தம்புள்ளை அம்மன் கோவிலுக்கு ஏற்பட்ட நிலை தற்போது அங்குள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசலுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தம்புள்ளையில் புனித பூமிக்குள் இந்த இரு வணக்கஸ்தலங்களும் அமைந்துள்ளமையினால் அவற்றை அங்கிருந்து அகற்றவேண்டுமென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் தம்புள்ளையில் அமைந்திருந்த அம்மன் கோவில் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இடிக்கப்பட்டதுடன் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆலயத்தின் மூலவிக்கிரகம் உடைக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு விதமான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக ஆலயத்தை அங்கிருந்து அகற்றும் நிலை ஏற்பட்டது.
அம்மன் ஆலயத்தை அமைப்பதற்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என்று மதவிவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரத்ன உட்பட பல தரப்பினரும் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரை மாற்றுக்காணியும் வழங்கப்படவில்லை. ஆலயமும் மீள அமைக்கப்படவில்லை. தம்புள்ளையில் அம்மன் ஆலயம் இருந்ததென்ற வரலாறே தற்போது அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தம்புள்ளை ஹைரியா ஜும்மா பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இந்தப் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கு பேரினவாத சக்திகள் முனைப்புக்காட்டியிருந்தன. புனித பூமி, அபிவிருத்தி என்ற போர்வையில் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிஹாராதிபதி இனமாலுவே சுமங்கலதேரர் இந்தப் பள்ளிவாசலை அகற்றவேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக செயற்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இவரது தலைமையிலான குழுவினரே பள்ளிவாசலை அகற்றுமாறு முதன்முதலில் கோரியிருந்தனர். இதன் பின்னணியிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை அடுத்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் வன்முறைகள் பல்வேறு இடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதுவரை 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் பள்ளிவாசல் பகுதி யில் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிஹாரையின் விகாராதிபதி இனமாலுவே சுமங்கல தேரரின் தலைமையில் சுமார் 40 பொலிஸாரின் பாதுகாப்புடன் பாதையை 60 அடிக்கு அகலமாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இந்தப் பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரிடம் முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதனைவிட பள்ளிவாசலுக்கு நேரடியாகவே பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். இவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் பஷில்
ராஜபக் ஷவை சந்தித்து பேசியதுடன் பள்ளி வாசல்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்குமாறும் கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பஷில்
ராஜபக் ஷ, தனிநபர்களோ அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்திருந்தார். இதேபோல் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து ஆபத்து நிலைகுறித்து ஆராய்ந்திருந்தார்.
இவ்வாறு பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முஸ்லிம் தலைவர்கள் அரச உயர்மட்டத்திற்கு எடுத்துக்கூறிய போதிலும் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. பள்ளி வாசலை அகற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறான சிக்கலான நிலையில் நேற்று முன்தினம் மாலை மாத்தளை மேயரும் மாத்தளை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ஹில்மி கரீம் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். தம்புள்ளை பள்ளிவாசலில் இடம் பெற்ற நிர்வாக சபையினருடனான கலந்துரையாடலிலேயே பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு மாற்றுக்காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தம்புள்ளையிலேயே வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இனம்காணும் நான்கு காணிகளில் ஒரு காணியை பள்ளிவாசலுக்காக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அகற்றப்படும் பள்ளிவாசலை மாற்றுக்காணியில் நிர்வாகமே கட்டிக்கொள்ளவேண்டுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. புனித பூமி என்ற பெயரில் இடம் பெறும் அபிவிருத்திகளுக்காக கடந்தவருடம் தம்புள்ளையிலிருந்த அம்மன் கோவில் அகற்றப்பட்டது. தற்பொழுது அங்கிருந்தபள்ளிவாசலும் அகற்றப்பட்டிருக்கின்றது.
தற்போது பள்ளிவாசலை அமைப்பதற்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றிய பின்னர் மாற்றுக்காணி வழங்காது இழுத்தடிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் தலைமைகளும் சிந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் தம்புள்ளை அம்மன் கோவில் அகற்றப்படும் பொழுதும் பெரும் சர்ச்சை ஏற்பட்ட அந்த வேளையில் மாற்றுக்காணி வழங்கப்பட்டு ஆலயம் அமைத்துக் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அந்த உறுதிமொழியானது காற்றில்
பறக்க விடப்பட்டுள்ளது. இதே நிலை இந்தப் பள்ளிவாசலுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
புனித பூமி என்ற பெயரில் அம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றியதுபோல் மாற்றுக் காணியொன்றை வழங்கி அதில் ஆலயத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆலயம் அகற்றப்பட்டு ஒருவருடம் ஆகின்றபோதிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஆலய விவகாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பள்ளிவாசலுக்கான மாற்றுக்காணியை உடன் தெரிவு செய்து அதில் பள்ளிவாசலை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பள்ளிவாசல் ஒன்று தம்புள்ளையில் இருந்தது என்பதற்கான அடையாளமே இல்லாது போய்விடும்.
நாட்டில் இன, மத உறவுகளை மேம்படுத்த வேண்டுமானால் தம்புள்ளையில் மாற்று இடங்களிலாவது ஆலயத்தையும், பள்ளி வாசலையும் அமைக்கவேண்டியது அவசியமாகும். இந்த விட யத்தில் அரசாங்கமும் தீவிரகவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
இந்த நிலையில் கடந்த வருடம் தம்புள்ளையில் அமைந்திருந்த அம்மன் கோவில் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இடிக்கப்பட்டதுடன் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆலயத்தின் மூலவிக்கிரகம் உடைக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு விதமான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக ஆலயத்தை அங்கிருந்து அகற்றும் நிலை ஏற்பட்டது.
அம்மன் ஆலயத்தை அமைப்பதற்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என்று மதவிவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரத்ன உட்பட பல தரப்பினரும் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரை மாற்றுக்காணியும் வழங்கப்படவில்லை. ஆலயமும் மீள அமைக்கப்படவில்லை. தம்புள்ளையில் அம்மன் ஆலயம் இருந்ததென்ற வரலாறே தற்போது அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தம்புள்ளை ஹைரியா ஜும்மா பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இந்தப் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கு பேரினவாத சக்திகள் முனைப்புக்காட்டியிருந்தன. புனித பூமி, அபிவிருத்தி என்ற போர்வையில் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிஹாராதிபதி இனமாலுவே சுமங்கலதேரர் இந்தப் பள்ளிவாசலை அகற்றவேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக செயற்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இவரது தலைமையிலான குழுவினரே பள்ளிவாசலை அகற்றுமாறு முதன்முதலில் கோரியிருந்தனர். இதன் பின்னணியிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலை அடுத்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் வன்முறைகள் பல்வேறு இடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதுவரை 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் பள்ளிவாசல் பகுதி யில் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிஹாரையின் விகாராதிபதி இனமாலுவே சுமங்கல தேரரின் தலைமையில் சுமார் 40 பொலிஸாரின் பாதுகாப்புடன் பாதையை 60 அடிக்கு அகலமாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இந்தப் பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரிடம் முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதனைவிட பள்ளிவாசலுக்கு நேரடியாகவே பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். இவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் பஷில்
ராஜபக் ஷவை சந்தித்து பேசியதுடன் பள்ளி வாசல்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்குமாறும் கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பஷில்
ராஜபக் ஷ, தனிநபர்களோ அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்திருந்தார். இதேபோல் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து ஆபத்து நிலைகுறித்து ஆராய்ந்திருந்தார்.
இவ்வாறு பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முஸ்லிம் தலைவர்கள் அரச உயர்மட்டத்திற்கு எடுத்துக்கூறிய போதிலும் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. பள்ளி வாசலை அகற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறான சிக்கலான நிலையில் நேற்று முன்தினம் மாலை மாத்தளை மேயரும் மாத்தளை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ஹில்மி கரீம் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். தம்புள்ளை பள்ளிவாசலில் இடம் பெற்ற நிர்வாக சபையினருடனான கலந்துரையாடலிலேயே பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு மாற்றுக்காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தம்புள்ளையிலேயே வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இனம்காணும் நான்கு காணிகளில் ஒரு காணியை பள்ளிவாசலுக்காக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அகற்றப்படும் பள்ளிவாசலை மாற்றுக்காணியில் நிர்வாகமே கட்டிக்கொள்ளவேண்டுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. புனித பூமி என்ற பெயரில் இடம் பெறும் அபிவிருத்திகளுக்காக கடந்தவருடம் தம்புள்ளையிலிருந்த அம்மன் கோவில் அகற்றப்பட்டது. தற்பொழுது அங்கிருந்தபள்ளிவாசலும் அகற்றப்பட்டிருக்கின்றது.
தற்போது பள்ளிவாசலை அமைப்பதற்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றிய பின்னர் மாற்றுக்காணி வழங்காது இழுத்தடிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் தலைமைகளும் சிந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் தம்புள்ளை அம்மன் கோவில் அகற்றப்படும் பொழுதும் பெரும் சர்ச்சை ஏற்பட்ட அந்த வேளையில் மாற்றுக்காணி வழங்கப்பட்டு ஆலயம் அமைத்துக் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அந்த உறுதிமொழியானது காற்றில்
பறக்க விடப்பட்டுள்ளது. இதே நிலை இந்தப் பள்ளிவாசலுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
புனித பூமி என்ற பெயரில் அம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றியதுபோல் மாற்றுக் காணியொன்றை வழங்கி அதில் ஆலயத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆலயம் அகற்றப்பட்டு ஒருவருடம் ஆகின்றபோதிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஆலய விவகாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பள்ளிவாசலுக்கான மாற்றுக்காணியை உடன் தெரிவு செய்து அதில் பள்ளிவாசலை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பள்ளிவாசல் ஒன்று தம்புள்ளையில் இருந்தது என்பதற்கான அடையாளமே இல்லாது போய்விடும்.
நாட்டில் இன, மத உறவுகளை மேம்படுத்த வேண்டுமானால் தம்புள்ளையில் மாற்று இடங்களிலாவது ஆலயத்தையும், பள்ளி வாசலையும் அமைக்கவேண்டியது அவசியமாகும். இந்த விட யத்தில் அரசாங்கமும் தீவிரகவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக