ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்காக சவூதி அரசரிடம் கருணை காட்டும்படி கோரவுள்ள பிரிட்டிஸ் இளவரசர்!

சவூதி அரேபியாவில் எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்குகு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசரிடம் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர்தர அதிகாரி கூறியதாக இன்றைய இலங்கை "Sunday times" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது மேலும் தெரிவிக்கையில், இளவரசர் இதுவரையில் சவுதி அரச குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும், இச்செய்தி குறித்து மறுக்கவோ, அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாமலுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரியொருவர் "Sunday times" நாளிதழுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

ரிஸானா விவகாரத்தை இளவரசர் சார்ல்ஸ் மிகுந்த அக்கறையுடன் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிக பேச்சாளர் Dominic Williams கூறுகையில், நாம் இதுபற்றி எதுவித கருத்தும் கூறமுடியாத நிலையில் உள்ளோம். நாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத்தான் இங்கு இருக்கின்றோமே தவிர ரோயல் குடும்பத்தின் பிதிநிதியாக இல்லை என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல