இந்தப் படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்த பின்னரே முதன் முதலாய் அமெரிக்காவில் (1984ல்) Sexual Harassment Policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப்படம் ஆவணப்படுத்துகின்றது. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது, எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியது மாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடித்துவிடுகின்றது.
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்துப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத் தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப் போகின்றார்.
வேலைக்குச் சேரமுன்னர் வழமையான கர்ப்பம் தரித்திருக்கின்றாரா போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல என்ற திமிருடன் ஆண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர்.
சுவர்களில், கழிவறைகளில், கெட்ட, கெட்ட வார்த்தைகள் எழுதுவது பெண்கள் வேலைப்பளுவில் இருக்கும் போது அவர்கள் உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.
ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்க முடியாது என்று ஜோசி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவளின் முறைப்பாட்டைக் கேட்க முன்னரே. ‘நீ என்ன சொல்லப் போகின்றாய்.
எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
மீண்டும் ஜோஸி வேலைக்குப் போனாலும் அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் தொழிற்சங்க நண்பர்களும், கைவிட்டு விடுகின்றனர்.
சக பெண் தொழிலாளர்களும் உன்னால் எங்களுக்குத்தான் பிரச்சனை என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.
ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்று அதிக ஆண்கள் நம்புவதைப் போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால் தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்கின்றார்.
அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்ட போது தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் மகள் உறவு உடைந்து போனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கின்றது.
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்கத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்ற போது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில் முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள் ஜோஸி.
அதற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது. அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலியல் வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார்.
தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாததால் குழந்தையைப் பெற்றுக் கொண்டேன் என்கின்றார் ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்தபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ஜோஸி விரும்பித்தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது.
இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும் தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்து போகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும் ஜோஸியின் தகப்பன், மகள் உறவும் ஜோஸி மகன் உறவும் என்னாவாயிற்று. என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.
விharlizலீ thலீron பிரபலமான ஹொலிவூட் நடிகைளில் ஒருவர் ணிonstலீr படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்ற நமக்குப் போதிக்கப்பட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் கதாபாத்திரமாய் முக்கியமாய் ஒரு கோலிவூட் நடிகை மாறியிருந்தது வியப்பாகியிருந்தது. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பபையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும்.
இந்தப் படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்த பின்னரே முதன் முதலாய் அமெரிக்காவில் (1984ல்) Sexual Harassment Policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது. என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப் பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A Long Journey Begins with Single Step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார். நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது. அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.

நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப்படம் ஆவணப்படுத்துகின்றது. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது, எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியது மாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடித்துவிடுகின்றது.
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்துப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத் தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப் போகின்றார்.
வேலைக்குச் சேரமுன்னர் வழமையான கர்ப்பம் தரித்திருக்கின்றாரா போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல என்ற திமிருடன் ஆண்கள் வேலைத்தளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர்.
சுவர்களில், கழிவறைகளில், கெட்ட, கெட்ட வார்த்தைகள் எழுதுவது பெண்கள் வேலைப்பளுவில் இருக்கும் போது அவர்கள் உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.
ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்க முடியாது என்று ஜோசி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவளின் முறைப்பாட்டைக் கேட்க முன்னரே. ‘நீ என்ன சொல்லப் போகின்றாய்.
எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
மீண்டும் ஜோஸி வேலைக்குப் போனாலும் அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் தொழிற்சங்க நண்பர்களும், கைவிட்டு விடுகின்றனர்.
சக பெண் தொழிலாளர்களும் உன்னால் எங்களுக்குத்தான் பிரச்சனை என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.
ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்று அதிக ஆண்கள் நம்புவதைப் போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால் தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்கின்றார்.
அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்ட போது தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் மகள் உறவு உடைந்து போனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கின்றது.
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்கத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்ற போது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில் முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள் ஜோஸி.
அதற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது. அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலியல் வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார்.
தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாததால் குழந்தையைப் பெற்றுக் கொண்டேன் என்கின்றார் ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்தபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ஜோஸி விரும்பித்தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது.
இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும் தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்து போகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும் ஜோஸியின் தகப்பன், மகள் உறவும் ஜோஸி மகன் உறவும் என்னாவாயிற்று. என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.
விharlizலீ thலீron பிரபலமான ஹொலிவூட் நடிகைளில் ஒருவர் ணிonstலீr படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்ற நமக்குப் போதிக்கப்பட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் கதாபாத்திரமாய் முக்கியமாய் ஒரு கோலிவூட் நடிகை மாறியிருந்தது வியப்பாகியிருந்தது. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பபையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும்.
இந்தப் படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்த பின்னரே முதன் முதலாய் அமெரிக்காவில் (1984ல்) Sexual Harassment Policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது. என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப் பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A Long Journey Begins with Single Step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார். நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது. அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக