ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இலங்­கையில் தீவிரம் அடைந்துவரும் சிறுநீரக நோய்

இலங்­கையின் வட­மத்­திய மாகா­ணத்தில் புதி­தாகத் தோன்­றி­யுள்ள சீறு­நீ­ரக நோய் பெரும் சுகா­தாரப் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இது தொற்­றா­நோய்ப்­பி­ரி­வுக்குள் இருந்­தாலும் நோயின் தீவிரம் அதி­க­ரித்­து­ வ­ரு­வது பல­ரையும் கவ­லை­க்கொள்ளச் செய்­துள்­ளது.


இலங்­கையின் வரண்ட வல­யத்­திற்குள் பர­விக்­கா­ணப்­படும் இந்த நோயின் முதல் நோயாளர் 1990ஆம் ஆண்­ட­ள­வி­லேயே அடை­யாளம் காணப்­பட்டார். அதி­க­மாக விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் மட்­டு­மன்றி தற்­போது வட­மா­கா­ணத்­திலும் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. அத்­துடன் தென் மாகா­ணத்தில் அம்­பாந்­தோட்­டை­யிலும் சிறு­நீ­ரக நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

மாவட்ட ரீதியில் அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­நாகல், மாத்­தளை, வவு­னியா, பதுளை, அம்­பாந்­தோட்டை, அம்­பாறை, மொன­றா­கலை, முல்­லைத்­தீவு, மற்றும் திரு­கோ­ண­மலை உள்­ளிட்ட 11 மாவட்­டங்­க­ளிலும் சுமார் 60 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளிலும் சிறு­நீ­ரக நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

இந்­நோய்க்கு அதி­க­ளவில் விவ­சா­யி­களே பலி­யாகி வரு­கின்­றனர். சுகா­தார அமைச்சு கடந்த வருடம் மேற்­கொண்ட ஆய்வின் போது இலங்­கையில் 20,828 சிறு­நீ­ரக நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டனர்.

இலங்­கையில் மாதந்­தோறும் சுமார் 1,100 சிறு­நீ­ரக நோயா­ளர்கள் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர் என்றும், வரு­டாந்தம் சுமார் 300 பேர் வரையில் மர­ணிக்­கின்­றனர் என்றும், தர­வுகள் தெரி­விக்­கின்­றன. எனினும், சிகிச்­சைக்கு அனு­ம­திக்­கப்­ப­டாத நிலையில் வீடு­க­ளிலும் இறப்­ப­தனால் இவ்­வெண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

சிறு­நீ­ரக நோயின் அறி­கு­றிகள்:
* உடல் வலிமை இழத்தல்
* முதுகு வலி
* சிறுநீர் வெளி­யே­று­வது படிப்­ப­டி­யாகக் குறைதல்
* இரத்த அழுத்தம் சிறி­த­ளவு அதி­க­ரித்தல்
* சிறு­நீ­ருடன் நுரை வெளி­யே­றுதல்

நோயின் உச்­ச­கட்­டத்தின் அறி­கு­றிகள்:
* உணவு ஒவ்­வாமை
* வாந்தி
* உடல் வீக்கம்
* இளைப்பு
* உடல் வெளுத்தல்
* உடலில் இரத்­தத்தின் அளவு குறைதல்
* அதிக இரத்த அழுத்தம்
* தசை­களில் பல­வீனம்
* உடல் அரிப்பு
* சுய­நி­னைவு பாதிக்­கப்­படல்

சிறு­நீ­ரக நோய் ஏற்­ப­டு­மென
அனு­மானிக்கும் கார­ணிகள்:
* பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும் கிரு­மி­நா­சி­னிகள் மற்றும் கிருமி நாசி­னியை முறை­யற்ற வகையில் பாவித்தல்.
* நிலத்­தடி நீரில் கலந்­துள்ள இர­சா­யன பொருட்கள் மற்றும் ஆசனிக், கெடி­மீயம், பாத­ரசம், ஈயம் மற்றும் செம்பு போன்ற உலோ­கப்­பொ­ருட்கள்.
* கல்­சியம், மக்­னீ­சியம் கலந்த நீரை அடிக்­கடி பரு­குதல்.
* நிலத்­தடி நீரில் அதி­க­ளவு புளோரைட் அளவு மற்றும் புளோரோ அலு­மீ­னியம் கலந்­தி­ருத்தல்.
* சிறு­நீ­ர­கத்தில் வைரஸ் தாக்கம்.
* பாம்புக் கடி.
* விஷம் அருந்­துதல்.

சிறு­நீ­ரக நோயி­லி­ருந்து மக்கள் தம்மை பாது­காத்­துக்­கொள்ள செய்­ய­வேண்­டிய வழி­மு­றைகள்:
* நாள் ஒன்­றுக்கு மூன்று லீட்டர் சுத்­த­மான நீரை அருந்­த­வேண்டும்.
* கிணற்று நீரை பயன்­ப­டுத்­தினால் அதன் அருகே மரம் ஒன்றை நடுங்கள்.
* கிரு­மி­நா­சி­னி­களை பயன்­ப­டுத்தும் போதும் இர­சா­யன உரங்­களை பயன்­ப­டுத்தும் போதும் பாது­காப்­பாக அவற்றை உப­யோ­கப்­ப­டுத்த வேண்டும்.
* மது மற்றும் புகைத்­தலை தவி­ருங்கள்
* முடிந்­த­ளவு இர­சா­யன உரங்­களை நீருடன் கலக்­காத வகையில் செயற்­ப­டுத்துங்கள்.
* உணவை சுவை­யாக்­கு­வ­தற்கு செயற்கை இர­சா­யன சுவை­யூட்­டி­களை பயன்­ப­டுத்த வேண்டாம்.
* அலு­மி­னியம் சமையல் பாத்­தி­ரங்­க­ளுக்கு பதி­லாக மட்­பாண்­டங்­களை பயன்­ப­டுத்தல் வேண்டும்.
* உணவு, வகை­களை பொதி­செய்யும் போதும் பாவிக்கும் போதும் தர­மான பிளாஸ்டிக் பொருட்­க­ளையே பாவிக்­கவும்
* தினமும் உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்ளல்
* வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னை­யின்றி மருந்­து­வ­கைகள் பாவிப்­பதைத் தவிர்க்­கவும், நோய்­க­ளுக்கு முறை­யான வைத்­திய சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளவும்.
* ஆரம்ப கட்­டத்­தி­லேயே நோயை இனங்­காண்க (இரத்­தத்தில் கிரி­ய­டினின் அளவை அளத்தல் மற்றும் சிறு­நீரில் அல்­பிக்­யுமின் பரி­சோ­தித்­துக்­கொள்ளல்)
விரை­வாக நோயை இனங்­கண்டு சிகிச்சை வழங்­கு­வதன் மூலம் நோயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடியும்.

சிறு­நீ­ரக நோயா­னது குறு­கிய கால தீவிர சிறு­நீ­ரக பாதிப்பு மற்றும் நாட்­பட்ட சிறு­நீ­ரக பாதிப்பு என்று இரு வகைப்­படும். குறு­கிய கால சிறு­நீ­ரக பாதிப்­பா­னது ஆரம்­பக்­கட்­டத்தில் அடை­யா­ளங்­கா­ணப்­ப­டு­மி­டத்து, சிகிச்சை வழங்கி குணப்­ப­டுத்­தலாம். இந்நோய் பாம்பு விஷம் போன்­றவை சிறு­நீரில் கலத்தல், நீரி­ழப்பு மற்றும் சிறு­நீ­ரக தடங்கல் ஆகி­ய­வற்றால் ஏற்­ப­டு­கின்­றது. இந்நோய் நீடிக்கும் பட்­சத்தில் நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயாக மாறு­கி­றது. இதில் முதற்­கட்டம் அடை­யா­ளங்­கா­ணப்­பட முடி­கின்ற அதே­வேளை, இரண்டாம் கட்டம் அடை­யா­ளங்­காண முடி­யா­தது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

உயர் இரத்த அழுத்­தமும் நீரி­ழி­வுமே சிறு­நீ­ரக நோய்க்­கான பிர­தான கார­ணி­க­ளாக அமை­கின்­றன. இலங்­கையில் இத்­தனை வேக­மாக நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் இது­வ­ரையில் உறு­தி­யாகக் கூற முடி­யா­துள்ள அதே­வேளை, அசுத்­த­மான நீர், இர­சா­யனப் பொருட்கள் நீரில் கலக்­கின்­றமை, போஷாக்­கின்மை என்­ப­னவே கார­ண­மாக அமை­கின்­றன என்று நம்­பப்­ப­டு­கி­றது.

சிறு­நீ­ரக பாதிப்பை ஐந்து கட்­டங்­க­ளாக ஆய்­வா­ளர்கள் பார்க்­கின்­றனர். இதில் முதல் மூன்று கட்­டங்­களில் சிறு­நீ­ரக நோய்க்­கான எவ்­வி­த­மான அறி­கு­றி­களும் காணப்­ப­டு­வ­தில்லை. கடைசி இரு கட்­டங்கள் அடை­யாளங் காணக்­கூ­டி­ய­ன­வா­கவும், ஆபத்­தா­ன­வை­யா­கவும் பார்க்­கப்­ப­டு­கின்­றன. அரச மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களின் தர­வு­களின் அடிப்­ப­டையில் நோக்­கு­கையில் அதி­க­ளவு இந்­நோ­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 4 வீத­மா­ன­வர்கள் குறைந்த வரு­மா­ன­மு­டைய 30முதல் -60 வய­துக்­குட்­பட்ட ஏழை விவ­சா­யி­க­ளாவர். மேலும் 40-முதல் 70வய­திற்­குட்­பட்ட ஆண்­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிறு­நீ­ர­கத்தை பாது­காப்­ப­தற்கு தினமும் 8-10 கோப்பை தூயநீர் அருந்த வேண்டும். இதுவே வெயிலில் நின்று பணியாற்றும் போது குடிநீரை அதிகமாக பருக வேண்டும். கொதித்தநீர், வடிகட்டியநீர் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை பயக்கும். இயற்கையான பானங்கள் பருகுவதற்கு ஏற்றவை.

இலங்கையில் உள்நாட்டு விவசாயத்தில் பெரும் பங்காற்றிவரும் வட மாகாணம், குறிப்பாக வட மத்திய மாகாணத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஏற்படும் இந்த நோயால் எதிர்காலத்தில் இலங்கையில் விவசாயத்திற்கு ஓர் முட்டுக்கட்டையாக அமையக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல