ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மூக்கின் மேல் இருக்கும் சொர சொரப்பை நீக்க

ஆண்கள், பெண்கள் என அனை­வ­ருக்­குமே பட்­டுப்­போன்ற மென்­மை­யான சருமம் வேண்­டு­மென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடை­யூறை விளை­விக்கும் வண்ணம் பருக்கள், கரும்­புள்­ளிகள் போன்­றவை முகத்தில் ஏற்­பட்­டு­விடும். ஒரு­வேளை பருக்கள் முகத்தில் இல்­லாமல் இருந்­தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்­றிய இடங்கள் மட்டும் சொர­சொ­ர­வென்று லேசாக கருப்­பா­கவும், வெள்­ளை­யா­கவும் இருக்கும். பருக்­க­ளையும், பருக்­களால் வந்த தழும்­பு­க­ளையும் நீக்க 20 வீட்­டுக்­கு­றிப்­புகள் கரும்­புள்ளி பிரச்சினை­யா­னது எண்ணெய் பசை சரு­மத்­தி­ன­ருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சரு­மத்­து­ளை­களில் இருந்து வெளி­வரும் எண்ணை­யா­னது வெளி­யே­றாமல் அடைக்­கப்­படும் போது ஏற்­படும். சரு­மத்தின் மென்­மையைத் தடுக்கும் கரும்­புள்ளி பிரச்சி­னையை தடுக்க சமை­ய­ல­றை­யி­லேயே நிறைய பொருட்கள் உள்­ளன. இங்கு கரும்­புள்­ளியை நீக்க உதவும் சமை­ய­லறைப் பொருட்கள் என்­ன­வென்று கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து அதனை அன்­றாடம் செய்து உங்கள் முகத்தை பட்­டுப்­போன்று மென்­மை­யாக வைத்துக் கொள்­ளுங்கள்.



உரு­ளைக்­கி­ழங்கு: உரு­ளைக்­கி­ழங்கை வட்­ட­மாக நறுக்கி, அதனைக் கொண்டு சொர­சொ­ர­வென்று உள்ள கரும்­புள்­ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத்தால், கரும்­புள்­ளிகள் நீங்கி, சருமம் மென்­மை­யாக இருக்கும்.

தேன்: தேன் கூட கரும்­புள்­ளி­களைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்­கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழு­வினால், கரும்­புள்­ளிகள் நீங்கும்.

பட்­டை­யுடன் தேன் : பட்­டையை பொடி செய்து அதனை தேனில் கலந்து, முகத்தில் தடவி தேய்த்து கழு­வினால், கரும்­புள்­ளி­க­ளா­னது விரைவில் மறையும்.

தக்­காளி : தக்­கா­ளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதி­கப்­ப­டி­யான எண்ணெய் பசை நீங்­கு­வ­தோடு, கரும்­புள்­ளி­களும் போய்­விடும்.

ஆவிப்­பி­டிப்­பது: அனைத்­தையும் விட ஆவிப்­பி­டிப்­பது தான் மிகவும் சிறப்­பான வழி. அதிலும் சுடு­நீரில் மூலி­கை­க­ளான லாவெண்டர், எலு­மிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகி­ய­வற்றை சேர்த்து, ஆவிப்­பி­டித்து சுத்­த­மான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்­து­ணர்ச்­சி­யாக இருப்­ப­துடன், கரும்­புள்­ளி­களும் விரைவில் மறையும்.

பால் : தினமும் 2-–3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்­குகள் மற்றும் கரும்­புள்­ளிகள் நீங்கி, முகம் பொலி­வோடும் மென்­மை­யா­கவும் இருக்கும்.

கற்­றாழை : கற்­றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்­றாழை துண்டு கொண்டு மேல்­புறம் நோக்கி தேய்த்தால், கரும்­புள்­ளிகள் நீங்கும்.

டூத் பேஸ்ட்: டூத் பேஸ்ட் கூட கரும்­புள்­ளி­களை நீக்க உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி நன்கு உலர்ந்­ததும், அதனை மேல்­புறம் நோக்கி உரித்து எடுத்தால், கரும்­புள்­ளிகள் நீங்­கி­விடும்.

சர்க்­கரை : கரும்­புள்­ளி­களை நீக்க சர்க்­கரை கூட பெரிதும் உத­வி­யாக இருக்கும். அதற்கு ஈர­மான முகத்தில் சர்க்­கரைக் கொண்டு மென்­மை­யாக தேய்த்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்­புள்­ளிகள் போய்­விடும்

எலு­மிச்சை: சரு­மத்­து­ளை­களின் அடைப்பால் ஏற்­படும் கரும்­புள்­ளியை, எலு­மிச்சை கொண்டு போக்­கலாம். அதற்கு எலு­மிச்­சையை மூக்கின் மேல் தேய்த்தால், சரு­மத்­து­ளை­க­ளா­னது திறந்து, கரும்­புள்­ளிகள் வரு­வது தடுக்­கப்­படும்.

முட்­டையின் வெள்­ளைக்­கரு : முட்­டையின் வெள்­ளைக்­க­ருவை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்­ணீரை கையில் நனைத்து முகத்தை தேய்த்தால், கரும்­புள்­ளிகள் நீங்கி முகம் பட்­டுப்­போன்று இருக்கும்.

கடலை மாவு : கடவை மாவில் சிறிது பாதாம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி ஊர வைத்து, கழுவும் போது தேய்த்துக் கொண்டே கழு­வினால், கரும்­புள்­ளிகள் நீங்­கி­விடும்.

தயிர் : 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டேபிள் ஸ்பூன் எலு­மிச்சை சாறு சேர்த்து, பாதிக்­கப்­பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழு­வி­னாலும், கரும்­புள்­ளிகள் நீங்கும்.

பேக்கிங் சோடா : 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்­கப்­பட்ட இடத்தில் தடவி மேல்­புறம் நோக்கி தேய்த்தால், கரும்­புள்­ளிகள் போய்­விடும்

மஞ்சள் தூள் மற்றும் புதினா ஜூஸ்: 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளில் புதினா ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து குளிர்ந்த நீர் பயன்­ப­டுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்­படி செய்து வந்தால், கரும்­புள்­ளிகள் மறையும்.

ஸ்ட்ரோபெர்ரி இலைகள்: ஸ்ட்ேராபெர்­ரியின் இலைகள் கூட கரும்­புள்­ளி­களைப் போக்க உதவும். எப்­ப­டி­யெனில் அதில் உள்ள அல்­கலைன் வீக்­கத்தைக் குறைத்து, சருமத் துளை­களை சுத்தம் செய்து, அடைப்பு ஏற்­ப­டு­வதைத் தடுக்கும்.

வெந்­தய கீரை: வெந்­தயக் கீரையை அரைத்து அதனை மூக்கின் மேல் தடவி நன்கு உலர வைத்து, பால் பயன்படுத்தி கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

ஓட்ஸ்: ஓட்ஸ் சிறந்த ஸ்கரப்பர். ஆகவே ஓட்ஸ் பொடியில் பால் சேர்த்து கலந்து, அதனை ஈரமான முகத்தில் தடவி தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல