புதன், 31 மார்ச், 2010

பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும்

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறிவிட்டார் என்ற செய்தி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பிளவு படுத்தி சிதைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டு வந்தவர்களுக்கு மிகஉவப்பான செய்தியாக இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்தவர்களுக்கு மிகுந்த வேதனை தருகின்ற விடயம் தான்.காலத்தின் தேவை கருதி பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக உழைத்த நண்பர் சிவராமின் ஆத்மா இந்தசெய்தியைக்கேட்டு நிட்சயம் துடித்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

கந்தசட்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர சமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

ஆழம் காணப்படாத நிலாவரைக் கிணறு


பல்கிளைப் பனைமரம்

வல்லிபுரக் கோவில் வீதியின் மேற்கே பல கிளைகளைக் கொண்ட பனைமரங்கள் மூன்று காணப்படுகின்றன. பொதுவாகப் பனை மரங்கள் கிளைகளைக் கொண்டவையல்ல. அதிசயமாக கிளைகளைக் கொண்டு இவ்விடத்தில் இவை வளர்ந்துள்ளன.

உடலுறவு கொள்ளும் வழிமுறைகள்

சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் லீலை

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்கா விலும் செக்ஸ் மோசடி புகார் எழுந்துள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இன முரண்பாட்டின் தீர்வுக்கு இந்தியாவின் முக்கியத்துவங்கள்

இந்தியாவை தெற்காசியாவிலேயே ஓர் பெரும் வல்லரசாகக் கூறலாம். உலகில் இந்தியா நான்காவது பெரிய நிலையான இராணுவத்தைக் கொண்டுள்ளதுடன் பெரும் வளங்களின் கட்டுப்பாட்டையும் கொண்டதாகவுள்ளது. இந்தியா உலகிலேயே இரண்டாவது கூடிய சனத் தொகையையும் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது. இந்தியாவின் மேலாதிக்கம் என்று கூறுகின்றபோது நாம் எண்ணற்ற காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவானது இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களா தேஷ் மற்றும் அதன் எல்லையை ஒட்டிய நாடுகள் இந்தியாவின் கலாசாரத்தை ஒட்டிய நாடுகளாகவே இருக்கின்றன. இலங்கைக்கான இந்திய உதவிகள் சுதந்திர மடைந்த காலத்தில் இருந்தே கிடைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டமும் தந்தை செல்வாவும்

எஸ். ஜே. வி. செல்வநாயகத்தை “தந்தை செல்வா' என்றே தமிழ் மக்கள் அன்போடும் பாசத்தோடும் அழைத்தனர். தந்தை செல்வா மலேசியாவின் ஏபே நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார்.

டயானா மரணம் : அல்பா சுரங்கத்தில் நடந்தது விபத்தல்ல; கொலை!

இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை; அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கசிந்திருக்கிறது.

தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்!

பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின.

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

* பெருங்காயம் 20 கிராம், சீரகம் 5 கிராம் எடுத்து நன்றாக நசித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு வற்ற விட்டு இறக்கி வடித் தெடுக்கவும்.
இதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.

பறவையால் எடுத்து வரப்பட்டு மைதானத்தில் போடப்பட்ட கடத்தப்பட்டவரின் கைவிரல்

கடத்தப்பட்டு காணாமல் போன நபரொருவரின் கைவிரல் பறவையொன்றால் எடுத்து வரப்பட்டு விளையாட்டு மைதான மொன்றில் போடப்பட்ட சம்பவம் கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

உண்மையான காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை குரோஷிய ஆண் நாரையொன்று நிரூபித்துள்ளது.

நானொரு தன்னின சேர்க்கையாளர்

Ricky Martin
புயர்ரோரிக்காவைச் சேர்ந்த உலகப் பிரபல பொப் இசைப் பாடகர் றிக்கி மார்ட்டின் தானொரு தன்னின சேர்க்கையாளர் என அறிவிப்புச் செய்துள்ளார்.

செவ்வாய், 30 மார்ச், 2010

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்


சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

இருதய நோய்

இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது.

காதின் பாதுகாப்பு


காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:

'காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

அல்சர் - Ulcer

தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம்.

உலக துணுக்குகள் 1

சுதந்திரதேவி சிலை - Statue of Liberty

அமெரிக்கா என்றதும் நினைவுக்கு வரும் விஷயம், சுதந்திரதேவி சிலைதன்.பிரான்ஸ் அரசாங்கத்தால் பரிசளிக்கப்பட்டுள்ள இந்த சிலை அமெரிக்கர்களின் பேராதரவுடன் உலக அதிசயங்களின் லிஸ்ட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாம்.

உலக துணுக்குகள்

சீனப் பெருஞ்சுவர் - Great Chinese Wall

எதிரிக‌ளின் தாக்குத‌லைத் த‌டுக்க‌, அர‌ச‌ர்க‌ள் அன்று க‌ட்டிய‌ பெருஞ்சுவ‌ர், இன்றும் அந்நாட்டின் புக‌ழை பாடுகின்ற‌து.

திங்கள், 29 மார்ச், 2010

வத்திக்கான் நகரம்

ரோம் நகரின் மத்தியிலுள்ள ஒரு சுதந்திர இராச்சியம்.
இதன் பரப்பு 1087 ஏக்கர் மட்டுமே. இங்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகம் நடைபெறுகிறது. 1871 வரை போப்பாண்டவர்கள் போப்பின் மாகாணங்கள் (Papal States) எனப்பட்ட பெரிய நிலப்பகுதியிலே அதிகம் செலுத்தி வந்தனர்.

கண்களால் நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?

கடற்க்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் தூரம் 2.5 மைல்கள் தூரம். நீங்கள் உயரத்திற்குப் போகப் போக இன்னும் தொலைவுக்குப் பார்க்கலாம். காரணம் பூமி உருண்டையாக இருப்பதால்.

ஹட்சன் விரிகுடா (Hudson Bay)

கனடாவின் வட பகுதியிலுள்ள ஒரு பெரிய குடா.
இதன் நீளம் 850 மைல்கள். அகலம் 600 மைல்கள்,
பரப்பளவு 472.000 சதுரமைல்.

சாய்கோபுரம்.

இத்தலியில் பைசா நகரில் ஒரு கதீட்ரல் கட்டினார்கள். அருகாமையிலே கோயில் மணியடிக்க கட்டபட்ட கோபுரம். கடைசியில் "பைசா கோபுரம்" என்று புகழ்பெற்றது. 1173_ல் மூன்று மாடிகள் கட்டபட்ட உடனே கட்டிடம் சாயத்தொடங்கியது. ஒரு பக்கத்தில் நிலத்துக்கடியில் மண் உறுதியாக இல்லாமல் இருந்தது தான் காரணம். உடனே பயந்து போய் கட்டுமான வேலைகளை உடனே இடை நடுவே நிறுத்தி விட்டார்கள்.
அது எவ்வளவு காலத்திற்கு என்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு இதை தொடர்ந்து கட்டாமல் நிறுத்தி விட்டார்கள்!!

கறுப்புப் பெட்டி - Black Box




அனேகமாக விமான விபத்துக்களில் யாருமே பிழைப்பதில்லை. விபத்து எப்படி நடந்தது என்று அறிவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட பொருள் தான் இந்த கறுப்புப் பெட்டி உண்மையியே இது ஒரேஞ் அல்லது மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்!

முதலைகள்

1. முதலைகளை எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழலிலும் சைவ உணவை உண்ணாது!

2. இவை தைரியமாக மனிதர்களைக் கூட மறைந்திருந்து, தாக்கிக் கொன்று தின்னும் இயல்புடையவை!

நிசப்தம் கிழித்த கொலைகள் - ஐயர்

கனகரத்தினம் கொலை முயற்சி நடைபெற்ற சில நாட்களின் பின்னதாக கணேஸ் வாத்தி கொழும்பில் பொலீசாரால் கைது செய்யப்படுகிறார்.வழமைபோல அவரும் பஸ்தியாம்பிள்ளை என்ற காவல்துறை அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருந்தோம் கணேஸ் வாத்தி கைதானது தொலைத் தொடர்புகள் அரிதான அந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் - ஐயர்

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் - ஐயர்

இந்த இரு வருட எல்லைக்குள் பல உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பண்ணைகளின் தேவை அதிகமாகிறது. எமது இயக்க உறுப்பினராவதற்கான நுழைவாயில் பண்ணைகள் தான். அங்குதான் அவர்களின் உறுதித்தன்மை பரிசீலிக்கப்படும். தேடப்படுபவர்களோ, முக்கிய உறுப்பினர்களோ பொதுவான பண்ணைகளில் நிரந்தரமாகத் தங்குவதில்லை.

பல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது?

நீண்ட பயணத்தின் முன் ஒட்டக ஓட்டி அதற்கு அதிகப்படியான உப்பைக் கொடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கச் செய்கின்றார். சுமார் 75 தொடக்கம் 80 லீட்டர் வரை குடிக்கும்! ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள்!

சிவபுராணம்

திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

மைக்ரோவேவ் ஓவன் பற்றிய சில தகவல்கள்

மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார்.

அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

இயற்க்கை மருத்துவம்

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம்

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை

05. காது மந்தம் போக்கும் தூதுவளை

அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள்!

ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மைக்ரோ அவனில் செய்யக் கூடாதவை:

1. மைக்ரோ அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!

மைக்ரோ அவன் இல்லாத வீடே தற்ப்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை தெரிந்து கொள்வது சாலச் சிறந்தது.

ஆண்மைக்கு ஆபத்து!

தற்க்காலத்தில் அனைவரிடமும் கைப்பேசி இல்லாதவர்கள் இல்லை. ஒரு பொருளின் சாதக பாதகம் என்று உண்டு அதுபோல் கைத்தொலைபேசியிலும் உண்டு.

ஔவையாரின் ஆத்திசூடி ஆங்கிலத்தில்

1. Learn to love virtue.
2. Control anger.
3. Don't forget Charity.
4. Don't prevent philanthropy.
5. Don't betray confidence.
6. Don't forsake motivation.
7. Don't despise learning.
8. Don't freeload.
9. Feed the hungry and then feast.
10. Emulate the great.
11. Discern the good and learn.
12. Speak no envy.
13. Don't shortchange.

ஔவையாரின் ஆத்திசூடி

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அகம் சுருக்கேல்

திருக்குறள்

1. அறத்துப்பால்
1.1 பாயிரவியல்

1.1.1 கடல்வாழ்த்து


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

ஞாயிறு, 28 மார்ச், 2010

வெட்டி வேலை என்றால் என்ன?

முள்ளு முனையிலே மூன்று
குளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழு
ஒண்ணுல தன்ணியே இல்லை

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1

துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!

கவி காளமேகப் புலவர் பாடியது.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம்

கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

ஆறு சுவைகள்

ஆறு சுவைகள் பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.

"சிதம்பர ரகசியம்" என்கிறார்களே அதன் விளக்கம் என்ன?

நம்மில் பலர் "இது என்ன பெரிய சிதம்பர ரகசியமோ, ஏன் சொல்லாமல் மூடி மறைக்கிறாய்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். சரி, அது என்ன அந்த சிதம்பர ரகசியம் என்று பலரிடமும் விசாரித்துப் பார்த்தேன். எவரும் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை. "இதெல்லாம் யாருக்கு தெரியும்" என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது. நானும் விடாமல் தேடியதில் கிடைத்த விளக்கங்கள் தான் இவை:

ஆயகலைகள் அறுபத்து நான்கு

அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் இதுதான்

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்

நவரத்னங்கள்

மாணிக்கம்,
பவளம்,
வைரம்,
முத்து,
மரகதம்,
புஷ்பராகம்,
நீலமாமணி,
கோமேதகம் மற்றும்
வைடூரியம்

நவசக்திகள்

ஆதிசக்தி,
ஞானசக்தி,
கிரியாசக்தி
பராசக்தி,
அம்பிகை,
கருணாம்பிகை,
கௌரி,
கங்கை மற்றும்
உமை

நவநிதிகள்

நவநிதி என்றால் ஒன்பது விதமான செல்வங்கள் தான். செல்வத்திற்கு அதிபதியான குபேரனிடம் ஒன்பது விதமான செல்வங்கள் (நவநிதிகள்) இருப்பதாகச் சொல்வார்கள். அவை:

சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது),
பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது),
மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது),
கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது),
முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது),
நந்த நிதி (இன்பமளிப்பது),
நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது),
கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது) மற்றும்
மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது).

'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?

கூப்பிடு தூரம் இருக்கும்னு நம்மில் பலர் சொல்லுவார்கள். நாம் அதனை பொதுவாக எப்படி விளங்கிக்கொண்ட்டோமென்றால் ஒருத்தர் கூப்டும் போது அதிக பட்சம் ஒருத்தரால எவ்வளவு தூரத்துல இருந்து கேக்க முடியுமோ, அது தான் கூப்பிடு தூரம்னு நினைத்தோம். அதுதான் இல்லை.

சனி, 27 மார்ச், 2010

கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்! (வீடியோ)

ஹெய்டியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வியர்வை படிந்த கைகளை குலுக்கிய பின்னர், தனக்கு முன்பாக திரும்பி நின்றுகொண்டிருந்த பில் கிளின்டனின் சட்டையில் ஜார்ஜ் புஷ் கையை துடைத்ததாக புகார் எழுந்துள்ளது. ஹெய்டியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

“இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“

“இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“ என்றும் ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. ஆனால், அதன் உண்மை பொருள் வேறு.
இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால், அவன் நம் அறியாமையை (மடமையை) வேருடன் களைவான் என்பதே அதன் பொருளாகும்.

“திருநீறு இட்டார் கெட்டார், திருநீறு இடாதார் வாழ்ந்தார் என்று ஒரு பழமொழி வழங்குகிறது. ஆனால், அதன் உண்மையான வடிவம் “திருநீறு இட்டு யார் கெட்டார்? திருநீறு இடாது யார் வாழ்ந்தார்?' என்பதே.

திறமையினாலும் விடா முயற்சியினாலும் திரையுலகில் சாதனைகள் புரிந்த லிவிங்ஸ்டன்

முன்னரெல்லாம் தமிழ்த் திரையுலகில் நடிப்பதற்காக வருபவர்கள் நல்ல முகவெட்டு, உடல் கட்டுடன் இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ அவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். அதே சமயம் அவ்வாறான லட்சணங்கள் இல்லாமல் வெறும் திறமை மட்டும் இருந்து விட்டால் அவர்களை பிரதான வில்லனுக்கு அடியாளாகவோ அல்லது சிறிய பாத்திரமொன்றிலோ போனால் போகட்டுமென்று சந்தர்ப்பம் வழங்குவார்கள்.

முன் எச்சரிக்கை

இன்றைய நவீன வாழ்க்கையில் சுகங்கள், சௌகரியங்கள், நிறைந்திருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில், கடினமான சில வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் நேரலாம். மேலும் ஆரோக்கியத்திற்காக “உடற்பயிற்சி மையம்' போய் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் சிலருக்கு ஏற்படக்கூடும். அது போன்ற சமயங்களில் உடலில் ஏற்படக் கூடிய சிறிய வலி, உபாதைகள் விஷயத்தில் எச்சக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அஜாக்கிரதையினால் பின் விளைவுகள் விபதமாக இருக்கலாம்.

“ரோபோ' பல் நோயாளி

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிலுள்ள பல் மருத்துவமனையில் “ஹனாகோ ஷொவா' (Hanako Showa ) எனப் பெயரிடப்பட்ட பல் நோயாளி “ரோபோ' ஆசனமொன்றில் சாய்ந்திருப்பதையும் மாணவர் ஒருவர் மேற்படி பல் நோயாளி ரோபோவை பரிசோதிப்பதையும்  காணலாம்.

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

உலகின் முதலாவது இலத்திரனியல் கீழ் உள்ளாடையை தாம் உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேற்படி உள்ளாடையை அணிந்திருப்பவர் மலம் அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும் போது, அது எழுத்து வடிவ செய்தியை அவரைப் பராமரிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது.

மலையகத்தின் புதுமைப் பெண்

மலைநாட்டின் பெண் இனமே

வெளி

உலகம் அறியாத

கிணற்று தவளையா?

நீ!....

உயிர்த்தெழுகிறார் ராமராஜன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்கும் படம் மேதை. இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மே மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பெண் ஊழியரை நிர்வாண ஸ்கேன் எடுத்த லண்டன் விமான நிலைய அதிகாரி

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க வைக்கப்பட்டுள்ள, பயணிகளை நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே பகுதிக்குள் நுழைந்த பெண் ஊழியர் ஒருவரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அதிகாரி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை நிர்வாணமாகக் காட்டி பரிசோதிக்க உதவும் எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?!


கடந்த சில தினங்களாக ஆந்திர சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது, எடுப்பான முன்னழகு வேண்டி சிலிக்கான் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை பெற்று வருகிறார் இலியானா என்பதுதான்.

குறுகிய விதி

குளிர்ந்த சுவரோடு அவளை வைத்து அழுத்தி முத்தமிட்டான். உடல் விதிர்க்க அவள் முத்தங்களை வாங்கிக்கொண்டேயிருந்தாள். அது நடுநிசி என்று அவள் அறிந்தாலும் அவள் உடலை அவள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல இயலாத படிக்கு காமத்தழுவல் அவளை வலைவலையாகக் கட்டிப்போட்டிருந்தது என்பதை அவள் அறிவாள். அவள் உதடுகள் அர்த்தம் அறியா வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டேயிருந்தன.

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்

லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

பாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்

பாலியல் தொழில் பெண்ணுடலை மையப்படுத்தி உருவானதாகும். எந்தக் காலகட்டத்தில் எவ்வாறான சமூகமுறைமையில் உருவானது என்பது பற்றி எங்கல்ஸ் உட்பட இன்றைய பெண்ணிய மற்றும் சமூகவியல் அறிஞர்கள் பலரும் தத்தம் ஆய்வுகளின் வழியில் கருத்து முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் வந்தடைந்துள்ள பொதுவான முடிவு, பெண்ணை ஆண் அடிமை படுத்தத் தொடங்கியதுடன், பெண்ணின் பாலியல் நடவடிக்கைகளின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வரையறைகள் ஏற்படுத்தப்பட்டதுடனும், ஆணின் பாலியல் நலனை முதன்மைப்படுத்தத் தொடங்கியதனதும் விளைவாகத்தான் சமூகத்தில் பெண்களின் ஒரு சாரார் தமது பாலியல் ஆற்றலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதாகும்.

ஒஸாமா பின் லாடன் மிரட்டல்

இரட்டை கோபுரத்தை தகர்த்த வழக்கின் முக்கிய குற்றவாளியை தூக்கில் போட முடிவு செய்தால், எங்களிடம் பிடிபடும் அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை அளிப்போம் என்று பின்லாடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

பார் டான்ஸர்களின் மறுபக்கம்

Photo: from the web
கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்… மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி…

நான் கல்கி ஆனது எப்படி?

தன்னை உணர்ந்து நிரூபித்து, இந்தச் சமூகத்தின் பார்வையைத் திருத்தியவரின் கதை...

''நாங்கள் தேவதைகள் இல்லை. பிசாசுகளும் இல்லை. உங்கள் எல்லோரையும்போல இதயமும் இரைப்பையும் உள்ள மனிதர்கள். பசி, தூக்கம், கனவு, காதல், காமம், திறமை, தேடல், உழைப்பு, கருணை, காயம், கோபம், துக்கம், பெருமிதம் எல்லாம் எங்களுக்கும் உண்டு. நாங்களும் ஓர் அம்மாவின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம், உங்களைப்போலவே!'' - செறிவான சொற்களில், திருத்தமான தமிழில் பேசுகிறார் கல்கி.

பாலியற் தொழில்; தொழிலா? அல்லது பெண்கள் மீதான வன்முறையா?

வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை / பாலியல் ஆற்றலை இன்னொரு வளர்ந்தவருக்கு காசுக்கு விற்பது பாலியல் தொழிலாகும். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாக பாலியல் வியாபாரத்தைக் கொள்ளலாம்.

'மதமாற்றம் தவறல்ல'

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காதலி போனியை மணக்கும் பிரகாஷ் ராஜ்!

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார்.

வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி

இறந்து ஒரு வருடமான தமது வளர்ப்பு நாயின் ஆன்ம சாந்திக்காக திதி செய்தனர் ஒரு குடும்பத்தினர். இந்த அதிசய நிகழ்வு நாமேஸ்வரத்தில் நடைபெற்றது.

வெள்ளி, 26 மார்ச், 2010

விரும்பிய வீடியோ காட்சிகளை தனியாக பாதுகாக்க உதவும் இணையதளம்

வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணுவோம்.
குறிப்பாக, ஒரு நடனக்காட்சி அல்லது நகைச் சுவைக் காட்சி நம்மைக் கவரலாம்.

நித்தியானந்தனின் கடிதம்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல