வியாழன், 7 அக்டோபர், 2010

கம்ப்யூட்டர் ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் இந்தியர் குற்றவாளியாக அறிவிப்பு

கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய பொறியாளர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. தண்டனை விவரம் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 இந்தியாவைச் சேர்ந்தவர் ராஜேந்திரசிங் பாபுபாய் மக்வானா. வயது 36. இவர் மேரிலேண்டில் உள்ள பேன்னி மா கம்ப்யூட்டரில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். கடந்த 2008, அக்டோபர் மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கோபமடைந்த அவர் அக்கம்பெனியின் சர்வர்களில் மோசமான வைரஸ்களை செலுத்தி டேட்டாக்களை அழிக்க முயன்றுள்ளார். இவரது நாசவேலை பற்றி மற்றொரு பொறியாளர் கண்டுபிடித்து நாசவேலையை தடுத்துவிட்டார். இது தொடர்பாக மக்வானா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் மக்வானா குற்றவாளி என்று மேரிலேண்ட் மாவட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்ததுImage Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல