தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதை தவறவிடக்கூடாது என உலகத் தலைவர்கள் மும்முரமாகவுள்ள நிலையில், செக் குடியரசின் பிரதமர் ஜிரி ருஸனொக்கோ அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்குகிறார்.
பாராளுமன்றத்தில் ருஸனொக், பாதுகாப்பு அமைச்சர் விளஸ்ரிமில் பிசெக்குடன் கலந்துரையாடலில் ஈடுபடும் மேற்படி காட்சி செக் பொது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து பிரதமர் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.
அந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மிலொஸ் ஸெமன் காலில் ஏற்பட்ட காயமொன்றால் மண்டேலாவின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்கு தென் ஆபிரிக்கா செல்ல முடியாமை குறித்து ருஸ்னொக் விபரிக்கையில், ‘நான் அங்கு (தென் ஆபிரிக்கா) செல்ல வேண்டியுள்ளதையிட்டு அச்சமாகவுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
இதன்போது தென் ஆபிரிக்க பயணம் மிக நீண்டதாகவுள்ளதாகவும், அச்சமயம் தான் பகல் மற்றும் இரவு போசன விருந்துபசாரங்களில் கலந்துகொள்ள ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கிற்கு செல்வது எரிச்சலை ஏற்படுத்தும் விடயமாக ருஸ்னொக் விமர்சித்தமை குறித்து கடும் கண்டனம் எழுந்ததால் அவர் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
‘நான் எனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். நான் மண்டேலாவின் மரணம் தொடர்பாக அத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்திருக்கக் கூடாது’ எனத் தெரிவித்த அவர், டிசம்பர் மாதம் முழுவதும் தான் எதிர்கொண்டுள்ள அதிக பணிகளுக்கு மத்தியில் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு நேரத்தை ஒதுக்கீடு செய்வது சிரமமாகவுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கில் செக் குடியரசை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் யார் கலந்து கொள்வது என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக தெரி வித்தார்.

பாராளுமன்றத்தில் ருஸனொக், பாதுகாப்பு அமைச்சர் விளஸ்ரிமில் பிசெக்குடன் கலந்துரையாடலில் ஈடுபடும் மேற்படி காட்சி செக் பொது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து பிரதமர் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.
அந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மிலொஸ் ஸெமன் காலில் ஏற்பட்ட காயமொன்றால் மண்டேலாவின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்கு தென் ஆபிரிக்கா செல்ல முடியாமை குறித்து ருஸ்னொக் விபரிக்கையில், ‘நான் அங்கு (தென் ஆபிரிக்கா) செல்ல வேண்டியுள்ளதையிட்டு அச்சமாகவுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
இதன்போது தென் ஆபிரிக்க பயணம் மிக நீண்டதாகவுள்ளதாகவும், அச்சமயம் தான் பகல் மற்றும் இரவு போசன விருந்துபசாரங்களில் கலந்துகொள்ள ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கிற்கு செல்வது எரிச்சலை ஏற்படுத்தும் விடயமாக ருஸ்னொக் விமர்சித்தமை குறித்து கடும் கண்டனம் எழுந்ததால் அவர் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
‘நான் எனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். நான் மண்டேலாவின் மரணம் தொடர்பாக அத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்திருக்கக் கூடாது’ எனத் தெரிவித்த அவர், டிசம்பர் மாதம் முழுவதும் தான் எதிர்கொண்டுள்ள அதிக பணிகளுக்கு மத்தியில் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு நேரத்தை ஒதுக்கீடு செய்வது சிரமமாகவுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கில் செக் குடியரசை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் யார் கலந்து கொள்வது என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக தெரி வித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக