ஞாயிறு, 14 டிசம்பர், 2014

நாய்கள் குரங்­குடன் விளை­யா­டு­வதை பார்ப்­ப­தற்­காக மக்கள் படை­யெ­டுப்பு

உடுவில்: சுன்­னாகம் பேருந்து நிலையப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக குரங்கும் நாயும் நெருக்­க­மாக நட்­புடன் விளை­யா­டு­வதைப் பார்ப்­ப­தற்­காக இப்­பி­ர­தே­சத்தை நோக்கி மக்கள் படை­யெ­டுத்து வரு­கின்­றனர்.



கடந்த சில நாட்­க­ளாக சுன்­னாகம் நகரப் பகு­தியில் குரங்கு ஒன்று நிற்­கின்­றது. இந்தக் குரங்கு அங்­குள்ள ஒரு சில கட்­டாக்­காலி நாய்­க­ளுடன் நல்ல முறையில் பழகி விளை­யா­டு­வதும் நாய்கள் அதற்கு இடம் கொடுத்­துள்­ள­மையும் பல­ரி­டை­யேயும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக நாய்­களும் குரங்கும் நட்­புடன் விளை­யா­டு­வ­தையும் குரங்கு நாய்­க­ளுக்கு பேன் பார்ப்­ப­தையும் கண்டு மகி­ழ­வென பொது மக்கள் இந்த இடத்­திற்கு படை­யெ­டுத்து வரு­கின்­றனர்.

இவ்­வாறு அங்கு செல்­கின்ற மக்கள் கட்டாக் காலி நாய்­க­ளுக்கும் குரங்­குக்கும் பாண், பணிஸ், வாழைப்­பழம், வடை போன்ற சிற்­றுண்டி வகைளைக் கொடுத்து மகிழ்­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல