சனி, 26 ஜூன், 2010

தேவாலய கொள்ளையின் போது பிறப்புச்சான்றிதழை தவறவிட்ட நபர்

தேவாலயமொன்றில் பணத்தை கொள்ளையடித்த நபரொருவர் அங்கு தனது பிறப்புச் சான்றிதழை தவறவிட்டு சென்றதால் பொலிஸாடம் வசமாகச் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

யோர்க் நகரிலுள்ள சென் ஜோன் ஆலயத்தில் கொள்ளையடிக்கச் சென்ற அலன் லாரி டாவெஸ் (Allen Larry Dawes 28 வயது) என்ற மேற்படி நபர், தேவாலயத்திலிருந்த பணத்தைக் கொள்ளையடித்ததுடன் ஆலய மண்டபத்தில் இரவு தங்கி அங்கு ஏழைகளுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவில் ஒரு பகுதியையும் உண்டுள்ளார்.

அலன் லா டாவெஸிற்கு நிரந்தர வதி விட முகவரி இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.இந்நிலையில் அலன் லாரி டாவெஸ் (Allen Larry Dawes), 16,000 அமெரிக்க டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல