இந்தியாவில் 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரின் ‘இரும்புப்பெண்’ என்று அழைக்கப்படும் ஐரோம் சானு ஷர்மிளா என்பவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000 ஆம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
தனது 28 ஆவது வயதில் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்த திலிருந்து துளி நீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை ஈர்த்தார்.
மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி அவரை கைது செய்த பொலிஸார் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவர் 14 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.
இந்திய தண்டனைச்சட்டம் 309 இன் கீழ் உண்ணாவிரதம் இருப்பது அல்லது வேறெந்த வகையிலாவது தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதே சட்டத்தின் கீழ் 14 தற்கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 14 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை யடுத்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இந்திய தண்டனைச்சட்டம் 309 ஐ விரைவில் இந்திய மத்திய அரசு இரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மணிப்பூரின் ‘இரும்புப்பெண்’ என்று அழைக்கப்படும் ஐரோம் சானு ஷர்மிளா என்பவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000 ஆம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
தனது 28 ஆவது வயதில் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்த திலிருந்து துளி நீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை ஈர்த்தார்.
மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி அவரை கைது செய்த பொலிஸார் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவர் 14 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.
இந்திய தண்டனைச்சட்டம் 309 இன் கீழ் உண்ணாவிரதம் இருப்பது அல்லது வேறெந்த வகையிலாவது தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதே சட்டத்தின் கீழ் 14 தற்கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 14 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை யடுத்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இந்திய தண்டனைச்சட்டம் 309 ஐ விரைவில் இந்திய மத்திய அரசு இரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக