எம்மைச் சுற்றி எத்தனையோ மின்காந்த அலைகள் விரைந்து செல்கின்றன. வானொலி, தொலைக்காட்சிக்கான தகவல்களைக் கொண்டுவரும் வானொலி அலைகள், தகவல் பரிமாற்றங்களைக் காவிச்செல்பவை எனப் பல அலை நீளங்களைக் கொண்ட மின்காந்த அலைகள் அங்குமிங்கும் பயணித்துச் செல்கின்றன. இயற்கையான மின்காந்த அலைகள் சூரியனிலிருந்தும் வருகின்றன. அவற்றில் அபாயகரமான சக்தியைக் கொண்ட கதிர்ப்புக்கள், அதாவது புறவூதாக் கதிர்கள் ஓசோன் படையினால் உறிஞ்சப்பட, ஏனையவை புவியை வந்தடைகின்றன.
இவ்வாறான மின்காந்த அலைகளில் 400 நனோமீற்றர் தொடக்கம் 720 நனோமீற்றர் வரையிலான அலைநீளங்களைக் கொண்ட மின்காந்த அலைகளை மாத்திரமே கண்களால் பார்க்கமுடிகிறது. இந்த வீச்சிற்கு குறைவான அலைநீளமுள்ள மின்காந்தக் கதிர்ப்புக்கள் அல்லது அதிகரித்த நீளமுள்ள மின்காந்த அலைகள் எமது சூழலில் இருந்தாலும் அவற்றைக் காண எம் கண்களால் இயலுவதில்லை. பார்வைப்புல வீச்சின் கீழ் எல்லைக்கு அப்பால் அண்மித்தாகவுள்ள உள்ள அகச்சிவப்புக் கதிர்கள் மற்றும் மறுஎல்லைக்கு வெளியே அருகில் காணப்படும் புறஊதாக் கதிர்களும் எமது கண்ணை வந்தடைந்தாலும் அவை புலனாவதில்லை. எனினும், இக்கதிர்கள் குறித்து அறிவியலாளர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். குறிப்பாக மனிதனின் உடல் அகச்சிவப்புக் கதிர்களைக் கதிர்க்கும் இயல்பினது என்பதால், குற்றப்புலனாய்வு தொடர்பான ஆய்வுகளில் அகச்சிவப்புக் கதிர் குறித்து அதிகரித்த கவனம் செலுத்தப்படுகிறது.
அகச்சிவப்புக் கதிர் அலைநீளம் கொண்ட ‘லேசர்’ கதிருடன் தொடர்புபட்ட பரிசோதனை மேற்கொண்டிருந்த அறிவியலாளர் குழுவொன்று தம் கண்களுக்கு இடையிடையே பச்சைநிற பளிச்சிடுகைகள் தென்படுவதை அவதானித்தனர். இந்த அவதானிப்பினை தமது ஆய்வுக்கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தனர். இவ்வித்தியாசமான குறிப்பினை அவதானித்த அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவினது ஆய்வுக்குழு அதற்கான காரணங்களை ஆழமாக ஆராயத் தீர்மானித்தது. அவர்களின் ஆய்வின் மூலம் கண்கள் சில குறிப்பிட்ட நிலைமைகளில் அகச்சிவப்புக் கதிர்ப்புக்களையும் காண்பதற்கான சந்தர்ப்பம் உண்டு என்பதைக் கண்டறிந்துள்ளனர். தமது ஆய்வின் பெறுபேறுகளை கடந்த 1ஆந் திகதி வெளியான Proceedings of the National Academy of Sciences இணைய ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.
பார்வைப் புல வீச்சிலான கதிர்கள் கண்வில்லைகளால் விழித்திரையில் குவிக்கப்படுகையில், அக்கதிரில் அடங்கியுள்ள ஒளிப்போட்டோன் வடிவிலான சக்தியை விழித்திரை பெற்று photopigment என்ற மூலக்கூறினை ஆக்குகின்றது. ஒளிக்குரிய காட்சியைப் பார்வைப்புலனாக்கும் பணி, அதாவது பெறப்பட்ட ஒளியிலிருந்து பார்வையாக உணருவதற்கான செயற்பாடுகள் இவ்வாறு உருவாக்கப்பட்ட மூலக்கூறினால் முன்னெடுக்கப்படுகின்றது. அச்செயற்பாடுகள் இறுதியில் பார்வைப்புலன் ஏற்பட வழிவகுக்கிறது.
ஆய்வினை மேற்கொண்ட வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகள் மற்றும் மனிதரிலிருந்து பெறப்பட்ட விழித்திரைகளில் அகச்சிவப்புக்கதிர்களைச் செலுத்திப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்பரிசோதனைகளின்போது அகச்சிவப்புக்கதிர் விழித்திரையின் ஒரிடத்தில் அடுத்தடுத்து வந்தடைகையில், அது photopigment மூலக்கூறு ஒன்றினை உருவாக்குவதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், “எடுத்துக்காட்டாக, பார்வைப்புல வீச்சிற்கு இடைப்பட்ட 500 நனோமீற்றர் நீளமான மின்காந்த அலையொன்று கண்ணின் விழித்திரையை வந்தடைகையில் மேற்குறிப்பிட்ட மூலக்கூறு பிறப்பிக்கப்படுகிறது.
அதே புள்ளியில் அகச்சிவப்புக் கதிர் வீச்சிலுள்ள 1000 நனோமீற்றர் அலைநீளமுள்ள கதிர்வீச்சு அடுத்தடுத்து விழித்திரையின் ஒரு புள்ளியில் தாக்குமிடத்து அந்நிலைமையும் விழித்திரையில் photopigment மூலக்கூறினை உருவாக்கும்” என விபரித்துள்ளனர்.
இந்த ஆய்வில் அமெரிக்க ஆய்வாளர்கள் மட்டுமல்லாது போலந்து, சுவிற்ஸர்லாந்து, மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் அறிவியலாளர்களும் இணைந்து பணி யாற்றினர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் பார்வைப்புலனிற்கான மின்காந்த அலைவீச்சினை அகச்சிவப்புக்கதிர் வரை விரிவாக்குவதற்கு உதவக்கூடும்.
சில்லையூர் றெ.அலெக்ஸ்,
யாழ்ப்பாணம்.
இவ்வாறான மின்காந்த அலைகளில் 400 நனோமீற்றர் தொடக்கம் 720 நனோமீற்றர் வரையிலான அலைநீளங்களைக் கொண்ட மின்காந்த அலைகளை மாத்திரமே கண்களால் பார்க்கமுடிகிறது. இந்த வீச்சிற்கு குறைவான அலைநீளமுள்ள மின்காந்தக் கதிர்ப்புக்கள் அல்லது அதிகரித்த நீளமுள்ள மின்காந்த அலைகள் எமது சூழலில் இருந்தாலும் அவற்றைக் காண எம் கண்களால் இயலுவதில்லை. பார்வைப்புல வீச்சின் கீழ் எல்லைக்கு அப்பால் அண்மித்தாகவுள்ள உள்ள அகச்சிவப்புக் கதிர்கள் மற்றும் மறுஎல்லைக்கு வெளியே அருகில் காணப்படும் புறஊதாக் கதிர்களும் எமது கண்ணை வந்தடைந்தாலும் அவை புலனாவதில்லை. எனினும், இக்கதிர்கள் குறித்து அறிவியலாளர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். குறிப்பாக மனிதனின் உடல் அகச்சிவப்புக் கதிர்களைக் கதிர்க்கும் இயல்பினது என்பதால், குற்றப்புலனாய்வு தொடர்பான ஆய்வுகளில் அகச்சிவப்புக் கதிர் குறித்து அதிகரித்த கவனம் செலுத்தப்படுகிறது.
அகச்சிவப்புக் கதிர் அலைநீளம் கொண்ட ‘லேசர்’ கதிருடன் தொடர்புபட்ட பரிசோதனை மேற்கொண்டிருந்த அறிவியலாளர் குழுவொன்று தம் கண்களுக்கு இடையிடையே பச்சைநிற பளிச்சிடுகைகள் தென்படுவதை அவதானித்தனர். இந்த அவதானிப்பினை தமது ஆய்வுக்கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தனர். இவ்வித்தியாசமான குறிப்பினை அவதானித்த அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவினது ஆய்வுக்குழு அதற்கான காரணங்களை ஆழமாக ஆராயத் தீர்மானித்தது. அவர்களின் ஆய்வின் மூலம் கண்கள் சில குறிப்பிட்ட நிலைமைகளில் அகச்சிவப்புக் கதிர்ப்புக்களையும் காண்பதற்கான சந்தர்ப்பம் உண்டு என்பதைக் கண்டறிந்துள்ளனர். தமது ஆய்வின் பெறுபேறுகளை கடந்த 1ஆந் திகதி வெளியான Proceedings of the National Academy of Sciences இணைய ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.
பார்வைப் புல வீச்சிலான கதிர்கள் கண்வில்லைகளால் விழித்திரையில் குவிக்கப்படுகையில், அக்கதிரில் அடங்கியுள்ள ஒளிப்போட்டோன் வடிவிலான சக்தியை விழித்திரை பெற்று photopigment என்ற மூலக்கூறினை ஆக்குகின்றது. ஒளிக்குரிய காட்சியைப் பார்வைப்புலனாக்கும் பணி, அதாவது பெறப்பட்ட ஒளியிலிருந்து பார்வையாக உணருவதற்கான செயற்பாடுகள் இவ்வாறு உருவாக்கப்பட்ட மூலக்கூறினால் முன்னெடுக்கப்படுகின்றது. அச்செயற்பாடுகள் இறுதியில் பார்வைப்புலன் ஏற்பட வழிவகுக்கிறது.
ஆய்வினை மேற்கொண்ட வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகள் மற்றும் மனிதரிலிருந்து பெறப்பட்ட விழித்திரைகளில் அகச்சிவப்புக்கதிர்களைச் செலுத்திப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்பரிசோதனைகளின்போது அகச்சிவப்புக்கதிர் விழித்திரையின் ஒரிடத்தில் அடுத்தடுத்து வந்தடைகையில், அது photopigment மூலக்கூறு ஒன்றினை உருவாக்குவதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், “எடுத்துக்காட்டாக, பார்வைப்புல வீச்சிற்கு இடைப்பட்ட 500 நனோமீற்றர் நீளமான மின்காந்த அலையொன்று கண்ணின் விழித்திரையை வந்தடைகையில் மேற்குறிப்பிட்ட மூலக்கூறு பிறப்பிக்கப்படுகிறது.
அதே புள்ளியில் அகச்சிவப்புக் கதிர் வீச்சிலுள்ள 1000 நனோமீற்றர் அலைநீளமுள்ள கதிர்வீச்சு அடுத்தடுத்து விழித்திரையின் ஒரு புள்ளியில் தாக்குமிடத்து அந்நிலைமையும் விழித்திரையில் photopigment மூலக்கூறினை உருவாக்கும்” என விபரித்துள்ளனர்.
இந்த ஆய்வில் அமெரிக்க ஆய்வாளர்கள் மட்டுமல்லாது போலந்து, சுவிற்ஸர்லாந்து, மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் அறிவியலாளர்களும் இணைந்து பணி யாற்றினர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் பார்வைப்புலனிற்கான மின்காந்த அலைவீச்சினை அகச்சிவப்புக்கதிர் வரை விரிவாக்குவதற்கு உதவக்கூடும்.
சில்லையூர் றெ.அலெக்ஸ்,
யாழ்ப்பாணம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக