வளம் கொழிக்கும் விளை நிலங்களோடும் அழகிய வனப்புகளோடும் அமைதியாக தமதுதாயகங்களில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் மீது அந்நிய ஆக்கிரமிப்பை அறிமுகம் செய்த காலனித்துவ ஆதிக்கம், தேசிய இனவொடுக்குமுறை என்னும் புற்றுநோயை விட்டுச் சென்றது. ஆரம்பத்தில் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட உரிமைகள் தொடரும் காலத்தில் அணை உடைக்கும் அருவிபோல் மாறவும் சாத்வீகம் முதல் சரணடையா தன்மானத்துடன் உரிமைக்காக போராடிேயவந்தது தமிழினம்; தமிழ்த் தேசிய உரிமைக்காக எழுந்த அதியுச்ச வீச்சுணர்வு ஒரு சாராருக்கு பயங்கரவாதமாக புலப்படவும் மனிதாபிமானத்தின் பெயரால் அதனை முள்ளிவாய்க்கால் மூலையில் வைத்து முடக்கினர். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவருமே ஒரு பிரதேசத்திற்குள்ளே முடக்கப்பட்டு உயிர் துறக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தமிழ் மக்கள் செய்த தியாகங்களின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்கால்.
2004இல் சமாதான உடன்படிக்கை கைகழுவப்பட்டு நெருக்கடியான நிலைமைகளிலும் விளைநிலங்களுக்கு மத்தியில் செழிப்புடன் வாழ்ந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உடுத்த உடையுடன் ஊரிழந்து, உறவிழந்து, ஊணின்றி உறக்கமின்றி இலவசமாய் வழங்கப்பட்ட அகதிப் பட்டத்துடன் முகாம் என்னும் குடிலுக்குள் முடக்கப்பட்டார்கள் .
அகதி என்ற வார்த்தைக்குச் சில உரிமைகளும் பல தேவைகளும் இருக்கம். தமிழர்களுக்கும் இருந்தது. ஆனால், அவை வழங்கப்பட்டதா?
முள்ளிவாய்காலில் நிறைவுற்ற வெஞ்சமரில் அனைத்தையுமே இழந்து ஏதிலிகளான எஞ்சிய தமிழர்கள் பாலையும், நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மீண்டும் சென்றாலே நாம் விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரமாவோம் என்ற தன்னிகரில்லா தன்னம்பிக்கையுடன் கோரிநின்றனர். இன்று கோரம் நிறைந்த யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன. இருந்தபோதும் சொந்த மண்ணுக்கு திரும்பும் பாக்கியம் அனைவருக்கும் இதுவரையில் கிடைக்கவில்லை
யுத்தத்தின் இறுதி நாட்களிலும் முகாம் கால அவலத்தின் போதும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த யாருக்கும் உயிருக்கான உத்திரவாதம் கொடுக்கப்படாத நிலையில் சில சர்வதேச தொண்டு நிறுவனங்களுடைய பங்கு, பணிகள் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தன. அவ்வாறிருக்கையில் தற்போதும் வலிகளின் வடுக்களுடன் இருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியேறி வாழ்க்கையை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கும் மக்களின் துயரைப்போக்கும் விதமாக சுமார் 600இற்கும் மேற்பட்டவர்களுக்கு ஐ.சி.ஆர்.சி நிறுவனம் களஆய்வின் மூலம் தெரிவு செய்து உதவியளித்திருக்கின்றது. அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு நேரடியாகச் சென்ற போது உதவி பெற்ற பயனாளிகள் சிலரை சந்திக்க நேர்ந்தது.
மொங்கொலியன், செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்த போர். ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் திமோர், தற்போது காஸா என எத்தனையோ போர்க்களங்கள் வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித அவலத்துக்கு காரணமான முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு நேரில் முகங்கொடுத்தவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சைக் கணமாக்கியது. ஓடும் குருதியை உறையவைத்தது. தொண்டையை வறட்டியது. பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட விசுவமடு முதல் சுதந்திரபுரம் வரை சுமார் 35.5 கிலோமீற்றர் தூரத்தை பொடிநடையாக கடந்து சொல்லொண்ணா இன்னல்களைக் கடந்து கரைசேர்ந்தவர்கள் இன்று தமக்காக இல்லாவிட்டாலும் தமது உறவுகளின் எதிர்காலத்துக்காக எம்மாலும் முடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் அன்றாட வாழ்க்கை என்ற பேரலையில் எதிர்நீச்சலடிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களின் கடந்தகாலத்தையும் எதிர்கால எதிர்பார்ப்பையும் முழுமையான நம்பிக்கையுடன் பின்வருமாறு விவரிக்கின்றார்கள்.
நான் இப்ப கிளிநொச்சி கனகபுரத்தில் சலூன் ஒன்றை வைச்சு நடத்திக்கொண்டுஇருக்கிேறன். என்ட சொந்த இடம் மல்லாவில வவுனிக்குளம். 2004இல் இயக்கத்தில் இருந்து விலத்தினாப்பிறகு திருமணம் செய்தன். இப்ப எனக்கு எட்டு, ஆறு வயதில இரண்டு பெண்பிள்ளைகள். படிச்சுக்கொண்டிருக்கினம். 2009இல் இடம்பெயர்ந்து கைக்குழந்தையோட முள்ளிவாய்க்கால் பக்கம் போனம். அப்பத்தான் ஷெல் விழுந்ததால என்ட மனைவி காயமடைந்தா.
எனக்கும் சின்னச்சின்ன காயங்கள் தான். ஒரு மாதிரி உயிரை கையில பிடிச்சுக்கொண்டு அங்கேருந்து வெளிய வந்தம். மனைவி ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. ஒரு மாதிரி அவாவ காப்பத்திட்டாங்க. ஆனால் இப்ப அவாவால குனிஞ்சு நிமிந்தோ இல்ல குறைஞ்ச பாரத்தை கூட தூக்க முடியாத நிலையில இருக்கிறா. அவட உயிருக்கு ஆபத்தில்லாம போனதே பெரிய விசயம்.
நான் வவுனியாவில இருக்கிற பம்பைமடு முகாமில புனர்வாழ்வு பயிற்சியை எடுத்துக்கொண்டு 2013.-01-.16இல் விடுதலையானன். அந்த நேரத்தில என்ட குடும்பம் இருந்த நிலைமையை என்னால இன்டைக்கும் மறக்க முடியல. பரம்பரைத் தொழில் முடி வெட்டிறது என்றதால நான் இப்ப நடத்திற இந்த பொதிகை சலூனில வேலைக்குச் சேர்ந்தன். அதில கிடைச்ச வருமானத்தை வைச்சு எண்ட குடும்பம் ஒருமாதிரி ஒடிக்கொண்டு போச்சுது. பிறகு ஓணர் வெளிநாட்டுக்கு போகேக்க இந்த கடையை எனக்கு தந்தார். இப்ப எனக்கு கிடைச்ச உதவியையும் வைச்சுக்கொண்டு மாதம் மாதம் உழைச்சு அந்த கடனை அவருக்கு கட்டிக்கொண்டு வாரன்.
ஆன.........(கண்கள் கலங்கியவாறு) எனக்கு இப்ப 38 வயதாகுது சில நேரங்கள்ல நெஞ்சு அடைத்துக்கொள்ளும். இப்ப சில மாதங்களுக்கு முன்னால அப்பிடி வந்தபோது கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு போனன். அங்கு நிறைய சோதினை செய்தவை. அப்ப என்ட நெஞ்சில ஷெல் பீஸ் ஒன்டு இருக்கிறதை கண்டு பிடிச்சினம். பிறகு கொழும்புக்கு கொண்டு போய் காட்டச் சொல்லிச்சினம். அங்க ஒரு பிறைவேட் கொஸ்பிட்டல்ல காட்டினன்.
அங்க பீஸ் சின்னதா இருக்கிறதாயும் ரத்தம் ஓடேக்க பீஸும் ஓடுறதால தான் நெஞ்சடைக்குதெண்டும் ஒப்பரேசன் செய்தா சரியாய் போகும் எண்டும் சொல்லிச்சினம். ஆனால் அதுக்கு ஐஞ்சு லட்சம் வேணுமாம். கொழும்பில இருக்கிற அரசாங்க ஆஸ்பத்திரில செய்யிற எண்டா இங்க கடையை பூட்டிப்போட்டுத்தான் போகனும். அப்பிடிச்செய்தா குடும்பச் செலவில இருந்து எல்லாமே இறுக்கமாய் போயிடும். பிள்ளையளையும் மனைவியையும் பாக்கவும் யாரும் இல்ல. உழைப்ப பாக்கிறதா? இல்ல வருத்தத்தை பாக்கிறதா? அதான் என்ன செய்யிறது எண்டு தெரியல. ஒரே யோசனையாய் கிடக்குது.
இது புதுக்குடியிருப்பு கிழக்கு. நான் இங்க வில்லவம் என்ற பெயரில தேநீர் கடையொன்றை நடத்தி வாறன். எனக்கு கிடைச்ச உதவியை வைச்சு இந்த கடைய தொடங்கினன். இதில தான் எனது குடும்ப வருமானம் முழுசாய் தங்கியிருக்குது.
1991இல என்ட மகன் ஜெயனந்தனுக்கு ஒருவயது. கிபிர் தாக்குதல்ல ஏற்பட்ட அதிர்ச்சியால பதிக்கப்பட்டார். அதோட வாய்பேசமலும் போய்டார். எங்கெங்கல்லாமோ அலைஞ்சு திருஞ்சம். எத்தனையோ பிரார்த்தனை செய்தம். கடைசியாய் டொக்டர் ஒருவர் ஒபரேஷன் ஒண்டு செய்யனும் என்டார். அதுக்கு பிறகு இருந்ததைவிட கொஞ்சம் குணமானார்.
எங்களின்ட ஒரு குழந்தைக்கு இப்பிடியாகிட்டுது என்ற கவலையோட நானும் கணவனும் இருந்தம். அப்பிடியே ஒரு பதினேழு வருசம் போனாப்பிறகு 2008இல் அப்ப என்ட கணவர் மேசன் வேலைக்குப் போய்க்கொண்டும் பலசரக்கு கடை நடத்திக்கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஷெல் வந்து வீழ்ந்ததில காணவரும் கடுமையாய் காயமடைந்தார். இப்ப அவராலயும் பெரிய வேலைகளைச் செய்யமுடியாதிருக்குது. இந்திய வீட்டுத்திட்டம் கிடைச்சிருக்கு. மெல்ல மெல்ல வீட்டைக் கட்ட தொடங்கப்போறம்.
ஆனா எங்கட மண் கிணத்தில இருந்து தண்ணியை எடுத்துத்தான் நாங்கள் இப்ப வீட்டில சாப்பாடுகளைச் செய்து வித்துக்கொண்டுவாரம். போனகிழமை உணவு சுகாதார பரிசோதகர்கள் இங்க வந்து மண்கிணத்தில இருக்கிற தண்ணியை பாவிச்சு சாப்பாடுகளைச் செய்யுறதை நிப்பாட்டச் சொல்லீட்டினம். எங்களுக்கு நல்ல தண்ணி வெளியில இருந்து கொண்டுவாரத்துக்கு யாருமில்லை. அந்தக்கிணறு 114அடி ஆழம் வேற அதைப் சீமந்தால பூசவும் பெரிய செலவு. இந்தப் பிரச்சினை எப்பிடித் தீரப்போகுதெண்டு தெரியல.
எனக்கு இப்ப 24வயதாகுது. சொந்த இடம் விசுவமடு. இப்ப விசுவமடு டவுன்ல வெத்திலை, கோயில் சாமான்கள் விக்கிற கடையொன்றை நடத்திக்கொண்டு வாறன். நான், அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி என குடும்பத்தில ஐஞ்சுபேர். தம்பியும், தங்கச்சியும் விசுவமடு மகாவித்தியாலயத்தில படிச்சுக்கொண்டிருக்கினம்.
அப்பா மட்டும் தான் விவசாயம் செய்து எங்களை படிக்க வைச்சுக்கொண்டிருந்தார். அது போதல. நான் ஓயலோட என்ட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குச் சேரலாம் எண்டு நினைச்சன். மன்னாரில வேலையொண்டு இருக்கு என்ற செய்தி வர நான் அங்க சந்தோசமாய் போனேன். அன்றைக்கு திகதி 2008-.02.-28 எண்டு நினைக்கிறன். திடீரென ஷெல் வரத் தொடங்கீட்டு. எல்லாரையும் போல நானும் கிடைச்ச இடத்தில ஒழிஞ்சுகொண்டன். என்ன நடந்தது என்றே தெரியல . என்ட ஒரு கால இழக்க வேண்டியதாப் பேச்சு. நிறையவே அழுதன். கடைசில என்ட வாழ்கையே அங்க தொலைஞ்சு போச்சு. எல்லாமே முடிஞ்சுபோச்சு என்டு வீட்டுக்கு வந்தன்.
அப்பா விவசாயம் செய்வார் அம்மா தம்பி தங்கச்சி எல்லாரும் அவருக்கு உதவி செய்வினம். என்னால எதுவுமே செய்யமுடியலேயே எண்டு ஒவ்வொரு நாளும் எனக்குள்ளேயே கவலைப்பட்டு நொந்துகொள்ளுவன். பிறகு எனக்கு செயற்கைகால் கிடைச்சுது. ஊன்று கோலுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சன். இருந்தாலும் கடைசி யுத்தம் வந்தது. இடம்பெயர்ந்து போனம். நிறையவே நடக்க வேண்டியிருந்ததால எனக்கு சரியான கஷ்டமாய் இருந்தது. பிறகு முகாமில இருந்து இயக்கதில இருக்கவில்லை என்டாலும் புனர்வாழ்வுக்கும் போனேன். 2010இல வெளியில வந்து குடும்பத்துடன் சேர்ந்த போது சந்தோசமாய் இருந்தது. ஆனால் கடுமையான கஸ்டத்தால என்ன செய்யிறதென்று தெரியாம இருந்தது. ஒருவேளை மட்டுமே முழுமையாய் சப்பிட முடிஞ்சுது. வீட்டுக்கு பின்னுக்கு இருக்கிற ஒன்றரை ஏக்கரில செய்த விவசாயமும் தண்ணி இல்லாததால நிறுத்த வேண்டியதாய் போச்சு. அப்பதான் எனக்கு உதவி கிடைச்சுது. விசுவ மடுவில வெத்தில கடையொன்றை போட்டன். அதோட பத்தி, பட்டு என சில கோயில் சாமான்களையும் போட்டு விக்கிறன். வீட்டில இருந்து ஒவ்வொரு நாளும் இப்ப 2கிலோமீற்றருக்கு கிட்ட சைக்கிள்ள தான் வந்து போவன்.
எனக்கு வெத்திலையை இங்க கொண்டுவந்து தாரவரும் என்னை மாதிரி தான் காலை இழந்தவர். அவர் எனக்கு உதவியாயும் இருக்கிறார். இப்ப இதில வாற வருமானத்தை வைச்சுத் தான் குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கு. தம்பியும் தங்கச்சியும் நல்லா படிக்கினம். இப்ப என்னாலையும் முடியும் என்டு ஒரு நம்பிக்கை வந்திருக்கு.
புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு தான் என்ட சொந்த இடம். 2002இல் திருமணம் செய்தன். கணவர் பலசரக்கு கடை வைச்சு நடத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தார். சந்தோசமாய் இருந்தம்.
2009இல் கடைச்சி சண்டையில தொடங்கிச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு போனம். பிறகு முகாமில இருக்கும் போது என்னை விட்டு பிரிந்து போயிட்டார். கொஞ்சநாளாய் எந்த தொடர்பும் இல்ல. பிறகு தான் அவர் வேற திருமணம் செய்துகொண்டு போனது தெரிசிஞ்சுது. அதுக்கு பிறகு விவகாரத்தாயிட்டு.
இப்ப என்ட மகன் ரதுஷன் புதுக்குடியிப்பு மத்திய கல்லூரியில 6ஆம் ஆண்டு படிச்சுக்கொண்டிருக்கிறார். போன மாதம் என்ட அம்மா இறந்ததால இப்ப எனக்கிருக்கிற ஒரே சொந்தம் என்டா அது மகன் மட்டும் தான். எனக்கு கிடைச்ச உதவியல நான் இப்ப திருப்பவும் பலசரக்கு கடையை நடத்தி வாறன். ஒரு நாளைக்கு 600ரூபாக்கு கிட்ட வருமானம் கிடைக்குது. மாசம் மகன்ட பெயரிலையும் என்டபெயரிலையும் கொஞ்சம் கொஞ்சம் சேமித்துக்கொண்டு வாரன்.
2001இல இருந்து 1500ரூபா வாடகை கொடுத்து இந்த கடைய நடத்திவாறன். எதிர்காலத்தில வீட்டுக்கு கிட்டவே சொந்தக்காணியில கடையை நடத்த திட்டமிட்டிருக்கிறதோட மகனை நல்லா படிக்க வைக்கிறது தான் என்ட ஒரே லச்சியம்.
என்ட சொந்த இடம் ஊர்காவற்துறை. பிரச்சினையலால இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தன். பிறகு கிட்டத்தட்ட மூண்டு வருசமாய் இயக்கத்தில இருந்தனான். அப்பா மெக்கானிக் என்றதால எனக்கு மெக்கானிக் வேலை தெரியும். மெக்கானிக் வேலை நல்லாத் தெரிஞ்சபடியாய் அப்பிடியான வேலைகள தான் எனக்கு இயக்கதில இருக்கேக்க தந்தவை.
பிறகு திருமணம் செய்தன். எனக்கு ஒரு பொம்பிளப்பிள்ளை பிறந்தது. அப்பிடியே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது. கடைசி சண்டை தொடங்கின நேரம் எல்லாரையும் போல நாங்களும் 209.-04.-08இல புதுமாத்தளன் பக்கம் போனம். அங்க என்ட மனைவி ஷெல் பட்டு இறந்திட்டா. அந்தக் கவலை ஒருபக்கம். என்ன செய்யிறது. என்ட பிள்ளையையாவது காப்பாத்தனுமே. எப்பிடியோ உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு ஒரு மாதிரி முகாமுக்கு வந்து சின்னப்பிள்ளையோட என்டபடியா 2009-10-14இல வெ ளிய
வந்திட்டன். வெளியில வந்து என்ன செய்யிறது என்டு தெரியல. நானும் மனைவியும் இருந்த மல்லாவி மூண்டாம் யுனிற்றுக்கு வந்தன். மெக்கானிக் கடையை சிறியதாய் ஆரம்பிச்சன். 2011இல கடைக்கு சாமான் எடுக்க கொழும்புக்கு போகேக்க நான் கைது செய்யப்பட்டன். பிறகு புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டு போய்யிட்டினம். அங்க தச்சு வேலையை பழகினன்.
2 1/2வருசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டன். வெளிய வந்து பிரதேச சபைக்குச் சொந்தமான இந்தக் கடையை 500ரூபா வாடகைப்படி எடுத்தன். கிடைச்ச நிதி உதவிய வைச்சுக்கொண்டு மலரவன் உதிரிப்பாக நிலையம் என்ற இந்தக் கடையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றன. மாதம் ஒரு 15ஆயிரத்துக்கு கிட்ட வருமானம் கிடைக்குது. சாதாரண வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்குது. சொந்தக்காணி இல்லாததால இந்திய வீட்டுத்திட்டமும் கிடைக்கல. எனக்கு இப்ப 33வயதாகுது. மகளுக்கு இப்ப 7வயதாகுது. நெடுங்கேணி மகாவித்தியாலத்தில படிக்கிறா. எதிர்காலத்தில நல்ல படிச்சு வரணும் என்றது தான் என்ட ஆசை.
எனக்கு இப்ப வயசு 34ஆகுது. ஏண்ட சொந்த ஊர் இது தான் நெடுங்கேணி மாமடுச்சந்தி. இங்க வந்தததில சந்தோசம். மூண்டு பிள்ளையள் இருக்கினம் மூத்தவருக்கு 14வயது வாய் பேச மாட்டார் என்றதால வீல்ட்டில படிக்கிறார். இரண்டாவது மூண்டாவது பொம்பிளப் பிள்ளையள். ஒராள் 2ஆம் ஆண்டு படிக்கிறா. மற்றவா முன்பள்ளிக்கு போறா. ஆடு வளக்கிறது தான் என்ட தொழில்.
நான் திருமணம் செய்து குடும்பத்தோட சந்தோசமாய் தான் வாழ்ந்தனான். கடைசி யுத்தம் தொடங்கினோன முள்ளிவாய்க்காலுக்கால போய் வவுனியா முகாமுக்கு ஒரு மாதிரி பிள்ளையளோட போய் சேர்ந்தம். நான் அப்ப நான் கர்ப்பமாய் இருந்தன். அந்த நேரத்தில கணவர் திடீரென வேற திருமணம் செய்துகொண்டு போய்டார். ஏன் எண்டு காரணங் கூட சொல்ல. நானும் பிள்ளையளும் அநாதாய் இருந்தம். என்ட சதோரங்களும் அப்பா அம்மாவும் இருந்ததால கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
பிறகு முகாமிலிருந்து வௌியில வந்து எங்கட இடத்தை விடும்போது இஞ்ச வந்தன். அப்பா தான் எனக்கு காவலாய் என்னோட எந்த நேரமும் இருப்பார். ஒரு கொட்டிலை போட்டுட்டு கொஞ்சம் கடனைப் பட்டு போயிலைக் கன்றை போட்டன் அதில கொஞ்சம் இலாபம் வர அதை வைச்சு பிள்ளையள பாத்துக்கொண்டன். அப்பாவும் உதவிசெய்வார். அதுக்கு பிறகு எனக்கு கிடைச்ச பண உதவியை வைச்சு எட்டு ஆடுகளை வாங்கினான். பிறகு அதுகள் குட்டிபோட்டு கொண்டு போக ஒண்டொண்டாய் விக்க தொடங்கினான். கொஞ்சம் இலாபம் கிடைக்க தொடங்கவும் அதையே தொடர்ந்து செய்ய தொடங்கினன்.
இப்ப ஒரு 50 ஆடுகளுக்கு மேல இருக்குது. ஆட்டை இறைச்சிக்குத் தான் விக்கிறன். ஒருகிலோ 500 ரூபாய்க்கு கிட்ட போகும். மாசம் ரண்டு மூண்டு ஆடுகள் விலைபோகும். அதைவைச்சு பிள்ளையளிண்ட படிப்பையும் வீடு கட்டுறதையும் பாக்கிறன். ஏனக்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைச்சாலும் முழுசா வீட்டைக் கட்ட அந்தக்காசு பத்தல. அதால ஆட்டை வித்து வாற காசையும் அதுக்காக செலவு பண்ணுறன். அதோட போயிலையும் அடுத்த பருவத்தில போடுறதாய் இருக்கிறன்.
என்ட கணவர் போனது எனக்கு ஆரம்பத்தில கஷ்டமாய் இருந்தது. அப்பா எனக்கு பாதுகாப்பா இருக்கிறதால கொஞ்சம் மனசில தெம்பு. என்ட பிள்ளையளை நல்லா படிக்க வைக்கனும். மூத்த மகன் வாய்பேசமாட்டார் என்றதுதான் எனக்கு கவலை. எண்டாலும் கொஞ்சங் கொஞ்சமாய் எல்லாம் சரியா வந்து எங்களுக்கு எண்டு ஒரு விடிவு இருக்கும் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்குது.
இந்த அறுவரின் கதைகளும் ஆயிரமாயிரம் செய்திகளை சொல்கின்றன. இன்னும் இதைப்போன்றதும் இதனை விட மோசமானதுமான எத்தனையோ கதைகள் ஏதோவொரு காரணத்துக்காக வௌியில் கூறமுடியாது மனங்களுக்குள் புதைந்திருக்கின்றன. தவிரவும் இன்று இறுதிச் சமர் கண்ட கிளி, முல்லை நிலங்கள் அழகிய காபட் வீதிகளுடன் காணப்பட்டாலும் எத்தனையோ மக்கள் ஏதோவொரு வகையில் கிடைத்த நாலைந்து தகரங்களை பரப்பி மண்குந்து வைத்து தரப்பாலால் சுவரமைத்து பச்சை உடைகளின் நடமாட்டத்தின் மத்தியிலும் , முட்கம்பி வேலி எல்லைகளுக்கு அருகிலும் வாழ்ந்து வருகின்றமையும் கமரா கண்ணுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் கண்கள் படம்பிடித்திருந்தன. ஒலிப்பதிவுப் கருவிக்கு விலங்கிடப்பட்ட நிலையில் இன்றைக்கோ நாளைக்கோ எங்கட சொந்த காணிக்கு போயிடுவம் என்றும் எங்களுக்கும் இந்தியன் வீட்டுத்திட்டம் ஓகே ஆயிடும் எண்டு விதானையர் சொன்னவர் என்றும் கூறுவதை காதுகள் நன்கே பதிவு செய்து கொண்டன.
குறித்த ஒரு தொண்டர் அமைப்பால் பேரவலத்திற்கு முகங்கொடுத்த அத்தனை மக்களின் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்து விடமுடியாது என்பது யதார்த்தம். அதேநேரம் தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனச் செயற்படுகள் முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது யாருடைய கடமையாகவிருக்கின்றது. மத்தியில் ஆட்சியல் அமர்ந்து கொண்டிருந்து தலைநகரிலும் தன்நகரிலும் ஜனநாயகம் பேசுவதால் எந்தப்பயனும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதை உணரவேண்டியது யார்? அதனை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? அதற்கான காலம் என்று ஏற்படப்போகின்றது?
ஒரு காலத்தில் குடும்பத்தோடு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து உலக தண்ணீர் தொட்டியில் சிறு உருண்டையாக விருக்கும் தாயகத்திற்கே சோறு போட்டும், பரம்பரை தொழில் செய்தும் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த ஒரு சமூகத்தை கொடிய போரின் விளைவு எந்தளவுக்கு புரட்டிப் போடுகின்றது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லா உதாரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பு மக்களே காணப்படுகின்றார்கள்.
நாம் தற்போது ஏழைகள் . கண்ணீர் விடுகின்றோம். நாம் ஏழைகள் ஆக்கப்பட்டோமே தவிர நிரந்தர ஏழைகள் அல்ல. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற சன்றோரின் பழமொழி போல் என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும். கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்ற நிலைமாறி ரணங்களுடன் நாமும் தலைநிமிர்வோம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை.
–ஆர்.ராம்–
(முற்றும்)
2004இல் சமாதான உடன்படிக்கை கைகழுவப்பட்டு நெருக்கடியான நிலைமைகளிலும் விளைநிலங்களுக்கு மத்தியில் செழிப்புடன் வாழ்ந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உடுத்த உடையுடன் ஊரிழந்து, உறவிழந்து, ஊணின்றி உறக்கமின்றி இலவசமாய் வழங்கப்பட்ட அகதிப் பட்டத்துடன் முகாம் என்னும் குடிலுக்குள் முடக்கப்பட்டார்கள் .
அகதி என்ற வார்த்தைக்குச் சில உரிமைகளும் பல தேவைகளும் இருக்கம். தமிழர்களுக்கும் இருந்தது. ஆனால், அவை வழங்கப்பட்டதா?
முள்ளிவாய்காலில் நிறைவுற்ற வெஞ்சமரில் அனைத்தையுமே இழந்து ஏதிலிகளான எஞ்சிய தமிழர்கள் பாலையும், நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மீண்டும் சென்றாலே நாம் விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரமாவோம் என்ற தன்னிகரில்லா தன்னம்பிக்கையுடன் கோரிநின்றனர். இன்று கோரம் நிறைந்த யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன. இருந்தபோதும் சொந்த மண்ணுக்கு திரும்பும் பாக்கியம் அனைவருக்கும் இதுவரையில் கிடைக்கவில்லை
யுத்தத்தின் இறுதி நாட்களிலும் முகாம் கால அவலத்தின் போதும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த யாருக்கும் உயிருக்கான உத்திரவாதம் கொடுக்கப்படாத நிலையில் சில சர்வதேச தொண்டு நிறுவனங்களுடைய பங்கு, பணிகள் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தன. அவ்வாறிருக்கையில் தற்போதும் வலிகளின் வடுக்களுடன் இருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியேறி வாழ்க்கையை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கும் மக்களின் துயரைப்போக்கும் விதமாக சுமார் 600இற்கும் மேற்பட்டவர்களுக்கு ஐ.சி.ஆர்.சி நிறுவனம் களஆய்வின் மூலம் தெரிவு செய்து உதவியளித்திருக்கின்றது. அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு நேரடியாகச் சென்ற போது உதவி பெற்ற பயனாளிகள் சிலரை சந்திக்க நேர்ந்தது.
மொங்கொலியன், செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்த போர். ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் திமோர், தற்போது காஸா என எத்தனையோ போர்க்களங்கள் வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித அவலத்துக்கு காரணமான முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு நேரில் முகங்கொடுத்தவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சைக் கணமாக்கியது. ஓடும் குருதியை உறையவைத்தது. தொண்டையை வறட்டியது. பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட விசுவமடு முதல் சுதந்திரபுரம் வரை சுமார் 35.5 கிலோமீற்றர் தூரத்தை பொடிநடையாக கடந்து சொல்லொண்ணா இன்னல்களைக் கடந்து கரைசேர்ந்தவர்கள் இன்று தமக்காக இல்லாவிட்டாலும் தமது உறவுகளின் எதிர்காலத்துக்காக எம்மாலும் முடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் அன்றாட வாழ்க்கை என்ற பேரலையில் எதிர்நீச்சலடிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களின் கடந்தகாலத்தையும் எதிர்கால எதிர்பார்ப்பையும் முழுமையான நம்பிக்கையுடன் பின்வருமாறு விவரிக்கின்றார்கள்.
சிவஞானம் சுரேஸ்
நான் இப்ப கிளிநொச்சி கனகபுரத்தில் சலூன் ஒன்றை வைச்சு நடத்திக்கொண்டுஇருக்கிேறன். என்ட சொந்த இடம் மல்லாவில வவுனிக்குளம். 2004இல் இயக்கத்தில் இருந்து விலத்தினாப்பிறகு திருமணம் செய்தன். இப்ப எனக்கு எட்டு, ஆறு வயதில இரண்டு பெண்பிள்ளைகள். படிச்சுக்கொண்டிருக்கினம். 2009இல் இடம்பெயர்ந்து கைக்குழந்தையோட முள்ளிவாய்க்கால் பக்கம் போனம். அப்பத்தான் ஷெல் விழுந்ததால என்ட மனைவி காயமடைந்தா.
எனக்கும் சின்னச்சின்ன காயங்கள் தான். ஒரு மாதிரி உயிரை கையில பிடிச்சுக்கொண்டு அங்கேருந்து வெளிய வந்தம். மனைவி ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. ஒரு மாதிரி அவாவ காப்பத்திட்டாங்க. ஆனால் இப்ப அவாவால குனிஞ்சு நிமிந்தோ இல்ல குறைஞ்ச பாரத்தை கூட தூக்க முடியாத நிலையில இருக்கிறா. அவட உயிருக்கு ஆபத்தில்லாம போனதே பெரிய விசயம்.
நான் வவுனியாவில இருக்கிற பம்பைமடு முகாமில புனர்வாழ்வு பயிற்சியை எடுத்துக்கொண்டு 2013.-01-.16இல் விடுதலையானன். அந்த நேரத்தில என்ட குடும்பம் இருந்த நிலைமையை என்னால இன்டைக்கும் மறக்க முடியல. பரம்பரைத் தொழில் முடி வெட்டிறது என்றதால நான் இப்ப நடத்திற இந்த பொதிகை சலூனில வேலைக்குச் சேர்ந்தன். அதில கிடைச்ச வருமானத்தை வைச்சு எண்ட குடும்பம் ஒருமாதிரி ஒடிக்கொண்டு போச்சுது. பிறகு ஓணர் வெளிநாட்டுக்கு போகேக்க இந்த கடையை எனக்கு தந்தார். இப்ப எனக்கு கிடைச்ச உதவியையும் வைச்சுக்கொண்டு மாதம் மாதம் உழைச்சு அந்த கடனை அவருக்கு கட்டிக்கொண்டு வாரன்.
ஆன.........(கண்கள் கலங்கியவாறு) எனக்கு இப்ப 38 வயதாகுது சில நேரங்கள்ல நெஞ்சு அடைத்துக்கொள்ளும். இப்ப சில மாதங்களுக்கு முன்னால அப்பிடி வந்தபோது கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு போனன். அங்கு நிறைய சோதினை செய்தவை. அப்ப என்ட நெஞ்சில ஷெல் பீஸ் ஒன்டு இருக்கிறதை கண்டு பிடிச்சினம். பிறகு கொழும்புக்கு கொண்டு போய் காட்டச் சொல்லிச்சினம். அங்க ஒரு பிறைவேட் கொஸ்பிட்டல்ல காட்டினன்.
அங்க பீஸ் சின்னதா இருக்கிறதாயும் ரத்தம் ஓடேக்க பீஸும் ஓடுறதால தான் நெஞ்சடைக்குதெண்டும் ஒப்பரேசன் செய்தா சரியாய் போகும் எண்டும் சொல்லிச்சினம். ஆனால் அதுக்கு ஐஞ்சு லட்சம் வேணுமாம். கொழும்பில இருக்கிற அரசாங்க ஆஸ்பத்திரில செய்யிற எண்டா இங்க கடையை பூட்டிப்போட்டுத்தான் போகனும். அப்பிடிச்செய்தா குடும்பச் செலவில இருந்து எல்லாமே இறுக்கமாய் போயிடும். பிள்ளையளையும் மனைவியையும் பாக்கவும் யாரும் இல்ல. உழைப்ப பாக்கிறதா? இல்ல வருத்தத்தை பாக்கிறதா? அதான் என்ன செய்யிறது எண்டு தெரியல. ஒரே யோசனையாய் கிடக்குது.
வில்வராஜா சித்திராதேவி
இது புதுக்குடியிருப்பு கிழக்கு. நான் இங்க வில்லவம் என்ற பெயரில தேநீர் கடையொன்றை நடத்தி வாறன். எனக்கு கிடைச்ச உதவியை வைச்சு இந்த கடைய தொடங்கினன். இதில தான் எனது குடும்ப வருமானம் முழுசாய் தங்கியிருக்குது.
1991இல என்ட மகன் ஜெயனந்தனுக்கு ஒருவயது. கிபிர் தாக்குதல்ல ஏற்பட்ட அதிர்ச்சியால பதிக்கப்பட்டார். அதோட வாய்பேசமலும் போய்டார். எங்கெங்கல்லாமோ அலைஞ்சு திருஞ்சம். எத்தனையோ பிரார்த்தனை செய்தம். கடைசியாய் டொக்டர் ஒருவர் ஒபரேஷன் ஒண்டு செய்யனும் என்டார். அதுக்கு பிறகு இருந்ததைவிட கொஞ்சம் குணமானார்.
எங்களின்ட ஒரு குழந்தைக்கு இப்பிடியாகிட்டுது என்ற கவலையோட நானும் கணவனும் இருந்தம். அப்பிடியே ஒரு பதினேழு வருசம் போனாப்பிறகு 2008இல் அப்ப என்ட கணவர் மேசன் வேலைக்குப் போய்க்கொண்டும் பலசரக்கு கடை நடத்திக்கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஷெல் வந்து வீழ்ந்ததில காணவரும் கடுமையாய் காயமடைந்தார். இப்ப அவராலயும் பெரிய வேலைகளைச் செய்யமுடியாதிருக்குது. இந்திய வீட்டுத்திட்டம் கிடைச்சிருக்கு. மெல்ல மெல்ல வீட்டைக் கட்ட தொடங்கப்போறம்.
ஆனா எங்கட மண் கிணத்தில இருந்து தண்ணியை எடுத்துத்தான் நாங்கள் இப்ப வீட்டில சாப்பாடுகளைச் செய்து வித்துக்கொண்டுவாரம். போனகிழமை உணவு சுகாதார பரிசோதகர்கள் இங்க வந்து மண்கிணத்தில இருக்கிற தண்ணியை பாவிச்சு சாப்பாடுகளைச் செய்யுறதை நிப்பாட்டச் சொல்லீட்டினம். எங்களுக்கு நல்ல தண்ணி வெளியில இருந்து கொண்டுவாரத்துக்கு யாருமில்லை. அந்தக்கிணறு 114அடி ஆழம் வேற அதைப் சீமந்தால பூசவும் பெரிய செலவு. இந்தப் பிரச்சினை எப்பிடித் தீரப்போகுதெண்டு தெரியல.
சிவஞானம் மயூரன்
எனக்கு இப்ப 24வயதாகுது. சொந்த இடம் விசுவமடு. இப்ப விசுவமடு டவுன்ல வெத்திலை, கோயில் சாமான்கள் விக்கிற கடையொன்றை நடத்திக்கொண்டு வாறன். நான், அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி என குடும்பத்தில ஐஞ்சுபேர். தம்பியும், தங்கச்சியும் விசுவமடு மகாவித்தியாலயத்தில படிச்சுக்கொண்டிருக்கினம்.
அப்பா மட்டும் தான் விவசாயம் செய்து எங்களை படிக்க வைச்சுக்கொண்டிருந்தார். அது போதல. நான் ஓயலோட என்ட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குச் சேரலாம் எண்டு நினைச்சன். மன்னாரில வேலையொண்டு இருக்கு என்ற செய்தி வர நான் அங்க சந்தோசமாய் போனேன். அன்றைக்கு திகதி 2008-.02.-28 எண்டு நினைக்கிறன். திடீரென ஷெல் வரத் தொடங்கீட்டு. எல்லாரையும் போல நானும் கிடைச்ச இடத்தில ஒழிஞ்சுகொண்டன். என்ன நடந்தது என்றே தெரியல . என்ட ஒரு கால இழக்க வேண்டியதாப் பேச்சு. நிறையவே அழுதன். கடைசில என்ட வாழ்கையே அங்க தொலைஞ்சு போச்சு. எல்லாமே முடிஞ்சுபோச்சு என்டு வீட்டுக்கு வந்தன்.
அப்பா விவசாயம் செய்வார் அம்மா தம்பி தங்கச்சி எல்லாரும் அவருக்கு உதவி செய்வினம். என்னால எதுவுமே செய்யமுடியலேயே எண்டு ஒவ்வொரு நாளும் எனக்குள்ளேயே கவலைப்பட்டு நொந்துகொள்ளுவன். பிறகு எனக்கு செயற்கைகால் கிடைச்சுது. ஊன்று கோலுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சன். இருந்தாலும் கடைசி யுத்தம் வந்தது. இடம்பெயர்ந்து போனம். நிறையவே நடக்க வேண்டியிருந்ததால எனக்கு சரியான கஷ்டமாய் இருந்தது. பிறகு முகாமில இருந்து இயக்கதில இருக்கவில்லை என்டாலும் புனர்வாழ்வுக்கும் போனேன். 2010இல வெளியில வந்து குடும்பத்துடன் சேர்ந்த போது சந்தோசமாய் இருந்தது. ஆனால் கடுமையான கஸ்டத்தால என்ன செய்யிறதென்று தெரியாம இருந்தது. ஒருவேளை மட்டுமே முழுமையாய் சப்பிட முடிஞ்சுது. வீட்டுக்கு பின்னுக்கு இருக்கிற ஒன்றரை ஏக்கரில செய்த விவசாயமும் தண்ணி இல்லாததால நிறுத்த வேண்டியதாய் போச்சு. அப்பதான் எனக்கு உதவி கிடைச்சுது. விசுவ மடுவில வெத்தில கடையொன்றை போட்டன். அதோட பத்தி, பட்டு என சில கோயில் சாமான்களையும் போட்டு விக்கிறன். வீட்டில இருந்து ஒவ்வொரு நாளும் இப்ப 2கிலோமீற்றருக்கு கிட்ட சைக்கிள்ள தான் வந்து போவன்.
எனக்கு வெத்திலையை இங்க கொண்டுவந்து தாரவரும் என்னை மாதிரி தான் காலை இழந்தவர். அவர் எனக்கு உதவியாயும் இருக்கிறார். இப்ப இதில வாற வருமானத்தை வைச்சுத் தான் குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கு. தம்பியும் தங்கச்சியும் நல்லா படிக்கினம். இப்ப என்னாலையும் முடியும் என்டு ஒரு நம்பிக்கை வந்திருக்கு.
றஞ்சன் சுமதி
புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு தான் என்ட சொந்த இடம். 2002இல் திருமணம் செய்தன். கணவர் பலசரக்கு கடை வைச்சு நடத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தார். சந்தோசமாய் இருந்தம்.
2009இல் கடைச்சி சண்டையில தொடங்கிச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு போனம். பிறகு முகாமில இருக்கும் போது என்னை விட்டு பிரிந்து போயிட்டார். கொஞ்சநாளாய் எந்த தொடர்பும் இல்ல. பிறகு தான் அவர் வேற திருமணம் செய்துகொண்டு போனது தெரிசிஞ்சுது. அதுக்கு பிறகு விவகாரத்தாயிட்டு.
இப்ப என்ட மகன் ரதுஷன் புதுக்குடியிப்பு மத்திய கல்லூரியில 6ஆம் ஆண்டு படிச்சுக்கொண்டிருக்கிறார். போன மாதம் என்ட அம்மா இறந்ததால இப்ப எனக்கிருக்கிற ஒரே சொந்தம் என்டா அது மகன் மட்டும் தான். எனக்கு கிடைச்ச உதவியல நான் இப்ப திருப்பவும் பலசரக்கு கடையை நடத்தி வாறன். ஒரு நாளைக்கு 600ரூபாக்கு கிட்ட வருமானம் கிடைக்குது. மாசம் மகன்ட பெயரிலையும் என்டபெயரிலையும் கொஞ்சம் கொஞ்சம் சேமித்துக்கொண்டு வாரன்.
2001இல இருந்து 1500ரூபா வாடகை கொடுத்து இந்த கடைய நடத்திவாறன். எதிர்காலத்தில வீட்டுக்கு கிட்டவே சொந்தக்காணியில கடையை நடத்த திட்டமிட்டிருக்கிறதோட மகனை நல்லா படிக்க வைக்கிறது தான் என்ட ஒரே லச்சியம்.
எஸ்.மௌன்ட் பற்றன்
என்ட சொந்த இடம் ஊர்காவற்துறை. பிரச்சினையலால இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தன். பிறகு கிட்டத்தட்ட மூண்டு வருசமாய் இயக்கத்தில இருந்தனான். அப்பா மெக்கானிக் என்றதால எனக்கு மெக்கானிக் வேலை தெரியும். மெக்கானிக் வேலை நல்லாத் தெரிஞ்சபடியாய் அப்பிடியான வேலைகள தான் எனக்கு இயக்கதில இருக்கேக்க தந்தவை.
பிறகு திருமணம் செய்தன். எனக்கு ஒரு பொம்பிளப்பிள்ளை பிறந்தது. அப்பிடியே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது. கடைசி சண்டை தொடங்கின நேரம் எல்லாரையும் போல நாங்களும் 209.-04.-08இல புதுமாத்தளன் பக்கம் போனம். அங்க என்ட மனைவி ஷெல் பட்டு இறந்திட்டா. அந்தக் கவலை ஒருபக்கம். என்ன செய்யிறது. என்ட பிள்ளையையாவது காப்பாத்தனுமே. எப்பிடியோ உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு ஒரு மாதிரி முகாமுக்கு வந்து சின்னப்பிள்ளையோட என்டபடியா 2009-10-14இல வெ ளிய
வந்திட்டன். வெளியில வந்து என்ன செய்யிறது என்டு தெரியல. நானும் மனைவியும் இருந்த மல்லாவி மூண்டாம் யுனிற்றுக்கு வந்தன். மெக்கானிக் கடையை சிறியதாய் ஆரம்பிச்சன். 2011இல கடைக்கு சாமான் எடுக்க கொழும்புக்கு போகேக்க நான் கைது செய்யப்பட்டன். பிறகு புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டு போய்யிட்டினம். அங்க தச்சு வேலையை பழகினன்.
2 1/2வருசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டன். வெளிய வந்து பிரதேச சபைக்குச் சொந்தமான இந்தக் கடையை 500ரூபா வாடகைப்படி எடுத்தன். கிடைச்ச நிதி உதவிய வைச்சுக்கொண்டு மலரவன் உதிரிப்பாக நிலையம் என்ற இந்தக் கடையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றன. மாதம் ஒரு 15ஆயிரத்துக்கு கிட்ட வருமானம் கிடைக்குது. சாதாரண வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்குது. சொந்தக்காணி இல்லாததால இந்திய வீட்டுத்திட்டமும் கிடைக்கல. எனக்கு இப்ப 33வயதாகுது. மகளுக்கு இப்ப 7வயதாகுது. நெடுங்கேணி மகாவித்தியாலத்தில படிக்கிறா. எதிர்காலத்தில நல்ல படிச்சு வரணும் என்றது தான் என்ட ஆசை.
சுபாசினி இரத்தினராஜ்
எனக்கு இப்ப வயசு 34ஆகுது. ஏண்ட சொந்த ஊர் இது தான் நெடுங்கேணி மாமடுச்சந்தி. இங்க வந்தததில சந்தோசம். மூண்டு பிள்ளையள் இருக்கினம் மூத்தவருக்கு 14வயது வாய் பேச மாட்டார் என்றதால வீல்ட்டில படிக்கிறார். இரண்டாவது மூண்டாவது பொம்பிளப் பிள்ளையள். ஒராள் 2ஆம் ஆண்டு படிக்கிறா. மற்றவா முன்பள்ளிக்கு போறா. ஆடு வளக்கிறது தான் என்ட தொழில்.
நான் திருமணம் செய்து குடும்பத்தோட சந்தோசமாய் தான் வாழ்ந்தனான். கடைசி யுத்தம் தொடங்கினோன முள்ளிவாய்க்காலுக்கால போய் வவுனியா முகாமுக்கு ஒரு மாதிரி பிள்ளையளோட போய் சேர்ந்தம். நான் அப்ப நான் கர்ப்பமாய் இருந்தன். அந்த நேரத்தில கணவர் திடீரென வேற திருமணம் செய்துகொண்டு போய்டார். ஏன் எண்டு காரணங் கூட சொல்ல. நானும் பிள்ளையளும் அநாதாய் இருந்தம். என்ட சதோரங்களும் அப்பா அம்மாவும் இருந்ததால கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
பிறகு முகாமிலிருந்து வௌியில வந்து எங்கட இடத்தை விடும்போது இஞ்ச வந்தன். அப்பா தான் எனக்கு காவலாய் என்னோட எந்த நேரமும் இருப்பார். ஒரு கொட்டிலை போட்டுட்டு கொஞ்சம் கடனைப் பட்டு போயிலைக் கன்றை போட்டன் அதில கொஞ்சம் இலாபம் வர அதை வைச்சு பிள்ளையள பாத்துக்கொண்டன். அப்பாவும் உதவிசெய்வார். அதுக்கு பிறகு எனக்கு கிடைச்ச பண உதவியை வைச்சு எட்டு ஆடுகளை வாங்கினான். பிறகு அதுகள் குட்டிபோட்டு கொண்டு போக ஒண்டொண்டாய் விக்க தொடங்கினான். கொஞ்சம் இலாபம் கிடைக்க தொடங்கவும் அதையே தொடர்ந்து செய்ய தொடங்கினன்.
இப்ப ஒரு 50 ஆடுகளுக்கு மேல இருக்குது. ஆட்டை இறைச்சிக்குத் தான் விக்கிறன். ஒருகிலோ 500 ரூபாய்க்கு கிட்ட போகும். மாசம் ரண்டு மூண்டு ஆடுகள் விலைபோகும். அதைவைச்சு பிள்ளையளிண்ட படிப்பையும் வீடு கட்டுறதையும் பாக்கிறன். ஏனக்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைச்சாலும் முழுசா வீட்டைக் கட்ட அந்தக்காசு பத்தல. அதால ஆட்டை வித்து வாற காசையும் அதுக்காக செலவு பண்ணுறன். அதோட போயிலையும் அடுத்த பருவத்தில போடுறதாய் இருக்கிறன்.
என்ட கணவர் போனது எனக்கு ஆரம்பத்தில கஷ்டமாய் இருந்தது. அப்பா எனக்கு பாதுகாப்பா இருக்கிறதால கொஞ்சம் மனசில தெம்பு. என்ட பிள்ளையளை நல்லா படிக்க வைக்கனும். மூத்த மகன் வாய்பேசமாட்டார் என்றதுதான் எனக்கு கவலை. எண்டாலும் கொஞ்சங் கொஞ்சமாய் எல்லாம் சரியா வந்து எங்களுக்கு எண்டு ஒரு விடிவு இருக்கும் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்குது.
இந்த அறுவரின் கதைகளும் ஆயிரமாயிரம் செய்திகளை சொல்கின்றன. இன்னும் இதைப்போன்றதும் இதனை விட மோசமானதுமான எத்தனையோ கதைகள் ஏதோவொரு காரணத்துக்காக வௌியில் கூறமுடியாது மனங்களுக்குள் புதைந்திருக்கின்றன. தவிரவும் இன்று இறுதிச் சமர் கண்ட கிளி, முல்லை நிலங்கள் அழகிய காபட் வீதிகளுடன் காணப்பட்டாலும் எத்தனையோ மக்கள் ஏதோவொரு வகையில் கிடைத்த நாலைந்து தகரங்களை பரப்பி மண்குந்து வைத்து தரப்பாலால் சுவரமைத்து பச்சை உடைகளின் நடமாட்டத்தின் மத்தியிலும் , முட்கம்பி வேலி எல்லைகளுக்கு அருகிலும் வாழ்ந்து வருகின்றமையும் கமரா கண்ணுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் கண்கள் படம்பிடித்திருந்தன. ஒலிப்பதிவுப் கருவிக்கு விலங்கிடப்பட்ட நிலையில் இன்றைக்கோ நாளைக்கோ எங்கட சொந்த காணிக்கு போயிடுவம் என்றும் எங்களுக்கும் இந்தியன் வீட்டுத்திட்டம் ஓகே ஆயிடும் எண்டு விதானையர் சொன்னவர் என்றும் கூறுவதை காதுகள் நன்கே பதிவு செய்து கொண்டன.
குறித்த ஒரு தொண்டர் அமைப்பால் பேரவலத்திற்கு முகங்கொடுத்த அத்தனை மக்களின் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்து விடமுடியாது என்பது யதார்த்தம். அதேநேரம் தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனச் செயற்படுகள் முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது யாருடைய கடமையாகவிருக்கின்றது. மத்தியில் ஆட்சியல் அமர்ந்து கொண்டிருந்து தலைநகரிலும் தன்நகரிலும் ஜனநாயகம் பேசுவதால் எந்தப்பயனும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதை உணரவேண்டியது யார்? அதனை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? அதற்கான காலம் என்று ஏற்படப்போகின்றது?
ஒரு காலத்தில் குடும்பத்தோடு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து உலக தண்ணீர் தொட்டியில் சிறு உருண்டையாக விருக்கும் தாயகத்திற்கே சோறு போட்டும், பரம்பரை தொழில் செய்தும் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த ஒரு சமூகத்தை கொடிய போரின் விளைவு எந்தளவுக்கு புரட்டிப் போடுகின்றது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லா உதாரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பு மக்களே காணப்படுகின்றார்கள்.
நாம் தற்போது ஏழைகள் . கண்ணீர் விடுகின்றோம். நாம் ஏழைகள் ஆக்கப்பட்டோமே தவிர நிரந்தர ஏழைகள் அல்ல. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற சன்றோரின் பழமொழி போல் என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும். கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்ற நிலைமாறி ரணங்களுடன் நாமும் தலைநிமிர்வோம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை.
–ஆர்.ராம்–
(முற்றும்)













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக