புதன், 24 நவம்பர், 2010

போலந்தில் உலகின் மிகப் பெரிய ஏசுநாதர் சிலை

உலகின் மிகப்பெரிய ஏசுநாதர் சிலை போலந்து நாட்டில் உள்ள மேற்கு மாகாணமான சுவிபோட்டிசன் மலைப் பகுதியில் நிறுவப்பட்டது. போலந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான இந்த பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் மனைவி தான் அடுத்த மகாராணி

“என் மனைவி கமீலா தான் பிரித்தானியாவின் அடுத்த மகாராணி” என பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள என்.பி.சி, தொலைக்காட்சிக்கு பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் பிரத்தியேக பேட்டியளித்தார்.

காருக்கும் கறுப்புப் பெட்டி

விமானத்தில் இருப்பது போன்ற கறுப்பு பெட்டியை காருக்கும் தயாரித்து ஐரோப்பிய யூனியன் சாதனை படைத்துள்ளது. அதில் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுநர் நிறுத்தியை போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் உட்பட 20 வகையான புள்ளி விபரங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் வய்து கூடிய உழைப்பாளி

யாழ்ப்பாணத்தில் மிகவும் வயது கூடிய உழைப்பாளி என்கிற பெருமைக்கு உரியவர் 88 வயது உடைய திருமதி சுப்பிரமணியம். இவர் ஒரு விதவை. வளர்ப்பு மகள் உட்பட இவரது நெருங்கிய சொந்தக்காரர்கள் அனைவருமே வெளிநாடுகளில்தான்.

மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

- இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி

மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டிருப்பது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.அடுத்த வருடம் வட மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் - இராணுவம் எச்சரிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 345 பேர் பலி!. (படங்கள் இணைப்பு)

கம்போடியாவில் வருடாந்திர திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 345 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்போடியாவின் முக்கிய திருவிழாவான வருடாந்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தென்கொரியா மீது குண்டுவீசி வடகொரியா கடும் தாக்குதல்!

தென் கொரியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றின் மீது நேற்று, வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கியது. பதிலுக்கு தென்கொரியாவும் வடகொரியா மீது தாக்குதலை துவக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தென்கொரிய கடற்படை வீரர் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். இதனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. சீனாவும், ரஷ்யாவும் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

போலி விசா மூலம் இரு பிள்ளைகளை பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த பெண்ணுக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை!

பிரான்ஸூக்கு சென்ற பின்னர், 30 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், வேறு பெற்றோரின் இரண்டு பிள்ளைகளை தனது பிள்ளைகள் எனக் கூறி, போலி வீசா மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஜயகி டி அல்விஸ் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்மாளித்துள்ளார். அத்துடன் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதுக்கு மேற்பட்டோரே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியும்

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் அனைவருக்கும் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல