும். 9 மாகா­ணங்­களில் 7 சிங்­கள மாகா­ணங்­க­ளா­கவும், 2 தமிழ் மாகா­ணங்­க­ளா­கவும் உள்­ளன. 25 மாவட்­டங்­களில் 18 சிங்­கள மாவட்­டங்­க­ளா­கவும், 7 தமிழ் மாவட்­டங்­க­ளா­கவும் உள்­ளன. அம்­பாறை தமிழ் மாகா­ணத்தின் முஸ்லிம் மாவட்­ட­மா­கவே இருந்­தி­ருக்க வேண்டும் எனினும் திட்­ட­மிட்டு சிங்­கள மாவட்­ட­மாக தமிழ் மாகா­ணத்­துக்குள் திணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.



7 சிங்­கள மாகா­ணங்­களின்

18 மாவட்­டங்கள்

1. மேல் மாகாணம் – கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை

2. தென் மாகாணம் – காலி, மாத்­தறை, ஹம்­பாந்­தோட்டை

3. மத்­திய மாகாணம் – கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா

4. சப்­ர­க­முவ மாகாணம் – இரத்­தி­ன­புரி, கேகாலை

5. வடமேல் மாகாணம் – குரு­ணாகல், புத்­தளம்

6. வட­மத்­திய மாகாணம் – அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை

7. ஊவா மாகாணம் – பதுளை, மொன­ரா­கலை

2 தமிழ் மாகா­ணங்­களின் 7 மாவட்­டங்கள்

1. வட மாகாணம் – யாழ்ப்­பாணம், மன்னார், வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு

2. கிழக்கு மாகாணம் – மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை

ஆக கிழக்கு மாகா­ணத்தின் அம்­பா­றையைச் சேர்த்தே 18 சிங்­கள மாவட்­டங்­க­ளா­கின்­றன. ஆக இரு பிர­தே­சங்கள் உள்­ளன.

தனித்­த­னியே சிங்­களப் பிர­தேசம் தமிழ் பிர­தேசம் என இரு வகை உண்டு. விஸ்­தீ­ர­ணத்தில் 7 சிங்­கள மாகா­ணங்­களும் மூன்றில் இரண்­டா­கவே உள்­ளன. 2 தமிழ் மாகா­ணங்கள் மூன்றில் ஒன்­றாக உள்­ளது. கடற்­ப­ரப்பில் 2 தமிழ் மாகா­ணங்­களும் 100 க்கு 60 சத­வீ­தத்தைக் கொண்­டுள்­ளன. எனினும் 60 சத­வீ­த­முள்ள இனத்­தினர் 40 சத­வீ­த­முள்ள மக்­களை ஆளு­கி­றார்கள். இதற்கு பூர்வ இனம் தாமே என்­ப­தையே ஆதா­ர­மாக முன்­வைக்­கி­றார்கள். நாடு பூர்­வீக இனத்­துக்கே சொந்தம் இது உலகின் அனைத்து அறி­ஞர்­களும் ஏற்றுக் கொண்ட உண்மை இத்­த­கைய அந்­தஸ்தை பெற வேண்­டு­மாயின் பாரம்­ப­ரியம் கலாசாரம் இருக்க வேண்டும். அதன்படி நாமே இலங்கை மாதாவின் உரித்­தா­ளிகள் ஏனைய பிர­ஜை­க­ளுக்கும் வாழ்­வோ­ருக்கும் பொது­வான உரி­மைகள் இருக்­கின்ற போதும் அவர்­க­ளுக்­கில்­லாத நாலு வகை உரி­மைகள் பூமி புத்­தி­ரர்­க­ளான எங்­க­ளுக்கு உண்டு. சரித்­தி­ரத்தில் பாரம்­ப­ரி­யத்தில் நாட்டில் இனத்தில் தீர்வு காணும் உரி­மை­களே அவை­க­ளாகும். இது உலகின் ஏகோ­பித்த தீர்வு என்­றெல்லாம் கூறு­கி­றார்கள். மக்கள் விடுலை முன்­ன­ணியின் புதிய தலைமை அண்­மையில் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­களைப் பார்த்­தா­வது இவர்கள் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்­நாட்டில் ஐந்து பிர­தான இனங்­களும் நான்கு மதங்­களைப் பின்­பற்­று­வோரும் வாழ்­கின்­றனர். சரித்­திர ரீதியில் இவர்கள் எங்­கி­ருந்து வந்­தாலும் அனை­வரும் இந்­நாட்டைச் சேர்ந்­த­வர்­களே. ஒரு மதத்தை மிதித்துக் கொண்டு மற்ற மதம் தன்னை உயர்­வெனும் சமூ­கத்தை நாம் உரு­வாக்­க­மாட்டோம் என்று அக்கட்சி கூறுகிறது. யாப்பு ரீதி­யாக ஒரு இனத்­துக்கு மட்டும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டதால் ஏனைய இனங்கள் இரண்டாம் பிர­ஜை­க­ளா­கின.

இதனால் இது­வரை காணப்­பட்ட பல்­லின தேசியம் பேரின தேசி­ய­மா­கி­றது பெரும்­பான்­மைக்கு உரிமை எனவும் சிறு­பான்­மை­க­ளுக்கு சலுகை எனவும் வகுக்­கப்­பட்­டன. எனவே தரு­வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதிகம் கோர முடி­யாது பூமி­புத்­தி­ரர்­களும் வந்­தேறு குடி­களும் சம­மல்ல என்பது தற்போதைய கொள்கையாக உள்ளது.

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் தாம் ஒரே இனம் வாழும் நாடு­க­ளாகும். சவூதி அரே­பி­யாவை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். மற்­றும்­படி 100க்கு 98 சத­வீதம் பல்­லி­னங்கள் வாழும் நாடு­க­ளே­யாகும். அந்த வகையில் இலங்கை ஒரு பல்­லின நாடே என்­பதில் எள்­ள­ளவும் சந்­தே­க­மில்லை. ஆக ஒரு பல்­லின நாட்டை ஒரு­போதும் பேரின வடிவில் அளவிட முடி­யாது என்­பதே உண்­மை­யாகும்.

இதுவே உள்­நாட்டு நெருக்­க­டிக்கும் சர்­வ­தேச நெருக்­க­டிக்கும் இலங்கை உள்­ளாகக் கார­ண­மாகும். நாம் இப்­போது பண்­டைய அரச காலத்தில் இல்லை. எனவே பழைய நினைப்பை மறந்து முறையைத் தெரிந்து நடந்து உலகம் போகும் பாதை­யிலே உள்ளம் தெளிந்து வர வேண்டும். இது தவிர வழி­யில்லை. அனு­ர­கு­மார திசா­நா­யக்க இது குறித்து மேலும் கூறு­கையில்,

இனப்­ பாகுபாட்டை நமது மக்கள் விடு­தலை முன்­னணி உரு­வாக்­காது நாம் எல்லா இனங்­க­ளி­னதும் சம உரி­மையை ஏற்றுக் கொள்­கிறோம். எமது நாட்டின் இரு பிர­தான மொழி­க­ளி­னதும் சம அந்­தஸ்தை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். தேசிய கீதத்தை தமிழில் பாடு­வது எப்­படிக் குற்­ற­மாகும்? சுந்­தர ஸ்ரீ பரிணி எனக்­கூ­றினால் தமிழ் பிள்­ளை­க­ளுக்கு விளங்கிக் கொள்ள முடி­யுமா? இந்­நி­லையில் அப்­பிள்­ளை­க­ளுக்கு எப்­படி தேசப்­பற்று வரும். (லங்­கா­தீப 06.-03.-2014) எனக் கேட்­கிறார்.

உண்­மையில் இத்­த­கைய கருத்­துக்­க­ளையே சர்­வ­தேசம் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றதே தவிர பேரின வாதத்­தை­யல்ல. தாம் 2500 ஆண்­டு­க­ளுக்கு முன் குடி­யே­றி­யோரின் சந்­த­திகள் என்­பதால் முழு நாடும் தமதே என்றும் தாம் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­வதால் தேச வளங்­களின் ஏக­போகம் தமக்கே எனவும் பேரி­ன­வா­திகள் வாதி­டு­கின்­றனர். இக்­க­ருத்­துக்கள் பண்­டைய அரச காலங்­களில் மட்­டுமே எடு­பட்­டி­ருக்கும் இப்­போது இவற்­றுக்கு சர்­வ­தேச விதி­முறைப் படி இட­மில்லை. ஏனெனில் ஓர் இனத்தை மறு இனம் ஆள ஐ.நா. சபை அனு­ம­திக்­காது.

இது பற்றி சட்­டத்­த­ரணி தர்­ம­சேன யகன் தாவல பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார். இனங்­க­ளுக்­கி­டையே நட்­பு­றவை நிலை­நாட்ட விரும்ப வேண்டும் மக்­களின் சுய­நிர்­ணய உரி­மை­யையும் சம நிலைக்­கோட்­பாட்­டையும் கௌர­வித்து சர்­வ­தேச சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். (ஐ.நா. சபையின் கொள்கை Article (2)

இனங்கள் மத்­தியில் சமா­தா­னத்­தையும் நட்­பு­ற­வையும் நிலை­நாட்ட உயர் தர ஜீவா­தா­ரத்­தையும் முறை­யான தொழில் வாய்ப்­பையும் மனித உரி­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தெனில் சம நிலைப்­பாடு மற்றும் சுய­நிர்­ணய உரிமைக் கோட்­பா­டு­க­ளுக்கு கௌரவம் அளிப்­பதன் மூல­மே­யாகும். (ஐ.நா. சபையின் கொள்கை Article -55)

எல்லா இன மக்­க­ளுக்­குக்கும் (மக்கட் பிரி­வி­ன­ருக்கும்) All people எனும் வகையில் Right of ditermination எனும் சுய­நிர்­ணய உரிமை இருப்­ப­தோடு அதன் படி அவர்கள் விரும்பும் அர­சி­யலைப் புரி­யவும் பொரு­ளா­தார, சமூக, கலா­சார உயர் நிலை­களை அடை­யவும் உரி­மை­யுண்டு. (சர்­வ­தேச சிவில் மற்றும் அர­சியல் கொள்கை)

ஓர் அரசு சம நிலைப்­பாட்டைக் கௌர­வித்து அதன் மூலம் அனைத்துத் தனி நபர்­க­ளுக்கும் பொரு­ளா­தார, சமூக, கலா­சார உரி­மை­களைப் பெற இட­ம­ளிக்க வேண்டும். (சர்­வ­தேச பொரு­ளா­தார சமூக கலா­சாரம் பற்­றிய கொள்­கையின் மூன்றாம் ஷரத்து)

எல்லா இனப்­பி­ரி­வு­க­ளுக்கும் சுய நிர்­ணய உரிமை உண்டு. அதனால் அவை சுயா­தீ­ன­மாகத் தமது அர­சியல் பொரு­ளா­தார சமூக கலா­சார உரி­மை­களை அனு­ப­விக்­கலாம். (25.-06.-1993 ஆம் ஆண்டு வியன்­னாவில் நிகழ்ந்த உலக மனித உரிமை மாநாட்டு உடன்­ப­டிக்­கையின் இரண்டாம் ஷரத்து)

அனைத்­தின மக்கள் (All people) எனச் ­சர்­வ­தேச சட்டம் குறிப்­பி­டு­வது முழு நாட்­டி­னதும் சனத் தொகையை வைத்­தல்ல மொழி மற்றும் கலா­சார ரீதியில் அமைந்­ததே மக்­கட்­பி­ரிவு எனக் கனே­டிய உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யி­ருக்­கி­றது. எனவே இறை­மை­யுள்ள ஒரு நாடு எல்லா இனங்­க­ளி­னதும் சுய­நிர்­ணய சம நிலைப்­பாட்டைப் பேண வேண்டும். (லங்­கா­தீப 06.-04.-2014) சட்­டத்­த­ரணி தர்­ம­சேன யகன்­தா­வல.

இனம் எனும் சொல்லில் பூர்­வீக எனும் குறிப்பு இல்லை. எனவே எல்லா இனப்­பி­ரி­வு­களும் சம நிலைப்­பா­டா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றன. அது போல் தொகையில் கூடிய இனம் தொகையில் குறைந்த இனம் எனும் குறிப்பும் இல்லை. மத இன மொழி கலா­சார, பிர­தேச வித்­தி­யா­சங்­களே கணிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே எல்லா இனங்­க­ளி­னதும் வாழ்­வா­தா­ரங்கள் பாதிக்­கப்­ப­டாமல் பாது­காக்­கப்­பட வேண்டும் ஓர் இனம் மட்டும் ஆளும் இன­மா­கவும் மற்ற இனங்கள் ஆளப்­படும் இனங்­க­ளா­கவும் இருக்க முடி­யாது. ஓர் இனத்­திடம் மற்ற இனங்கள் தமது சுதந்­தி­ரங்­களை இழந்து விடவும் முடி­யாது. இவை சர்­வ­தேச சட்ட விதி­மு­றை­களை மீறும் செயற்­பா­டு­க­ளாகும். இவற்றை மீறினால் சர்­வ­தேச ரீதியில் இலங்கை தனித்­து­விடும். நவீன காலத்தில் எந்த நாடும் தனித்து இயங்க முடி­யாது. அதனால் தான் வளர்ச்­சி­யுற்ற நாடு­களே உல­கோடு இணங்கிச் செல்­கின்­றன. காரணம் திறந்த பொரு­ளா­தாரக் கோட்­பாட்டின் படி ஒரு நாட்டில் தங்­கியே மறு­நாடு நிற்கும். எனவே வளர்­முக மூன்றாம் உலக நாடு­களில் ஒன்­றான இலங்கை பேரி­ன­வா­தத்­தைக்­காக்க சர்­வ­தேச விதி­மு­றை­களை மீறு­வ­தா­னது கண்­களை விற்று சித்­திரம் வாங்­கு­வது போன்றே அமையும்.

இலங்­கைக்கு உலக நாடு­களில் பக்­கத்­தி­லுள்ள இந்­தி­யாவே முக்­கி­ய­மா­ன­தாகும். பாரம்­ப­ரிய நெருக்கம் மட்­டு­மல்ல 18 மைல்கள் மட்­டு­மே­யுள்ள கடல் தூரமும் இதற்குக் கார­ணங்­க­ளாகும். அத்­தோடு தனது சுய பாது­காப்­புக்கு இலங்கை முக்­கியம் என்றும் இந்­தியா கரு­து­கின்­றது. அதனால் தான் இலங்கை வாழ் இந்­திய வம்­சா­வளித் தோட்டத் தொழி­லா­ளரில் குறிப்­பிட்ட தொகை­யி­னரை இந்­தியா கையேற்­ற­தோடு கச்­ச­தீ­வையும் இலங்­கைக்குக் கொடுத்­தி­ருந்­தது.

தனது பந்­தோ­பஸ்­துக்­கான இலங்­கை­யோ­டுள்ள அர­வ­ணைப்பு இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­யினும் அதில் இலங்­கையின் உள்­நாட்டு விவ­கா­ரமும் சம்­பந்­தப்­பட்டே இருக்­கி­றது. காரணம் இலங்­கையின் உள்­வி­வ­காரம் சீராகி இருந்தால் தான் இந்­தி­யாவின் பாது­காப்­புக்கும் உத்­த­ர­வாதம் இருக்கும். எனவே, இலங்கை இதை தனக்­கெ­தி­ரான இந்­தி­யாவின் தலை­யீடு எனக் கருத முடி­யாது.

இந்­துமா சமுத்­திரம் இந்­தி­யாவின் பெய­ரா­லேயே அழைக்­கப்­ப­டு­கி­றது. இதில் ஒரு சிறிய தீவான இலங்­கைக்கு இந்­தி­யாவின் பாது­காப்பை விட்டால் வேறு வழி­யில்லை.

இலங்­கையின் வடக்­கோடு இந்­தி­யாவின் தமி­ழகம் 18 மைல் கடல்­தூ­ரமே இருக்­கி­றது. எனவே இங்கு பிரச்­சினை ஏற்­பட்டால் அங்கும் 7 கோடி பேர் மத்­திய அர­சுக்­கெ­தி­ராகக் கிளம்­பவே செய்வர். இதனால் இந்­தியா தமிழர் சார்புக் கொள்­கைக்குத் திரும்ப வேண்­டி­ய­தா­யிற்று. 13 ஆம் ஷரத்தை வலிந்து திணித்து அதை அமுல்­ப­டுத்­து­மாறும் வற்­பு­றுத்­தி­யது. பதி­லுக்கு இந்த ஆத்­தி­ரத்தில் இலங்கை சீனாவின் நெருக்­கத்தை நாடிச் சென்­று­விட்­டது. இதை எதிர்­பார்த்­தி­ருந்த சீனாவும் இலங்­கைக்குப் பல உத­வி­க­ளையும் புரிந்து உறவை வளர்த்துக் கொண்­டது. காரணம் இந்த உறவு சீனாவின் பொரு­ளா­தார உயர்­வுக்கு இன்­றி­ய­மை­யா­த­தே­யாகும். எனவே சில உத­வி­களை சீனா இலங்­கைக்கு வழங்­கி­யது. இதன் மூலம் இந்­தி­யா­விடம் தான் எதிர்­பார்த்­தி­ருந்­த­வற்றை சீனா­வி­ட­மி­ருந்தும் பெற்றுக் கொண்டு இந்­தி­யா­வையும் சீனா­வையும் இலங்கை சம­நி­லைப்­பாட்­டுக்குள் வைத்துக் கொள்ளும் இரா­ஜ­தந்­தி­ரத்தை கையாண்­டது.

எந்த நாட்­டுக்கும் தான் விரும்பும் நாட்­டோடு உறவு கொள்­ளவும் ஒப்­பந்தம் செய்­யவும் உரிமை உண்டு. எனினும் சாதக பாத­கங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இது தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும். இலங்கை சீன உறவை அமெ­ரிக்க இந்­தி­யக்­கூட்டு தமது பாது­காப்­புக்கு இடை­யூறு என்றே கரு­து­கின்­றன. சீனா தனக்குத் தேவை­யான அதிக அளவு பெற்­றோலை அரபு நாடு­க­ளி­லி­ருந்தும் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந் தும் சில­நா­டு­க­ளி­னூ­டாகக் குழாய்கள் மூலம் பெற்றுக் கொள்ள வகுக்­கப்­பட்­டதே சீனாவின் முத்­து­மாலைத் திட்­ட­மாகும். இதனால் அமெ­ரிக்­காவின் இடைஞ்சலின்றி சீனாவுக்கும் பெற்றோல் எளிதாகக் கிடைக்கிறது. எனினும் இந்தியாவின் சுய பாதுகாப்புக்குரிய இந்து மா சமுத்திரத்தீவான இலங்கையும் அதற்கு உள்வாங்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம் இந்தியாவைச் சுற்றி மாலைபோல் சீனாவின் அத்திட்டம் அமைவதாகும்.

இந்நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு பசுபிக்கை நோக்கி மையம் கொள்ளுதல் எனும் திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. காரணம் இந்து மா சமுத்திரப் பகுதியில் அதற்கு எந்த நாட்டின் ஆதரவும் இல்லாதிருந்ததேயாகும். எனவே இந்து மா சமுத்திரத்திலுள்ள தனது டியூகோகி றேஷியா தீவின் பாதுகாப்பை அது வலுப்ப டுத்த வேண்டியிருந்தது. அங்கு அது அமைத்திருந்த இராணுவ தளம் பசுபிக் கடற் பிராந்தியத்தில் முக்கியமானதாகும். இதனால் மாலைதீவிலும் கூட அமெரிக்கா புதிதாக ஓர் இராணுவ தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் இப்போது பசுபிக் பகுதியில் அமெரிக்காவும் சீனா வும் தத்தமக்கென இரு அணிகளை உருவாக்கி யுள்ளன. இந்தி யாவும், ஜப்பானும் அமெரிக்க சார்பாகவும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மியன்மார், கம்போடியா, வியட்நாம், இலங்கை ஆகி யன சீனா சார்பாகவும் இருக் கின்றன.

ஏ.ஜே.எம்.நிழாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல