பூனைகளை பாதுகாக்க திண்டாடும் அவற்றின் உரிமையாளர்கள்
வியட்நாமில் பூனை இறைச்சித் தின்பண்டத்துடன் பியர் பானத்தையும் பரிமாறுவது பிரபலமடைந்து வருவதால் இறைச்சிக்காக தமது பூனைகள் கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அங்குள்ள பூனை உரிமையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் 'ஏ.எவ்.பி' ஊடகம் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது.
பூனை இறைச்சிக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அந்நாட்டின் ஹனோய் நகர் உள்ளடங்கலான நகர்களில் பூனை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பூனைகளை கொன்று அதன் உரோமத்தை சவரம் செய்து அகற்றிய பின் எஞ்சியுள்ள உரோமங்கள் சுட்டுப்பொசுக்கப்படுகிறது.
அதன்பின் அந்த பூனை சுத்திகரிக்கப்பட்டு அதன் தேவையற்ற உடல் பகுதிகள் அகற்றப்பட்டு அதன் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெள்ளைப்பூண்டுடன் சேர்த்து பொரிக்கப்படுகிறது.
அதன்பின் அந்த பொரித்த பூனை இறைச்சியுடன் மரக்கறி கலவைகளை சேர்த்து வதக்கி பியர் பானத்துடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.
மத்திய ஹனோயிலுள்ள உணவகமொன்றின் முகாமையாளரான ருவான் டங் (35 வயது) விபரிக்கையில், தமது உணவகத்தில் பூனை இறைச்சிக்கு பெரும் கிராக்கி நிலவுவதாக தெரிவித்தார்.
வியட்நாமில் பூனை இறைச்சிக்கு நிலவும் கிராக்கியால் அந்நாட்டுக்கு அயல்நாடுகளான தாய்லாந்து மற்றும் லாவோஸிலிருந்து பூனைகள் கடத்தி எடுத்துவரப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இறைச்சிக்காக பூனைகள் திருடப்படலாம் என்ற அச்சத்தில் பூனை உரிமையாளர்கள் தமது செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக