ஜெர்மனியில் வடகிழக்கு மாகாணமான சான்கட்கோர் பகுதியில் உள்ள மிகவும் அழமான ரெகினி நதி . இங்க அரசுக்கு சொந்தமான வால்ட்ஹோப் என்ற சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்து இதில் 2,400 டன் எடை கொண்டு கந்தக அமிலம் (சல்பர் திராவகம்) உள்ளது.
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் உட்பட 3 மூன்று பேர் பயணித்தனர். இக்கப்பலில் ஏற்பட்ட திடீர் கசிவினால் மேலும் கப்பல் நகர்ந்து செல்லமால் நிற்பதை பார்த்த கப்பற்படையினர் விரைந்து வந்த சோதனையிட்டதில் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக முழ்கி வருவது தெரியவந்தது.
உடனடியாக சிறப்பு கப்பல் படை அமைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் நடக்கி்ன்றன. மேலும் கந்தக அமிலம் ஆற்றில் கலந்தால் பெருமளவுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதுடன் பெரும்விளைவுகள் நிச்சயம் என்பதனை அந்நாட்டு பாதுகாப்புப்டையினர் உணர்ந்து கப்பலை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியு்ள்ளனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக