ஞாயிறு, 31 அக்டோபர், 2010

வயோதிபரின் சடலம் மீட்பு

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயல் வெளியில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றுக் காலை 6.00 மணிய ளவில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலை பார்வையிடுவதற்காக சென்ற போது வயல் பக்கமாக துர்நாற்றம் வீசியதை அடுத்து சடலம் ஒன்று அழுகிய நிலையில் காணப்படுவதை அவதானித்துள்ளார். உடனடியாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதை யடுத்து சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக மந்திகை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒருவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல