புதன், 13 அக்டோபர், 2010

முஷர்ரபின் தலைக்கு சன்மானத் தொகை

அப்பாவி மக்களை கொன்று குவித்த முன்னாள் சர்வாதிகாரி முஷரப் மரண தண்டனைக்கு தகுதியானவர் என்றும், அவர் தலையை கொண்டு வருபவர்களுக்கு 100 கோடி ரூபாயும், ஆயிரம் ஏக்கர் நிலமும் பரிசாக அளிக்கப்படும் என்றும் கொல்லப்பட்ட பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் புக்தியின் மகன் அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் உள்ள மாநிலங்களில் ஒன்று பலுசிஸ்தான். இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல் அதிக அளவில் கிடைக்கிறது. இயற்கை வளம் அதிகமாக இருந்தாலும் தொழில்வளமோ, முன்னேற்றமோ அதிகம் இல்லாமல் பின்தங்கிய பகுதியாக இந்த மாநிலம் இருக்கிறது. இதனால் பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சி கோரி அந்த மாநில மக்கள் போராடி வருகிறார்கள்.

பலுச் மக்களின் தலைவரான நவாப் அக்பர் புக்தி, ‘ஜம்பூரி வாட்டன் கட்சி’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி அதன் சார்பில் பல போராட்டங் களை நடத்தி வந்தார். பலுசிஸ்தான் தேசியத் தலைவராக அவர் இருந்தார்.

குகைக்குள் கொலை

புக்தி நடத்திய போராட்டங்கள் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்புக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி புக்தியை ஒரு குகைக்குள் கொலை செய்யப்பட்டார்.

குவெட்டா நகரில் இருந்து 100 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ள குகையில் இந்த கொலை நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கலவரம் வெடித்தது.

கலவரத்தை அடக்குவதற்காக முஷரப் இராணுவத்தை அனுப்பி அப்பாவிகளை கொன்று குவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல