தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற போது தமது காரை வழிமறித்து ஏறிய துப்பாக்கிதாரிகள் இருவர், தன்னை வெளியே தள்ளிவிட்டு அன்னியை கடத்திச் சென்று படுகொலை செய்ததாக ஷரியன் தேவானி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அன்னியைப் போன்ற அழகிய பெண்ணை துப்பாக்கியுடன் இருவர் கடத்திச் செல்கிறார்கள் என்றால், அவர்கள் அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான விடயமல்ல'' எனத் தெரிவித்த அசோக் ஹின்டோசா, “எனது நாய்க்கு கூட இத்தகைய ஒன்று நடைபெற ஒருபோதும் நான் அனுமதித்திருக்கமாட்டேன். அவர் (ஷரியன்) துப்பாக்கிதாரிகளை தாக்கி அன்னியை காப்பாற்ற சிறிதாவது முயற்சித்திருக்கலாம்'' என்று கூறினார்.
துப்பாக்கிதாரிகள் தன்னை கார் ஜன்னலினூடாக வெளியே தள்ளியதாக ஷரியன் தெரிவித்ததாக கூறிய அசோக் ஹின்டோசா, ““சுமார் 6 அடி உயரமான அவர் தன்னை விடவும் சிறிய தோற்றடைய துப்பாக்கிதாரிகள் காரின் சிறிய ஜன்னலூடாக தன்னை வெளியே தள்ளும் வரை என்ன செய்தார்?'' என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், இறப்பதற்கு முன் அன்னி தனது மைத்துனிக்கு அனுப்பி வைத்த கையடக்கத் தொலைபேசி செய்தியில், அழுவதே தனது பொழுதுபோக்காக மாறி விட்டதாக தெரிவித்திருந்தமை குறித்தும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“ஷரியனும் அன்னியும் மகிழ்ச்சிகரமான தம்பதிகளாக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது'' என அவர் மேலும் தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக