பிரேசிலைச் சேர்ந்த 6 அடி 8 அங்குல உயரமான யுவதி, தனது 5 அடி 4 அங்குல உயரமான காதலரை திருமணம் செய்து உலகில் மிகவும் உயரமான மணப்பெண் என்ற பெயரை தனதாக்கிக் கொள்வதற்கு தயாராகி வருகிறார்.
எலிசானி டா குருஸ் சில்வா என்ற மேற்படி யுவதி, தன்னை விடவும் ஒரு அடி 4 அங்குலம் உயரம் குறைந்த தனது காதலரான பிரான்சினால் டோ டா சில்வா கர்வல் ஹோவை கடந்த 3 வருட காலமாக காதலித்து வருகிறார். அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், பிரான்சினால்டோ அண்மையில் எலிசானியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை அவரிடம் வெளியிட்டு திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அவருக்கு அணிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர்.
கபச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டியொன்றால் அதீத வளர்ச்சியடையும் பாதிப்புக்குள்ளான எலிசானி, தனது பாதிப்பால் கர்ப்பமடைவது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகக் கூறினார்.
பிரான்சினால்டோவுடனான காதல் தொடர்பு குறித்து எலிசானி விபரிக்கையில், பிரான்சினால்டோவை தனது 16 வயதிலேயே முதன்முறையாக சந்தித்ததாவும் ஆரம்பத்தில் தான் அவரை வெறுத்ததாகவும் கூறினார்.
எலிசானி டா குருஸ் சில்வா என்ற மேற்படி யுவதி, தன்னை விடவும் ஒரு அடி 4 அங்குலம் உயரம் குறைந்த தனது காதலரான பிரான்சினால் டோ டா சில்வா கர்வல் ஹோவை கடந்த 3 வருட காலமாக காதலித்து வருகிறார். அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், பிரான்சினால்டோ அண்மையில் எலிசானியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை அவரிடம் வெளியிட்டு திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அவருக்கு அணிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர்.
கபச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டியொன்றால் அதீத வளர்ச்சியடையும் பாதிப்புக்குள்ளான எலிசானி, தனது பாதிப்பால் கர்ப்பமடைவது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகக் கூறினார்.
பிரான்சினால்டோவுடனான காதல் தொடர்பு குறித்து எலிசானி விபரிக்கையில், பிரான்சினால்டோவை தனது 16 வயதிலேயே முதன்முறையாக சந்தித்ததாவும் ஆரம்பத்தில் தான் அவரை வெறுத்ததாகவும் கூறினார்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக