சனி, 26 ஜூன், 2010

அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!

இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.

மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பு ம் வழங்கியுள்ளது இலங்கை அரசு.

ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள்.

அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு. இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை.

இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். மேலும் சல்மான் கானும் ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.

வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ரெடி படத்தை எடுக்கிறார். இரண்டு மாத காலம் நடக்கும் நடக்கும் இந்தப் படப்பிடிப்புக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு தருகிறது. அசின்- சல்மான் ஆகிய நட்சத்திரங்களுக்கு மட்டும் உச்சபட்ச இஸட் பிரிவு பாதுகாப்பைத் தர உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே.

இதைத் தொடர்ந்து கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் இவ்விருவரும்.

உண்மையில் இந்தப் படம் மொரீஷியஸில் ஷூட் பண்ணத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல