ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய முடியாது?; மத்திய அரசு கேள்வி!

இஸ்லாத் திருமண சட்டத்தில் இஸ்லாம் நாடுகளே திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஏன் திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது மத்திய அரசு.

மூன்று முறை தொலை பேசியில் தலாக் சொன்னால் கூட, இஸ்லாம் திருமணம் முறிவு என்பது கணக்கில் கொள்ளப்படும் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று, இஸ்லாம் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இஸலாம் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், இஸ்லாம் பெண்கள் கணவனால் அநியாயமாக சித்திரவதை செய்யப்படுவதைக் காட்டிலும், அல்லது கொடூரமாகக் கொலை செயப்படுவதைக் காட்டிலும், தலாக் சொல்லி பிரிவது நல்ல முடிவுதான் என்று இஸ்லாமியத் தலைவரும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், இஸ்லாம் நாடுகளில் கூட அவர்களின் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளன. பன்முகம் கொண்ட இந்தியாவில், இஸ்லாம் திருமனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில் தவறு ஒன்றும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல