புதன், 30 ஜூலை, 2014

சக மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்று தலையையும் கையையும் துண்டித்த சிறுமி

Aiwa-Matsuo
சக வகுப்பு மாண­வியை கழுத்தை நெரித்­துக் ­கொன்று அவ­ரது தலையை வெட்டி, கைக­ளி­லொன்றை துண்­டு­க­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 15 வயது சிறு­மி­யொ­ருவர் கைதுசெய்­ய­பட்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் ஜப்பானில் இடம்­பெற்­றுள்­ளது.



டோக்­கி­யோவின் தென்­மேற்கே 900 மைல் தொலைவில் சஸெபோ நக­ரி­லுள்ள தனது வீட்டில் வைத்தே குறிப்­பிட்ட சிறுமி இந்தப் படு­கொ­லையை மேற்­கொண்­டுள்ளார்.

அயி­வா­ மட்­ஸுகோ என்ற குறிப்­பிட்ட மாணவி (வயது 15) படு­கொ­லையை மேற்­கொண்ட சிறு­மியின் வீட்­டிற்கு சென்ற போதே இந்த கொடூரம் நிகழ்ந்­துள்­ளது.

இதன்­போது குறிப்­பிட்ட சிறுமி அயி­வாவின் தலையில் கூரிய உப­க­ர­ண­மொன்றால் 10 க்கு மேற்­பட்ட தட­வைகள் தாக்கி அவரை மயக்­க­ம­டையச் செய்த பின் அவ­ரது கழுத்தை நெரித்து அவரை படு­கொலை செய்­துள்ளார்.

இந்த படு­கொலைச் சம்­ப­வ­மா­னது ஜப்­பா­னிய மக்­க­ளி­டையே பெரும் அதிர்ச்­சியை தோற்­று­வித்­துள்­ளது.

தற்­போது படு­கொ­லையை மேற்­கொண்ட சிறுமி பொலி­ஸாரால் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல