பிச்சை என்பது உழைக்க உடல் வலிமை இல்லாதவர்கள், இரண்டு கண்களும் தெரியாதவர்கள், வாய்பேச முடியாதவர்கள், உடல் வலிமையற்ற விதவைகள், அநாதைகள், வயோதிபர்கள், கை கால் அற்றவர்கள், கடும் நோய்வாய்ப்பட்டவர்கள், தங்களால் உழைத்து உண்பதற்கு முடியாமை காரணமாக தம் பசியைப் போக்குவதற்கு வசதிபடைத்தவர்களிடம் பொருளோ, பணமோ இரந்து கேட்பது என்று பொருள்படும்.
பிச்சைக்காரர்களுக்கும் பசியைப் போக்க உணவு வேண்டும். மானத்தைக் காக்க உடைவேண்டும். நோய் ஏற்படும் காலங்களில் மருந்துகள் வாங்குவதற்குப் பணம் வேண்டும். இவைகளை அவர்களுக்கு யார் வழங்குவார்கள்? வசதிபடைத்த நாங்கள்தான் கொடுக்க வேண்டும். அவர்களைப் பட்டினியாலும், நோய்களாலும் இறக்கவிடக்கூடாது. எங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.
உண்மையான பிச்சைக்காரர்களை நாம் தரக் குறைவாக ஒருபோதும் கருதக்கூடாது. அவர்கள் களவெடுத்து, பொய் பிரட்டுகள் செய்யாமல் தங்களுடைய பசியைப் போக்குவதற்கு வசதிபடைத்தவர்களிடம் இரந்து கேட்கிறார்கள். ஆகவே அவர்களை நாம் மெச்சவேண்டும். எம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். பிச்சை எடுப்பது ஒரு இழிவான தொழில் அல்ல. அவர்கள் தங்களால் தொழில்கள் செய்து உழைக்க முடியாத கால கட்டத்தில் பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாதது.
பிச்சை எடுப்பது மானக்கேடல்ல. அதைக் கொச்சைப் படுத்துவதுதான் கூடாத செயல். தற்காலத்தில் உடல் வலிமை படைத்தவர்கள் ஒரு தொழில் செய்து சம்பாதிக்கக்கூடியவர்கள் கூட பிச்சை எடுக்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதித்துக்கொள்வதற்கு சுலபமான வழிகளில் இதுவும் ஒன்றாகக் கருதுவதே. இதனால் உண்மையான பிச்சைக்காரர்களுக்கு வருவாய் குறைவாகவே கிடைக்கிறது.. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது.
ஒரு சில பிச்சைக்காரர்கள் மக்களை ஏமாற்றிப் பிச்சை கேட்கிறார்கள். பகல்வேளையில் காலை மடக்கி இருந்துகொண்டு நொண்டிபோலவும் வாயைத் திறவாமல் ஊமைபோலவும் நடித்து பிச்சைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாலையில் தவறணைகளுக்கும், சினிமா அரங்குகளுக்கும், போதைப்பொருள் விற்கும் இடங்களுக்கும் ஓடோடிச் செல்கிறார்கள். ஊமைபோல நடித்தவர்கள் மாலையில் போதையில் மயங்கி மக்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களால் மக்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
ஆகவே நாம் உண்மையான பிச்சைக்காரர்களை முதலில் இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு முன்வரவேண்டும். அவர்களுக்கு எம்மால் இயன்ற சரீர உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். சிலர் தேநீர் உணவு போன்றவைகளை வாங்குவதற்கு நடந்து செல்ல முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு நாம் தயங்கக்கூடாது.
பிச்சை எடுப்பவர்கள் தாங்களாகவே உணர்ந்து சன நடமாட்டம் உள்ள இடங்களில் வீதி ஓரமாக அமர்ந்து பிச்சை கேட்பார்களேயானால், வருவோர், போவோர் மனமிரங்கித் தம் வசதிக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பிச்சை வழங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்கள் தினமும் ஒரு பொது இடத்தில் இருந்தால் மக்கள் அதை அறிந்து வீட்டில் எஞ்சிப்போன உணவுப் பண்டங்களை அவர்களுக்குக் கொண்டு வந்து கொடுக்க அவர்களின் பசியும் அடங்கும், அவற்றை வழங்குபவர்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும்.
'அறம் செய்ய விரும்பு', 'ஐயமிட்டுண்' என்பன ஔவைப்பாட்டியின் அருள்மொழிகள்.
திருவள்ளுவர் கூட 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து', 'அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி' என்று ஈகையின் சிறப்பைப் பற்றியும்,
'சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்கு ஆக்னம் எவனோ உயிர்க்கு' , 'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல' என்று அறத்தின் சிறப்பைப் பற்றியும் தனது குறள் வெண்பாக்களினால் எடுத்துக் கூறியுள்ளார்.
சிவன்கூட தாருகாவனத்தில் ரிஷபத்தினிகளிடம் பிச்சை எடுத்துள்ளார். சைவர்கள் அவரைக் கண்கண்ட தெய்வமென வணங்குகிறார்கள். முன்பு அரசகுமாரனாக இருந்து துறவியாக மாறிய புத்தர் பெருமானும் முன்பு பெரும் செல்வந்தராக இருந்து துறவியாக மாறிய பட்டினத்தடிகளும், அரசனாக இருந்து துறவியாக மாறிய பத்திர கிரி அடிகளும் பிச்சை எடுத்துத்தான் தம் பிற்காலத்தைக் கழித்து ஈற்றில் தெய்வநிலையை அடைந்தார்கள்.
மக்களிற் சிலர் எஞ்சிப்போன உணவு களை குப்பைத் தொட்டிகளில் வீசுகிறார்கள். இது எவ்வளவு பரிதாபத்திற் குரிய செயல் என்று அவர்கள் கருதுவதில்லை. ஒரு விவசாயியானவன் மழை, வெயில் என்று பாராது மாதக்கணக்கில் எவ்வளவோ கஷ்டப்பட்டு விவசாயம் செய்து எங்களுக்கு உணவு வழங்குகிறான். அதில் ஒரு பகுதியை ஒரு நொடிப்பொழுதில் நாம் வீணடிக்கிறோம். உலகில் எத்தனையோ உயிர்கள் உணவின்றித் தவிக்கும் வேளையில் நாம் அதைக் குப்பைத் தொட்டியில் போடலாமா? உணவு பழுதடைவதற்கு முன் யாருக்காவது வழங்கலாமல்லவா?
குப்பை வண்டிகளில் காற்பங்கு, வீசப்பட்ட உணவாகத்தான் இருப்பதை நாம் நகர்ப்புறங்களில் தினமும் கண்கூடாகக் காண்கிறோம். அண்மையில் புதினப் பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:
வெளிநாடொன்றில் இரு வயோதிபப் பெண்கள் ஒரு உணவுச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு எதிரிலிருந்த மேசையில் அமர்ந்திருந்த சில வாலிபர்கள் உணவு வழங்குபவரிடம் 'அந்த உணவு கொண்டுவா', 'இந்த உணவு கொண்டுவா' என்று பலவகையான உணவு வகைகளைக் கட்டளையிட்டுப் பெற்று அவற்றில் சிறிதளவு உண்டுவிட்டு சாப்பிட்ட மீதியைத் திருப்பி எடுத்துச் செல்லுமாறு பணித்தார்களாம். அப்பொழுது அந்த வயோதிபப் பெண்மணிகள் கோபம் கொண்டு 'ஏன் இவ்வளவு உணவுகளையும் அநியாயமாகக் கொட்டுகிறீர்கள்? ஒன்றில் சாப்பிடக்கூடிய அளவாக எடுத்திருக்க வேண்டும். அல்லது எடுத்தவற்றைச் சாப்பிட்டிருக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்கள். அதற்கு அவ்வாலிபர்கள் 'எங்கள் பணத்தைக் கொடுத்துத்தான் இவைகளை வாங்கினோம். எங்கள் விருப்பப்படி எதுவும் செய்வோம். நாங்கள் செய்வதை எவரும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்கள்.
உடனே அப்பெண்மணிகளில் ஒருவர் தொலைபேசியில் யாருடனோ கதைத்தார்களாம். உடனே உணவுக் கட்டுப்பாட்டுக் காரியாலயத்தில் இருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் வந்தார்களாம். அவ்வாலிபர்களிடம் குற்றப்பணம் அறவிட்டுக்கொண்டு சென்றார்களாம். அது ஒரு செல்வந்த நாடு. அங்கே கூட உணவைக் கண்டபடி வீசுவது குற்றம் என்றிருக்க எங்கள் நாட்டில் உணவுகளைக் கண்ட படி வீணடிக்கலாமா?
இந்நாட்டிலும் பிரபல உணவுச் சாலைகளில் கட்டளையிட்டுப் பெற்ற உணவுகளில் ஒரு சிலவற்றைச் சாப்பிட்டுவிட்டு மீதியாக வைப்பதை ஒரு பாணியாகக் கருதி உணவை வீணடிக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எவ்வளவு உணவுப் பஞ்சம்! சாப்பிட உணவு வசதியின்றி நோய் நொடியோடு எலும்பும் தோலுமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக அறிகிறோமல்லவா! இவைகளை அறிந்துகொண்டும் நாம் உணவுப் பொருட்களை வீணடிக்கலாமா? அவைகளை எச்சிப்படுத்த முன் யாருக்காவது ஏழை எளியவர்களுக்கு வழங்கினால் கோடிபுண்ணியம் நம்மைச் சாருமல்லவா?
அன்னை திரேசா அம்மையார் கொண்டாட்ட வைபவங்களுக்குச் சென்று அங்கு மீதியாக இருக்கும் உணவுகளைப் பெற்று வந்து அநாதைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பாராம். அவ்வம்மையார் மறைந்தும் முழு உலகமுமே தலைவணங்கி நிற்கிறது. அவ்வம்மையார் போன்று இன்னும் பலர் இவ்வுலகத்தில் தோன்றவேண்டும்.
தானங்களிலெல்லாம் சிறந்தது அன்னதானம் என்று நாங்கள் நூல்கள் மூலம் கற்றுள்ளோம். அன்னதானம் என்பது பொதுவாக நாங்கள் அரிசியால் சமைத்த சோறும், கறிவகைகளும் தான் என்று கருதுகிறோம். அதை 'உணவை இலவசமாக வழங்குதல்' என்றும் கருத்திற் கொள்ளலாம்.
ஆகவே, நாம் என்ன உணவானாலும் அதைப் பிற உயிர்களுக்கு வழங்கி அவர்களின் வயிற்றுப்பசியை நீக்க முயல்வோமானால் அது எவ்வளவு புண்ணியமான செயல். அவர்களுக்கு மனப்பூரிப்பும் எங்களுக்கு மனத்திருப்தியும் ஏற்படும். இறையருள் கிடைத்து எமற்கேற்படவுள்ள ஆபத்துக்கள் தானாகவே விலகும்.
அம்பலவாணர் இராஜரட்ணம்
சைவ சித்தாந்த பண்டிதர்
பிச்சைக்காரர்களுக்கும் பசியைப் போக்க உணவு வேண்டும். மானத்தைக் காக்க உடைவேண்டும். நோய் ஏற்படும் காலங்களில் மருந்துகள் வாங்குவதற்குப் பணம் வேண்டும். இவைகளை அவர்களுக்கு யார் வழங்குவார்கள்? வசதிபடைத்த நாங்கள்தான் கொடுக்க வேண்டும். அவர்களைப் பட்டினியாலும், நோய்களாலும் இறக்கவிடக்கூடாது. எங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.
உண்மையான பிச்சைக்காரர்களை நாம் தரக் குறைவாக ஒருபோதும் கருதக்கூடாது. அவர்கள் களவெடுத்து, பொய் பிரட்டுகள் செய்யாமல் தங்களுடைய பசியைப் போக்குவதற்கு வசதிபடைத்தவர்களிடம் இரந்து கேட்கிறார்கள். ஆகவே அவர்களை நாம் மெச்சவேண்டும். எம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். பிச்சை எடுப்பது ஒரு இழிவான தொழில் அல்ல. அவர்கள் தங்களால் தொழில்கள் செய்து உழைக்க முடியாத கால கட்டத்தில் பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாதது.
பிச்சை எடுப்பது மானக்கேடல்ல. அதைக் கொச்சைப் படுத்துவதுதான் கூடாத செயல். தற்காலத்தில் உடல் வலிமை படைத்தவர்கள் ஒரு தொழில் செய்து சம்பாதிக்கக்கூடியவர்கள் கூட பிச்சை எடுக்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதித்துக்கொள்வதற்கு சுலபமான வழிகளில் இதுவும் ஒன்றாகக் கருதுவதே. இதனால் உண்மையான பிச்சைக்காரர்களுக்கு வருவாய் குறைவாகவே கிடைக்கிறது.. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது.
ஒரு சில பிச்சைக்காரர்கள் மக்களை ஏமாற்றிப் பிச்சை கேட்கிறார்கள். பகல்வேளையில் காலை மடக்கி இருந்துகொண்டு நொண்டிபோலவும் வாயைத் திறவாமல் ஊமைபோலவும் நடித்து பிச்சைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாலையில் தவறணைகளுக்கும், சினிமா அரங்குகளுக்கும், போதைப்பொருள் விற்கும் இடங்களுக்கும் ஓடோடிச் செல்கிறார்கள். ஊமைபோல நடித்தவர்கள் மாலையில் போதையில் மயங்கி மக்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களால் மக்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
ஆகவே நாம் உண்மையான பிச்சைக்காரர்களை முதலில் இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு முன்வரவேண்டும். அவர்களுக்கு எம்மால் இயன்ற சரீர உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். சிலர் தேநீர் உணவு போன்றவைகளை வாங்குவதற்கு நடந்து செல்ல முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு நாம் தயங்கக்கூடாது.
பிச்சை எடுப்பவர்கள் தாங்களாகவே உணர்ந்து சன நடமாட்டம் உள்ள இடங்களில் வீதி ஓரமாக அமர்ந்து பிச்சை கேட்பார்களேயானால், வருவோர், போவோர் மனமிரங்கித் தம் வசதிக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பிச்சை வழங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்கள் தினமும் ஒரு பொது இடத்தில் இருந்தால் மக்கள் அதை அறிந்து வீட்டில் எஞ்சிப்போன உணவுப் பண்டங்களை அவர்களுக்குக் கொண்டு வந்து கொடுக்க அவர்களின் பசியும் அடங்கும், அவற்றை வழங்குபவர்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும்.
'அறம் செய்ய விரும்பு', 'ஐயமிட்டுண்' என்பன ஔவைப்பாட்டியின் அருள்மொழிகள்.
திருவள்ளுவர் கூட 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து', 'அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி' என்று ஈகையின் சிறப்பைப் பற்றியும்,
'சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்கு ஆக்னம் எவனோ உயிர்க்கு' , 'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல' என்று அறத்தின் சிறப்பைப் பற்றியும் தனது குறள் வெண்பாக்களினால் எடுத்துக் கூறியுள்ளார்.
சிவன்கூட தாருகாவனத்தில் ரிஷபத்தினிகளிடம் பிச்சை எடுத்துள்ளார். சைவர்கள் அவரைக் கண்கண்ட தெய்வமென வணங்குகிறார்கள். முன்பு அரசகுமாரனாக இருந்து துறவியாக மாறிய புத்தர் பெருமானும் முன்பு பெரும் செல்வந்தராக இருந்து துறவியாக மாறிய பட்டினத்தடிகளும், அரசனாக இருந்து துறவியாக மாறிய பத்திர கிரி அடிகளும் பிச்சை எடுத்துத்தான் தம் பிற்காலத்தைக் கழித்து ஈற்றில் தெய்வநிலையை அடைந்தார்கள்.
மக்களிற் சிலர் எஞ்சிப்போன உணவு களை குப்பைத் தொட்டிகளில் வீசுகிறார்கள். இது எவ்வளவு பரிதாபத்திற் குரிய செயல் என்று அவர்கள் கருதுவதில்லை. ஒரு விவசாயியானவன் மழை, வெயில் என்று பாராது மாதக்கணக்கில் எவ்வளவோ கஷ்டப்பட்டு விவசாயம் செய்து எங்களுக்கு உணவு வழங்குகிறான். அதில் ஒரு பகுதியை ஒரு நொடிப்பொழுதில் நாம் வீணடிக்கிறோம். உலகில் எத்தனையோ உயிர்கள் உணவின்றித் தவிக்கும் வேளையில் நாம் அதைக் குப்பைத் தொட்டியில் போடலாமா? உணவு பழுதடைவதற்கு முன் யாருக்காவது வழங்கலாமல்லவா?
குப்பை வண்டிகளில் காற்பங்கு, வீசப்பட்ட உணவாகத்தான் இருப்பதை நாம் நகர்ப்புறங்களில் தினமும் கண்கூடாகக் காண்கிறோம். அண்மையில் புதினப் பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:
வெளிநாடொன்றில் இரு வயோதிபப் பெண்கள் ஒரு உணவுச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு எதிரிலிருந்த மேசையில் அமர்ந்திருந்த சில வாலிபர்கள் உணவு வழங்குபவரிடம் 'அந்த உணவு கொண்டுவா', 'இந்த உணவு கொண்டுவா' என்று பலவகையான உணவு வகைகளைக் கட்டளையிட்டுப் பெற்று அவற்றில் சிறிதளவு உண்டுவிட்டு சாப்பிட்ட மீதியைத் திருப்பி எடுத்துச் செல்லுமாறு பணித்தார்களாம். அப்பொழுது அந்த வயோதிபப் பெண்மணிகள் கோபம் கொண்டு 'ஏன் இவ்வளவு உணவுகளையும் அநியாயமாகக் கொட்டுகிறீர்கள்? ஒன்றில் சாப்பிடக்கூடிய அளவாக எடுத்திருக்க வேண்டும். அல்லது எடுத்தவற்றைச் சாப்பிட்டிருக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்கள். அதற்கு அவ்வாலிபர்கள் 'எங்கள் பணத்தைக் கொடுத்துத்தான் இவைகளை வாங்கினோம். எங்கள் விருப்பப்படி எதுவும் செய்வோம். நாங்கள் செய்வதை எவரும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்கள்.
உடனே அப்பெண்மணிகளில் ஒருவர் தொலைபேசியில் யாருடனோ கதைத்தார்களாம். உடனே உணவுக் கட்டுப்பாட்டுக் காரியாலயத்தில் இருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் வந்தார்களாம். அவ்வாலிபர்களிடம் குற்றப்பணம் அறவிட்டுக்கொண்டு சென்றார்களாம். அது ஒரு செல்வந்த நாடு. அங்கே கூட உணவைக் கண்டபடி வீசுவது குற்றம் என்றிருக்க எங்கள் நாட்டில் உணவுகளைக் கண்ட படி வீணடிக்கலாமா?
இந்நாட்டிலும் பிரபல உணவுச் சாலைகளில் கட்டளையிட்டுப் பெற்ற உணவுகளில் ஒரு சிலவற்றைச் சாப்பிட்டுவிட்டு மீதியாக வைப்பதை ஒரு பாணியாகக் கருதி உணவை வீணடிக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எவ்வளவு உணவுப் பஞ்சம்! சாப்பிட உணவு வசதியின்றி நோய் நொடியோடு எலும்பும் தோலுமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக அறிகிறோமல்லவா! இவைகளை அறிந்துகொண்டும் நாம் உணவுப் பொருட்களை வீணடிக்கலாமா? அவைகளை எச்சிப்படுத்த முன் யாருக்காவது ஏழை எளியவர்களுக்கு வழங்கினால் கோடிபுண்ணியம் நம்மைச் சாருமல்லவா?
அன்னை திரேசா அம்மையார் கொண்டாட்ட வைபவங்களுக்குச் சென்று அங்கு மீதியாக இருக்கும் உணவுகளைப் பெற்று வந்து அநாதைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பாராம். அவ்வம்மையார் மறைந்தும் முழு உலகமுமே தலைவணங்கி நிற்கிறது. அவ்வம்மையார் போன்று இன்னும் பலர் இவ்வுலகத்தில் தோன்றவேண்டும்.
தானங்களிலெல்லாம் சிறந்தது அன்னதானம் என்று நாங்கள் நூல்கள் மூலம் கற்றுள்ளோம். அன்னதானம் என்பது பொதுவாக நாங்கள் அரிசியால் சமைத்த சோறும், கறிவகைகளும் தான் என்று கருதுகிறோம். அதை 'உணவை இலவசமாக வழங்குதல்' என்றும் கருத்திற் கொள்ளலாம்.
ஆகவே, நாம் என்ன உணவானாலும் அதைப் பிற உயிர்களுக்கு வழங்கி அவர்களின் வயிற்றுப்பசியை நீக்க முயல்வோமானால் அது எவ்வளவு புண்ணியமான செயல். அவர்களுக்கு மனப்பூரிப்பும் எங்களுக்கு மனத்திருப்தியும் ஏற்படும். இறையருள் கிடைத்து எமற்கேற்படவுள்ள ஆபத்துக்கள் தானாகவே விலகும்.
அம்பலவாணர் இராஜரட்ணம்
சைவ சித்தாந்த பண்டிதர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக