சனி, 12 பிப்ரவரி, 2011

இரவில் பனி பெய்வது எதனால் ?

காலையில் மரங்களும் செடி கொடிகளும் பனியில் நனைந்து ஈரமாகக் காணப்படும். இரவில் பொழிந்ததால் மரங்கள் இவ்வாறு நனை ந்திருக்கும். பனி பெய்வது எதனால் என்பது பலருக்குத் தெரியாது.

பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில் இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளிர்ந்து விடுகிறது. காற்றில் உள்ள ஆவி, குளிர்ந்த தரைப் பரப்பில் உள்ள இலைகள், தழைகள், பொருட்கள் ஆகியவற்றின் மீது விடியற்காலையில் படியும் போது, அது உறைந்து பனித் திவலையாக மாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாக மாறி விடுகிறது.

தரையில் இருந்து எழும் ஈர ஆவி, அதைவிட குளிர்ந்த இலையில் படுமானால், அது இறுகி வேறு வகை பனிப் படிவாக இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல