ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பெண் ஊழியருக்கு $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு

அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்த பெண் ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதால், அந்த பெண்ணுக்கு நிறுவனம் $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஜனெட் ஓர்லெண்டோ (57) என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார்.

வேலையின் போது நிர்வாகத்தினர் அவரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2006ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். மேலும் இதனால் மனதளவில் பெரும் பாதிப்பு அடைந்ததால், நிறுவனம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனெட்டாவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை இழப்பீடு வழங்க தாமதப்படுத்தி வந்தால் மீண்டும் நீதிமன்றம் தலையிடவே, நிர்வாகம் $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கியது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல