பஸ் சாரதியொருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளடங்கலான ஆவணங்களைப் பரிசீலிக்கும் முகமாக, மணிக்கு 30 மைல் வேகத்தில் சென்ற பஸ்ஸொன்றின் முகப்புப் பகுதியை பற்றியவாறு போக்குவரத்து உத்தியோகத்தரொருவர் ஒரு மைல் தூரம் பயணித்த சம்பவம் வியட்னாமில் இடம்பெற்றுள்ளது.
ஹனோய் நகரில் சென்ற மேற்படி பஸ்ஸை போக்குவரத்து உத்தியோகத்தர் நிறுத்தி சாரதியிடம் சட்டபூர்வ ஆவணங்களை காண்பிக்கக் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்த சாரதி பஸ்ஸை செலுத்த ஆரம் பிக்கவும் போக்குவரத்து உத்தியோகத்தர் பஸ்ஸின் முன் பகுதியில் தாவி ஏறி பஸ்ஸை நிறுத்த சாரதிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் சாரதியோ அவரது கோரிக்கைக்கு செவிமடுக்காது பஸ்ஸை படுவேகத்தில் செலுத்தியுள்ளார். நுயகென் மான்ஹ் பான் என்ற மேற்படி போக்குவரத்து உத்தியோகத்தர் பஸ்ஸில் துணிகரமாக தொங்கியபடி தனது கடமையே கண்ணாக இருக்கும் காட்சி வீதியில் சென்றவர்களால் வீடியோ படமாக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸை துரத்திச் சென்ற பொலிஸார், பஸ்ஸை தடுத்து நிறுத்தி பஸ் சாரதியான புங் ஹொங் புவோங்கை கைது செய்துள்ளனர்.
பொதுத்துறை உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைக்காது அவர்களுக்கு எதிராக செயற் பட்டமைக்காக புவோங் ஆகக்கூடியது 3 வருட சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
புவோங், உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்த வீதி விபத்துக்காக 4 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து 2010 ஆம் ஆண்டு விடுதலையானமை குறிப் பிடத்தக்கது.

ஹனோய் நகரில் சென்ற மேற்படி பஸ்ஸை போக்குவரத்து உத்தியோகத்தர் நிறுத்தி சாரதியிடம் சட்டபூர்வ ஆவணங்களை காண்பிக்கக் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்த சாரதி பஸ்ஸை செலுத்த ஆரம் பிக்கவும் போக்குவரத்து உத்தியோகத்தர் பஸ்ஸின் முன் பகுதியில் தாவி ஏறி பஸ்ஸை நிறுத்த சாரதிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் சாரதியோ அவரது கோரிக்கைக்கு செவிமடுக்காது பஸ்ஸை படுவேகத்தில் செலுத்தியுள்ளார். நுயகென் மான்ஹ் பான் என்ற மேற்படி போக்குவரத்து உத்தியோகத்தர் பஸ்ஸில் துணிகரமாக தொங்கியபடி தனது கடமையே கண்ணாக இருக்கும் காட்சி வீதியில் சென்றவர்களால் வீடியோ படமாக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸை துரத்திச் சென்ற பொலிஸார், பஸ்ஸை தடுத்து நிறுத்தி பஸ் சாரதியான புங் ஹொங் புவோங்கை கைது செய்துள்ளனர்.
பொதுத்துறை உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைக்காது அவர்களுக்கு எதிராக செயற் பட்டமைக்காக புவோங் ஆகக்கூடியது 3 வருட சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
புவோங், உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்த வீதி விபத்துக்காக 4 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து 2010 ஆம் ஆண்டு விடுதலையானமை குறிப் பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக