ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சுமார் 25 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்த நபர் வீடு திரும்­பினார்

உடுவில், குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நிலையில் சுமார் 25 வரு­டங்­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்த நபர் ஒருவர் நேற்று முன்­தினம் மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார்.



தொழில் நிமித்தம் இவர் கொழும்பு சென்ற நிலையில் இடம்பெற்ற குண்டு-வெடிப்பை அடுத்து காணாமல் போயி-ருந்தார். இவரைத் தேடிய பெற்றோர் முதுமையடைந்த நிலையில் மரண-மடைந்துள்ளனர். இந்நிலையில் அம்-பாந்தோட்டை புனர்வாழ்வு நிலை-யத்தில் இவர் இரு-க்கிறார் எனக் கூறி அவரை அழைத்துச் செல்லுமாறு கடிதம் ஒன்று இவருடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் குறித்த நபர் உறவினர்களால் சொந்த ஊருக்கு அழைத்து-வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல