வெள்ளி, 14 டிசம்பர், 2012

புதுவகை பெண்ணுறையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

எச்.ஐ.வி. தொற்று மற்றும் கருதரித்தல் ஆகியவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கக்கூடிய விசேட பெண்ணுறையொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த பெண்ணுறையானது கரையக்கூடியது என்பதுடன் இரசாயனப் பொருட்களை விடுவிக்கவும் கூடியது.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இப் பெண்ணுறையானது நுண்ணிய நாரிழைகளின் மூலம் இலக்ட்ரோ ஸ்பின்னிங் எனும் முறைமையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை மிக மெல்லிய துணி போன்ற நாரிழைகளாக உருவாக்கி இப்பெண்ணுறை தயாரிக்கப்படுகின்றது.

இப்பெண்ணுறையானது உபயோகப்படுத்தப்பட்டதன் பின்னர் சில நிமிடங்களிலோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோ கரைந்து விடும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இவை விந்து உட்புகுவதை தடைசெய்வது மட்டுமன்றி, அதே நேரத்தில் சக்தி மிக்க எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்துகளை விடுவிக்கும் திறன் படைத்தது

இதனை உருவாக்குவதற்கென அவ் ஆராய்ச்சியாளர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையான பெண்ணுறைகளை உருவாக்கியுள்ளனர். அதிலொன்று உடனே பெண்ணின் உடலுக்குள் கரைந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது. மற்றையது சில நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கருத்தடை மாத்திரைக்கு மாற்றீடாகவும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்தாகவும் செயற்படக்கூடியது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல